31 Jul 2012

துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - தொடர்


யுத்தம் ஆரம்பித்த இடம் ஹாரி பாட்டர் வலைபூ. முதல் பகுதி படிக்காதவர்கள் படித்துவிட்டு மாறுபட்ட  இக்கதையை தொடருங்கள்.




துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் 2 - தொடர்


  

ழக்கத்தை விட சுருதி கொஞ்சம் கம்மியான குரலில் வயிற்றிற்குள் இருந்து வெளிவந்த கார்பன் டை ஆக்ஸைடை ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்காத இசையாக மாற்றிக் கொண்டே அலுவலகத்தினுள் நுழைந்தான் வசந்த்.

"ப்போ விசிலடிக்கிறத நிப்பாட்ட போறியா இல்லியா?  " கணேஷின் சிந்தனை தடைபட்டதற்கான எரிச்சல் அவன் வார்த்தைகளில் தெரிந்தது.
  
"தே தம்புசெட்டி தெருவில், அதே இடத்தில இருக்கும் லாயர் கணேஷ் அலுவகத்தில் விசலடிக்கக் கூடாது அப்படின்னு அம்பேத்கர் எதுவும் எழுதி வைச்சதா எனக்கு நியாபகம் இல்லையே பாஸ்" .

தில் எதுவும் சொல்லாமல் அன்றைய தினசரியில் ஆழ்ந்தான் கணேஷ். வசந்த் தன் கையிலிருந்த கார் சாவிக்கு தூக்கு தண்டனையை வழங்கிவிட்டு கணேஷிடம் 

"பாஸ் ஒன்னு அந்த பியட்ட மாத்துங்க இல்ல என்ன மாத்துங்க, உங்ககிட்ட இருந்து எங்க இரண்டு பேரில் யாருக்கு விமோசனம் கிடைத்தாலும் சந்தோசம் தான்"

"உனக்கெல்லாம் விமோசனமே கிடையாதாடா? "

"தைத் தான் பாஸ் நானும் உங்ககிட்ட கேக்கிறேன் எனக்கெல்லாம் விமோசனமே கிடையாதா !" கணேஷ் முறைத்தான் சரி  பியட்ட மாத்த வேண்டாம் உங்க டப்பா மொபைல் அந்த டபிள் ஒன் டபிள் ஜீரோவையாவது மாத்தக் கூடாதா?" குரலில் அலுத்துக் கொண்டான். 

"லகமே ஆண்ட்ராயிட் ஆப்பிள்ன்னு சுத்திகிட்டு இருக்கு, நீங்க மட்டும் மாறாமலேயே இருக்கீங்க". கணேஷ் லேசாக சிரித்துவிட்டு குளியலறை நோக்கி சென்றான். இந்நேரத்தில் கணேஷ் போன் ரிங் ஆக, அதை வசந்த் எடுக்க, பேசியவரின் வார்த்தைகளைக் கேட்டு தன் முகத்தை மாற்ற, சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்படவும் கணேஷ் பாத்ரூம் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது. இந்நேரத்தில் குறுந்தகவல் வந்ததன் அடையாளமாய் "பீப்" ஒலித்து அமைதியாகியது. அதனை எடுத்துப் படித்த வசந்தின் முகம் கணேஷ் அணைத்த பாத்ரூம் பல்பை விட பிரகாசமாய் எறிந்தது. 

"பாஸ் உங்க மொபைல கோடி ரூபா கொடுத்தா கூட வித்ராதீங்க. இது போன் இல்ல பொக்கிஷம். இப்போ பேசினது யாரு தெரியுமா!   அரசியலையும் ஸ்டைலையும் சென்சஷேன் ஆக்கினவரு , நேத்து தப்பிப் பிழைச்சவரு" 

சந்த் ஆர்வத்தோடு சொல்ல கணேஷோ " வசந்தா அவர மாதிரி பேசறவங்க ஜப்பான் ல கூட ஆயிரம் பேரு இருக்காங்க டா" குரலில் கணேஷும் சிறிது ரஜினி ஆனான்.

"ணேஷா இந்த வசந்த் ஒன்னும் அவ்ளோ சீக்கிரமா யார்கிட்டயும் ஏமாற மாட்டான்." அவனும் ரஜினியானான், கலைந்த தன் தலைக்குள் கையைவிட்டு மேலும் கலைத்தான். அதிலும் ரஜினியே. 

