30 Oct 2015

Crow's egg - Translated version

A special thanks to Senthil Anna, a senior manager from my company who has taken my chinna kaka muttai article to international level by publishing it in english :-) . It makes me feel so happy that this is the first article written by me which has been translated in another language. For making a history in my life, special thanks to Senthil Anna once again :-)  

Here the story begins... 

Parth had called up.. and he had also recounted an incident.. It was raining heavily yesterday at Medavakkam.. and as he was going to Velachery, this incident had happened..He has this habit of giving the lift to anybody and everybody even if he has urgent work.. be it day or night.. Rain or Sun...He would always stop.. It was around 11 am .. There was this little boy, who must have been on his way to school, who put his hand out for a lift.. He looked like this boy who acted in a Tamil movie (movie summary at the end of the blog) 

As usual, Parth started talking to him...

"Which school are you studying "

"Tharamani Government School, Anna.."

"Tharamani ?? and you are going so late.. Won't they scold you "

"Tenth std model exams are going on, so they asked us to come only in the afternoon"

Which Standard are you studying ? 

9th Anna..

"OK.. Why are you not going by bus ? "

"No bus pass Anna "

"Why, Dont they give you a free bus pass in the school " Parth has always been this curious guy.. He always strikes up a conversation with everybody he gives a lift.. and that is how he struck this conversation..

'Yes naa, They do give.. But I don't have money 

"hey, if it is free ,then why do you need money "

Due to the heavy rains, there was water everywhere.. the traffic was at best ,standstill.. Slow moving of vehicles.. and Parth was able to see the boy on the rear-view mirror as he was talking..

Yes Anna, it is free, but to take a photo and then print them, they asked 100 rupees.. asked amma and she scolded me and said she did not have money..

"They why did you not ask Appa " 

"No Appa anna.. He died"

"OOH. What happened ? When ? "

"Even before I was born, he fell ill and died thereafter " 

'Now Parth was feeling miserable for having started this conversation.. It was not a good day for him.. Since morning, he has had only problems .. Bike would not start.. and with so much of effort he started and that is when he realised, there was not much of petrol left and it was in reserve.. Month end so no money in the pocket....He continued..

"SO do you ask lift everyday ?"

'Yes naa.. I am coming from Sithalambakkam 

It is even interior than where you asked me for the lift.. So you take 2 lifts then..

Yes Naa. Nobody goes directly to velachery from there.. So I start early from home ..If you come tomorrow, I can come with you Anna..

"Till last year, what did you do for the Bus pass "

"Last year, Granny gave money.. She died recently..

'OOOH..'

'Yea ANNA.. She used to cook for me..one day while cooking, she fell down.. We took an auto and admitted her in Govt Hospital near central.. They gave her an injection.. She gave one deep breath and died Anna..

"OOH..'

'Anna, my house is inside sithalampakkam and the ambulance guys refused to come inside naa..that is why we took an auto.. I feel so sad for granny annnaa 

'So what rank do you get "

'No Rank Anna.. Only grade.. I get B grade 

'Why da.. You dont A Rank 

'All girls get the A rank anna.. That is why 

'They study hard.. so they get.. Why dont you study too 

'Half of the time, I get delayed. So the watchman sends me away.. What to do Anna .. the teacher says, for my level, i can only get B ...

"So what does your mother do "

"She works in a pickle factory Anna "

'Where "

'Koyambedu (Far from where they live) . Everyday she goes anna 

"ooh How much does she earn ".. 

'4000 rs anna '

'own house, or rented house

'Rented only Anna. 1000 rs rent.. Balance for our expenses..

'Do you have a cell phone at home...

I dont have money for Bus pass.. How can we get a cell phone anna ..

After some deep thoughts, Parth asked him... 

So if i come to your school and get you the bus pass, will they let me 

'You cant come inside anna.. They wont let you " 

'If i give you money, what guarantee that you will not spend it on anything else 

'Anna.. I wont do that anna.. If my Mom comes to know, she would beat me black and blue 

'and if she asks you , how did you get the money, what would you tell her "

'I will tell her that one Anna gave me a lift and he also gave me money 

'Can i trust and give you money 

'Anna, if you have doubt, dont give me naa..

'How do I trust you then'

'I will stand in the same place tomo where you picked me up and i will show you the pass Anna then you see 

'Can you get it in one day..'


' With photo, it will come Anna "

Parth saw an ATM and went inside... He had Rs 267 balance.. He withdrew Rs 200.. 100 for petrol and 100 , he would give to the boy.. 

'So how will you go from Velachery '

'The school is near Tharamani station Anna.. So I go by train "

'And the money for the train " 

' I dont take ticket Naa.. we are students.. the TTR told me that students dont need to take tickets 

'Which TTR 

'Velachery Anna ..Once, I took a ticket.. The TTR caught me.. and he told me not to take ticket anymore.. From then onwards, I dont take Anna 

''What if some other TTR catches you "

'Will take him to Velachery TTR naa' 

'If the Velachery TTR changes, what will you do ?'

'Then no other way Anna, I have to take a ticket " 

Just then they reached Velachery Railway station... Parth dropped him and gave him 100 rs.. and told him 

"Study well ok.. only if you study, can you buy a Bike like this Ok ?"

"Will surely study Anna.. "

That is when Parth saw the boy fully.. No slippers.. with all the mud covered legs due to rains...half trousers with two holes stitched.. and the first and the last buttons on his shirt were replaced by safety pins...and the reddish hair had not seen oil for a long time

"Give me your no Anna "

'Give me your notebook.. English or Tamizh medium but why do you need my no ? "

'Tamizh anna' Will call you after I get the bus pass Anna 

'How will you call "

'Coin phone Anna.. Thanks Anna .. So he left with a happy face. and he turned around and told Parth.. 
"You carry on