"ரி போன் பண்ணினது அவரு தான்னு எப்படி நம்புறது"  

"ப்படிக் கேளுங்க, தலைவர் போன் போட்டு உங்க கூட பேசனும், பார்க்கனும்னு சொன்னாரு, நான் கூட எதிர்க்கட்சிகாரன் ஏவல்னு சீரியஸா எடுத்துக்கல, அவர போய் நாம பார்க்க வேண்டிய இடம் எல்லாம் சொல்லி முடிச்சதும் அவரே போன கட் பண்ணிட்டாரு, ஆனா..."          

"னாவுக்கு அப்புறம் என்ன நடந்ததது அத சொல்லு" கணேஷ் வசந்தை வேகப்படுதினான்.

"வர் போன் கட் பண்ணினதும் எனக்கு ஒரு மெசேஜ் ரிசீவ் ஆச்சு, அதான் என் நம்பிக்கைக்கு காரணமே"

"ன்ன மெசேஜ் "

"ன்னிக்கு எல்லா நியூஸ் பேப்பர்லையும் தலைப்பு செய்தி என்ன? " 

" WAR BEGINS யுத்தம் ஆரம்பம் " 

ணேஷ் சொல்லி முடிக்க, தன் கையிலிருந்த மொபைலை நீட்டினான் வசந்த்.

*******************************************************

சந்த் நீட்டிய மொபைலை வாங்கிப் படித்துவிட்டு 

"ல்லீங்க கணேஷ் இவங்கள சும்மா விடப் போறது இல்ல.  WAR BEGINSன்னு சொல்றாங்க யுத்தம் ஆரம்பம்னு சொல்றாங்க, யார் யார் கூட யுத்தம் பண்ணப் போறாங்க... என் கூட யுத்தம் செய்யல கணேஷ்... தமிழக மக்கள்... தமிழக மக்கள் கூட யுத்தம் செய்ய போறாங்க. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா" பலமான தன் அதிரும் சிரிப்பின் பின் அமைதியானார் முதல்வர் ரஜினிகாந்த்.

"ரியணையில் அமர்ந்த உங்களைப் பார்த்து சந்தோசப்படவா இல்ல இப்படி அடிபட்டு இருக்கத பாத்து வருத்தப்படவான்னே தெரியலை சார்" தன் வருத்தமானதொனியில் சொல்லிய கணேஷ் முதல்வரின் பதிலை எதிர்பார்த்து அவர் கண்களில் தன் பார்வையைப் பதித்தான். பார்க்க முடியவில்லை. கண்களில் அத்தனை தீர்க்கம்.


"நேற்று நடந்த குண்டுவெடிப்பு சமந்தமா பேசுறதுக்காகத் தான் உங்கள வரச் சொன்னேன் கணேஷ். ஸ்டோரி டிஸ்கசன் அப்போ சுஜாதா சார் பெரும்பாலும் உங்களைப் பத்தி தான் பேசுவாரு! கிரேட் மேன்.... ஐ மிஸ் ஹிம் லாட்..."

"வீ  டூ சார்..." வசந்த் சொல்லிவிட்டு சோகமாக கணேசைப் பார்த்தான், கணேஷாலும் எதவும் பேசமுடியவில்லை.

"ஷெங்கர் சார் கிட்ட தான் உங்க நம்பர் வாங்கினேன். நிறைய விஷயங்கள் பேசனும்"

"பேசலாம் சார்" இது வசந்த்.

" வசந்த் மறந்தே போய்ட்டேன். மொதல்ல அந்த ஜோக் சொல்லுங்க இன்னிக்கு தெரிஞ்சே ஆகணும் " அடிபட்ட வேதனையிலும் உற்சாகமானார் தலைவர்.

"மெக்சிகோ நாட்டுல" வசந்தும் ஆர்வமுடன் ஆரம்பிக்க. " சார் நீங்க தனியா இருக்கும் போது சில முக்கியமான விஷயங்கள் பேசலாம்னு தான் வந்தோம்.அதுக்கு சரியான நேரம் இதை விட்டா வேறு இருக்காது. வசந்த்தை இடைமறித்த கணேஷ் அவனை கண்களால் எரித்துவிட்டு அமைதியானான்.

"மா கணேஷ் என்னோட மனசுலயும் பல குழப்பங்கள் இருக்கு. இந்த முதலமைச்சர் பதவி அதுக்குள்ள இவ்ளோ பெரிய வலிய உண்டு பண்ணும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல." 

பெருமூச்சு ஒன்றை விட்டு மேலும் தொடர்ந்தார். " கோவலன் மதுரைக்கு வரும் போது கோட்டை வாசல்ல இருந்த கொடி  உள்ளே வராதே உன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்ற மாதிரி அசைந்ததாம்.  இந்தக் கோட்டைக்கு நான் வரும் போது எந்தக் கொடியுமே அப்படி அசையலையே கணேஷ். கணேஷ் அது என்ன சிலப்பதிகாரப் பாடல்னு தெரியுமா?".

"போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 
வாரால் என்பது போல் மறித்துக் கைகாட்ட

அழகிய தமிழில் சொல்லி முடித்தான் வசந்த்.

"சந்த் உங்களுக்கு இலக்கியம் கூட தெரியுமா?" தன் சிறிய விழிகளை அகல விரித்து ஆச்சரியக்குறியைக் காட்டினார் ரஜினி.

"வனுக்கு தொல்காப்பியத்திலிருந்து 'தோல்'காப்பியம் வரை எல்லாமே தெரியும் சார் நாகரிகம் தவிர " பொய்க் கோபத்துடன் வசந்தை முறைக்க , அவனும் பதிலுக்கு முறைத்தான்.

"ஹா ஹா ஹா" சிரித்துவிட்டு ஆழ்ந்த சிந்தனயில் ஆழ்ந்தார். " ஏதோ முக்கியமான விசயம்ன்னு சொன்னீங்களே சொல்லுங்க கணேஷ்"

ணேஷ் ஆரம்பித்தான் " சார் நேத்து ராத்திரி விழா நடந்த அரங்கதிற்குள்ள வர முடியல. அவ்ளோ கூட்டம். வெளியில இருக்ற திரையிலாவது உங்களைப் பார்த்துவிட்டுத் தான் வருவேன்னு வசந்த் அடம் புடிச்சான். கார்ல இருந்து விழா நிகழ்வுகளப்  பார்த்துட்டே இருந்தோம்" இமைக்காமல் சம்பவங்களை துரத்திக் கொண்டிருந்தார் ரஜினி.

"ப்போ திரையில் தெரிஞ்ச விஜயகாந்த் தொண்டன் கையில எதையோ கொடுத்ததையும் அத அந்த தொண்டன்  உங்க கையில கொடுத்ததையும் பார்த்தோம்.அவரு மேடைய விட்டு அகன்ற கொஞ்ச நேரத்துல பயங்கர சப்தம். எங்களுக்கு முன்னாடி நின்ன கார் புயல் வேகத்தில புறப்பட்டது.  என்ன நடந்த்ததுன்னு மூளை மனசுகிட்ட சொல்றதுக்குள்ள வசந்த் அந்தக் கார பாலோ பண்ண ஆரம்பிச்சான். ஏன்னு கேட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மேடையில பார்த்த விஜயகாந்த் இப்போ அந்த கார்ல போறாரு. சாம் திங் ராங். வீ ஹாவ் டூ பாலோ ஹிம் பாஸ்னு சொன்னான்."

"சந்த் சில விசயங்கள்ல கோடு போட்டாம்ன்னா  ரோடு போடாம விடமாட்டான்" நிறுத்திவிட்டு கணேஷ் வசந்தைப் பெருமையோடு பார்த்தான். இப்போது வசந்த் தொடர்ந்தான். 

"தாம்பரம் டூ வேளச்சேரி போற பாதையில இருக்கிற காஞ்சு போன காட்டுக்குள்ள கார் போனது. நாங்களும் போனோம். கார் போக வழியில்லை. நடந்து போய் துரத்தினோம். கட்டி முடிக்காம இருந்த அப்பார்ட்மென்ட் கிரௌண்ட் ப்ளோர் ல அங்கங்க துப்பாக்கி குண்டுகள் சிதறி இருந்தது. ஹால் நடுவில ஒருத்தர கட்டிபோட்டு இருந்தாங்க. விஜயகாந்த் போய் கட்டவிழ்துவிட்டாறு, ஏதோ வாக்குவாதம் பண்ணினாங்க. கொஞ்ச நேரத்துல்ல அந்த இரண்டு பெரும் ஒளிஞ்சு இருந்து வேடிக்கைப் பார்த்த எங்கள கவனிக்காம போனாங்க. அப்போ தான் கட்டுபடிருந்தவர் முகத்த தெளிவாப் பார்த்தோம் அது அர்ஜுனனு."     

"யோசிக்கக் கூட நேரம் இல்லாம அவங்களைப் பின் தொடர்ந்தோம். வந்த கார் புறப்பட்டது. எங்க கார் பின்னாடி இருந்து இன்னொரு உருவம் வெளிப்பட்டு அதுவும் அந்த கார்ல ஏறியது. வானத்தில திடீர்ன்னு மின்னல் வெட்ட சரத்குமார் தான் அந்த திடீர் மனிதர்னு கண்டுபிடிச்சோம். வேகவேகமா கார ஸ்டார்ட் பண்ணி துரத்தும் போது தான் தெரிஞ்சது, எங்க கார் பெட்ரோல் டாங்க்ல ஓட்டை போட்டு லீக் பண்ண வச்சு எங்கள தடுத்து நிப்பாட்டினது  சரத்குமார் தான்னு." இது தான் தலைவா நடந்தது. வசந்த் நிறுத்தினான்.

  ஆச்சரியத்திலிருந்து அதிர்ச்சிக்கு தள்ளப்பட்ட ரஜினி கணேஷிடம் கேட்டார் " விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பன் அவன் பண்ணியிருக்க வாய்ப்பே இல்ல மேலும் அவன் கூட வார அர்ஜுன் பத்தி எனக்கு நல்ல தெரியும். அர்ஜுன், அமெரிக்கன் ஜெமேஸ் கூட எல்லாம் டிடெக்டிவ்வா வொர்க் பண்ணியிருக்கான். சரத்குமார் என் கட்சி தான். நீங்க சொல்றது எதையுமே என்னால நம்பவே முடியல கணேஷ் என்ன நடக்குது கணேஷ். ஒன்னுமே புரியல"

சந்த் விளக்கினான். " ரெண்டு சாத்தியக் கூறுகள் இருக்கு சார். விஜயகாந்த், அர்ஜுன் சரத்குமார் மூணு பேருமே கெட்டவங்க. குண்டு வெடிப்பு நடக்ரதுல அர்ஜுன்க்கு கடைசி நேரத்துல உடன்பாடு இல்லாம போயிருக்கலாம், அதனால் மூணு பேருக்குள்ளையும் சண்டை வந்த்ருக்கலாம், அர்ஜுன கட்டிபோட்டுட்டு மத்த ரெண்டு பெரும் சேர்ந்து காரியத்த முடிச்சிருக்கலாம். காரியம் முடிஞ்சதும் மூணு பெரும் சமாதானம் ஆகியிருக்கலாம்." வசந்த் சிறிது இடைவெளிவிட்டு கணேஷைப் பார்த்தான்.

"ப்போ இன்னொரு சாத்தியக்கூறு என்ன கணேஷ்?" இடைவெளியை நிரப்பினார் ரஜினி. 

"வங்க மூணு பேருமே நல்லவங்க. இந்தத் திட்டம் கடைசி நேரத்துல இவங்க மூணு பெருகும் தெரிய வந்திருக்கு, தீவிரவாதிகள் கூட அர்ஜுனும் சரத்குமாரும் சண்டை போடுற நேரத்துல விஜயகாந்த் உங்கள எச்சரிக்கை பண்ண வந்திருக்கலாம். உங்களை எச்சரிச்சதும் அவங்கள காப்பாத்த கிளம்பிருக்காரு. இந்த நேரத்துல அர்ஜுன் அந்த உண்மையான தீவிரவாதிகளால கட்டுபட்டிருப்பரு , சரத்குமார் அவங்கள ஓடஓட துரத்தி அடிசிருப்பாறு, விஜயகாந்த் அர்ஜுன் கட்டவிழ்த்து காப்பாதிருப்பாறு" 

"வாவ். சுஜாதா சார் சொன்னதுல கொஞ்சம் கூட பிழையில்ல கணேஷ். மார்வலஸ் என்னால நம்பவே முடியல." 

"பட்" ரஜினி பாஸ் செய்தார்.

"இந்த பட் க்கு வசந்த் பதில் சொல்லுவான் சார்"

"கேப்டன் அர்ஜுன் சரத் இந்த மூணு பெரும் நல்லவங்களோ கெட்டவங்களோ இந்த மூணு பேரு விசயத்துல நாலாவது அஞ்சாவதா இந்த கணேஷ் வசந்த் நுழையிறது அவங்களுக்கு பிடிக்கமா போயிருக்கலாம். பெட்ரோல் சிந்த வச்சு அவங்க தப்பியிருக்கலாம். " 

தைக் கேட்டதும் ரஜினி முகத்தில் ஈ ஆடவில்லை.  கவலையின் ரேகைகள் படர்ந்தன. இந்நேரத்தில் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளே நுழைய சம்பிரதாயமாக பேசிவிட்டு கணேசும் வசந்தும் விடைபெறும் பொழுது ரஜினியும் ராஜேந்திரனும் ஒரே குரலில் சொன்னார்கள் " கணேஷ் வசந்த் வீ நீட் யு ஆல்வேஸ். "   


ந்நேரத்தில் அஜீத் விஜய் மொபைலில் குறுந்தகவல் வந்ததன் அடையாளமாய் "பீப்" ஒலிக்க எடுத்துப் படித்ததும் பரபரப்பானார்கள்... அந்த குறுந்தகவல் சொல்லிய தகவல்..

" WAR BEGINS யுத்தம் ஆரம்பம் "  .....

அடுத்து ஆரம்பமாகும் இடம் 

நண்பன் பக்கம் அப்துல் பாசீத் வலைப்பூ ... படிக்கத் தவறாதீர்கள்.... 

பகுதி 4 - ராஜ் -சினிமா சினிமா-

பகுதி 5 - சின்னமலை - தல போல வருமா-

பகுதி 6 - SCENECREATOR -யாவரும் நலம்-

பகுதி 7 - ஹாலிவுட் ரசிகன்- ஹாலிவூட் பக்கம்-

பகுதி 8 - KUMARAN - எண்ணங்களும் வண்ணங்களும்-

பகுதி 9- ராஜா - என் ராஜ பாட்டை -

பகுதி 10 - JZ - JZ சினிமா -

பகுதி 11 - கணேஷ் - மின்னல் வரிகள் -

பகுதி 12 - ஸ்ரீராம் - எங்கள் பிளாக் -

பகுதி 13 - அருண் - அவிழ்மடல்

இணைய விரும்பும் நண்பர்கள் இணையலாம்..


பகுதி பதிமூன்றைத் தொடர்பவர்கள் பற்றிய அறிவிப்பு நண்பன் ஹாரியின் மூலம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்  



44 comments:

  1. ithu thaan tamizhkam!

    enna sir seyya!

    karpanaiyilakooda nallavanga aala maattaangalaa!?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சீனி

      Delete
  2. கலக்கறீங்க சீனு சார்!
    ///இமைக்காமல் சம்பவங்களை துரத்திக் கொண்டிருந்தார் ரஜினி.//
    உண்மையாகவே சுஜாதா டச்

    ReplyDelete
    Replies
    1. கலகுறேன்னு சொல்லி உர்ச்சகபடுதின உங்களுக்கு மிக்க நன்றி ... சுஜாதா புத்தகங்கள் படிகட்ட எனக்கு எழுத்து மேல ஆர்வம் வந்த்ருக்கது சார் . அதான் சும்மா ஒரு முயற்சி உங்களுக்குப் பிடிச்சதுல எனக்கு மகிழ்ச்சி

      Delete
  3. விறுவிறுப்பு குறையாமல் ஒரு பகிர்வு....

    தொடரட்டும்... :)

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு மனம் நிறை நன்றிகள் சார்

      Delete
  4. கதையை அருமையாக நகர்த்திச்சென்றுள்ளீர்கள். இப்படி பிரமாதமாக எழுதி என்னை சிக்கலில் மாட்டிவிட்டீர்களே? அப்ப முதல் சொதப்பல் நான் தானா?

    அவ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நாங்க பாக்கத் தான போறோம்... பாஸ் நாங்கல்லாம் மேம்போக்கப் பூசி இருக்கோம் நீங்க தான் பில்டிங்க எடுத்து நிறுத்தப் போறீங்க... கடைசி இரண்டு பதிவுகள்ல உங்களுக்கு பதில் சொல்ல முடியல அவ்ளோ பெரிய அப்பாடாகரான்னு கேக்காதீங்க. ரொம்ப வேளை, நா வேள பாக்ற அளவுக்கு கூட என் இன்டர்நெட் வேள செய்ய மாட்டேங்குது.... படுத்து படுத்து படுத்தி எடுக்குது... இத சரி பண்றதுக்கு உங்க பிளாக்கர் நண்பன் பக்கத்துல எதாவது பதிவு போட்ட புண்ணியமா போகும்.... ஜென்மத்துக்கும் உங்கள மறக்க மாட்டேன் ( சிரிக்க மட்டும் )

      என் பதிவுகளில் கேள்வி கேட்டவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாவிட்டாலும் நீங்கள் அளித்த பதிலால் மிகவும் மகிழ்ந்தேன்... என்ன தவம் செய்தேன் உம் போன்ற பிளாக்கர் நண்பன் கிடைபதர்க்கு ( பார்ரா டைமிங்ல ரைமிங்கு)....

      Delete
    2. //அவ்ளோ பெரிய அப்பாடாகரான்னு கேக்காதீங்க//

      அடுத்த பகுதியின் க்ளூ இது. :D

      நான் சுஜாதாவின் ஒரு சில கதைகளை மட்டுமே படித்துள்ளேன். ராஜேஷ்குமாரின் நாவல்கள் தான் அதிகம் படித்துள்ளேன். உங்கள் கதையில் தேர்ந்த எழுத்தாளரின் நடை தெரிகிறது.

      Delete
    3. அப்போ அடுத்த ராஜேஷ்குமார் என்ற பட்டத்திற்கு தயாராகுங்கள்.... ஆவலுடன் உள்ளோம்

      Delete
    4. ஹா..ஹா...ஹா.. அப்படியெல்லாம் இல்லை நண்பா.. நான் நாவல் போன்று எழுதவில்லை. திரைப்படக் கதையாகத் தான் எழுதுகிறேன். :D

      Delete
    5. நாங்கள் புத்தகம் என்ற நிலையை நோக்கி சென்றால் நீங்கள் திரைப்படம் என்ற அடுத்த நிலைக்கு காய் நகர்த்துகிறீர்கள்... இது தான் புதியவர்களுக்கும் அனுபவசாளிகளுக்கும் உள்ள வித்தியாசமோ ? ஹா ஹா ஹா

      Delete
    6. என்ன தம்பி ஹாரிய விட்டுட்டு ஒரு பஞ்சாயத்து.. கலக்கிட்ட சீனு.. பாசித் பாய் we are waitting for u

      Delete
    7. ஏதோ என்னால முடிஞ்சதை எழுதிருக்கேன். வந்து பாருங்க.. :D

      Delete
  5. அதுசரி... போகப் போக கதைய வளர்த்தறது பின்னால வர்றவ்ங்களுக்கு கஷ்டமா மண்டைகாய வெச்சுடுவீங்க போலருக்கே... என் டர்ன் வர்றதுக்குள்ள யோசிச்சு யோசிச்சு தலை சோ தலை மாதிரி ஆயிடும்னு நினைக்கிறேன். ஆனாலும் சுவாரஸ்யமா கதைய நகத்தின உங்களுக்கு பாராட்டும் கைகுலுக்கலும்.

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரே நீங்கள் சோ போல் மாறினாலும் எனக்கு மகிழ்ச்சியே காரணம் அவர் எழுத்துக்களும் எனக்குப் பிடிக்கும்... அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரைக்கும் மனுஷன் என்னம்மா அரசியல் பேசுறாரு கலாயக்கிராறு....

      உங்கள் கைகுலுக்கல் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... உற்சாகமான தங்கள் கருத்துக்களுக்கு நன்றி வாத்தியாரே

      Delete
  6. சூப்பருங்கோ!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த கதை டூப்பரா இருக்கும். மறக்காம வந்துடுங்க... :D

      Delete
    2. மிக்க நன்றிங்கோ

      அண்ணே பாஷீத் அண்ணே பார்க்கத் தானே போகிறேன் நீங்கள் ஆரம்பிக்கப் போகும் யுத்தத்தை

      Delete
  7. விறு விறுப்பாக போகுது சீனு சார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா ... இது என்ன கேள்வி உங்களுக்கான பாகம் தயாராக உள்ளது... ஹாரியிடம் கேட்டு சொல்கிறேன் நீங்கள் எந்தப் பகுதியை எழுதப் போகிறீர்கள் என்று

      Delete
  8. சீனு நானும் இனைய ஆவலாக இருக்கின்றேன்! சேர்ப்பீர்களா?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆவல் மகிழ்வாய் உள்ளது நண்பா ...

      Delete
  9. விறுவிறுப்பாக செல்கிறது...
    கலக்குறீங்க...

    நன்றி.
    (த.ம. 8)


    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தனபாலன் சார் ... உங்கள் பதிவை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டேன்

      Delete
  10. நண்பா ஆரம்பத்துல அதாவது 2 பகுதி ஸ்டார்ட்டிங் ரொம்ப போரா இருந்துச்சு பின் படிக்க படிக்க இன்ரஸ்டிங் ஆகிடுச்சு......தொடர்ந்தும் வெயிட்டிங்

    ReplyDelete
    Replies
    1. போர் அடிக்கிற மாதிரி இருந்தாலும் பிற்பாடு வேகமான புறப்பாடு சொல்லி என்னை ஆறுதல் படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி நண்பா.... சிட்டுகுருவி கவிதையில் இருந்து மீண்டும் சமுதாயப் பதிவுகளுக்கு தாவி விட்டது போல் தோன்றுகிறது

      Delete
  11. செம விறுவிறுப்பா கொண்டு போயிருக்கீங்க. வஸந்த்தின் சேட்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவரை கொஞ்சம் அடக்கி வாசிக்க வெச்சிருக்கீங்களோன்னு தோணிச்சு. பட், நல்ல ஸ்பீடு இருக்கு கதைல. மத்தவங்கள எழுதறதையும் தொடர்நது கவனிக்கறேன் நான்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னது முழுக்க முழுக்க சரி தான் நிரஞ்சனா ... வசந்த் கலாய்க்க ஒரு பொண்ணு கூட சிக்கல... அதை நினைச்சா எனக்கும் கொஞ்சம் வருத்தமா தான் இருந்துச்சு .... என்ன பண்றது வசந்துக்கு உயிர் குடுக்க நான் சுஜாதா இல்லியே... வசந்த் சேட்டைகள் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா "வசந்த் வசந்த்" இந்தப் புத்தகம் படிங்க வசந்த் உங்க மனசுல எங்கையோ போயிருவாரு.....

      கதையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி தோழி

      Delete
  12. விறுவிறுப்பான தொடர்ச்சி.வாழ்த்துக்கள் சொந்தமே.....!தொடர்க சொந்தங்களே.சந்திப்போம்.

    மயங்காதிரு என் மனமே..!!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறை நன்றி தோழி ... நிச்சயம் வருகிறேன்

      Delete
  13. லேசா வயித்தைக் கலக்கறா மாதிரி இருக்கு... நான் கணேஷுக்கு அப்புறமா.... அடுத்து எப்போ எங்கே எதைப் படிக்கணும்னு தயவு செய்து எனக்குத் தனியாகச் சொல்லி விடவும்!எங்கே எழுதணும்? இங்கேயேவா அல்லது எங்கள் ப்ளாக்கிலா?

    ReplyDelete
    Replies
    1. சும்மா காமெடி கீமடி பண்ணாதீங்க ஸ்ரீராம் சார்... உங்களை உங்க எழுத்துக்களை பற்றி எனக்கு நல்லாத் தெரியும் bsrinivasanmca@gmail.com இது என்னோட மெயில் id தயவு செய்து எனக்கு ஒரு மெயில் தட்டுங்கள் உங்கள் FOLLOW UP க்கு நான் பொறுப்பு...

      நீங்கள் எழுத வேண்டியது "உங்கள் பிளாக்கில்" தான் (ஹா ஹா ஹா ) அடிக்க வராதீங்க நீங்கள் எழுத வேண்டியது "எங்கள் பிளக்கில்" தான் ( ஐயோ இப்பவும் குழப்புதே) நீங்கள் எழுத வேண்டியது நீங்கள் வைத்திருக்கும் எங்கள் பிளாக்கில் தான்....

      Delete
  14. சும்மா சொல்லல சார். நிஜமாலுமே கதையை மிகப் பிரமாதமாக நகர்த்தியிருக்கீங்க. முதல் வரியிலேயே உங்க எழுத்தின் திறன் புரியுது. உண்மையிலுமே ஒரு ப்ரொஃபஷனல் எழுத்தாளரின் டச் இதில் இருக்கு (நீங்க எழுத்தாளரான்னு தெரியாது).

    //கையிலிருந்த கார் சாவிக்கு தூக்கு தண்டனையை வழங்கிவிட்டு//

    இந்த மாதிரியெல்லாம் வாசிச்சதும் எழுதுவது பற்றி கொஞ்சம் தயக்கம் வருது. இவ்வளவு அழகா கொண்டுபோகும் கதையை மொக்கை போட்டு கெடுக்காமல் பேசாம அப்பீட்டாகலாமான்னு யோசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் உற்சாகமான பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பா....
      // (நீங்க எழுத்தாளரான்னு தெரியாது).// சார் நான் எழுத்தாளன் எல்லாம் கிடையாது... இப்படி வேணும்னா சொல்லலாம் உங்களைப் போன்ற எழுத்தாளர்களுடன் பழகும் எழுத்தாளன்....

      நாங்களே எழுத தயங்காத அப்போ நீங்கல்லாம் துணிஞ்சி எழுதலாம் சார்...

      Delete
    2. நம்ம எல்லோரும் சீனுவை கடைசியாய் எழுத சொல்லணும் என்றே நினைத்து கொண்டு இருந்தேன் அதற்குள் எழுதிவிட்டார்....இவர் உண்மையில் எழுத்தாளர் தான் எனக்கு தெரியும்.....எல்லோரையும் நல்லா மாட்டிவிட்ட சீனு

      Delete
  15. ஆஹா கணேஷ் வசந்த் வந்து விட்டார்களா? பாசித் வேறு ராஜேஷ் குமாரைக் குறிப்பிடுகிறார். அப்போ விவேக், ரூபலாவும் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. நீங்க விரும்பினா பரத்-சுசி. நரேன்-வைஜ்.. வேற யார் வேணும்னாலும் என் பகுதில கொண்டு வந்துடறேன் ஸ்ரீநி.

      Delete
  16. அருமையாய் எழுதி இருக்கீங்க சீனு நீங்க தான் பிறவி கதை எழுதுபவரே கொஞ்சம் லேட் ஆச்சு படிக்க.....நான் என்ன பண்ண போறேனோ

    ReplyDelete
  17. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றிச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.நேரமிருந்தால் பாருங்கள்

    ReplyDelete
  18. அருமையான தொடர் சீனு வாழ்த்துக்கள்.அவ்வப்போது நியாபகம் வரும் இந்த சீனு பையன் எப்படி இந்த கதைய எப்படி கொண்டு போக போறானோனு..எங்கேயும் குறைவில்லை.தொடரட்டும்...தொடர்கிறோம்

    ReplyDelete
  19. ம்ம்ம்... அருமையாப் போகுது. ஆரம்பமே இப்படி இருக்கே? நா பதினேழாவதாம். என்ன பண்ணப் போறேனோ தெரியல. பார்க்கலாம். அதுவரைக்கும் பேசாம வாசிச்சிகிட்டிருப்போம். ஆனா ஒன்னு. இப்போதைக்கு நான் தான் கடைசி ஆளா இருக்கேன். எனக்குப் பின்னாடி யாரவது சேர்ந்துருங்கப்பா..... கை விட்டுடாதீங்க.... சிறப்பாக தொடர வாழ்த்துக்கள். அப்படியே எல்லாரும் நம்ம தளத்துக்கு ஒரு தடவை வந்துட்டுப் போங்களேன்?

    ReplyDelete
  20. ம்ம்ம்... அருமையாப் போகுது. ஆரம்பமே இப்படி இருக்கே? நா பதினேழாவதாம். என்ன பண்ணப் போறேனோ தெரியல. பார்க்கலாம். அதுவரைக்கும் பேசாம வாசிச்சிகிட்டிருப்போம். ஆனா ஒன்னு. இப்போதைக்கு நான் தான் கடைசி ஆளா இருக்கேன். எனக்குப் பின்னாடி யாரவது சேர்ந்துருங்கப்பா..... கை விட்டுடாதீங்க.... சிறப்பாக தொடர வாழ்த்துக்கள். அப்படியே எல்லாரும் நம்ம தளத்துக்கு ஒரு தடவை வந்துட்டுப் போங்களேன்?

    http://newsigaram.blogspot.com/

    ReplyDelete
  21. ஆச்சரியத்திலிருந்து அதிர்ச்சிக்கு தள்ளப்பட்ட ரஜினி சுவாரஸ்யமான கதை !

    ReplyDelete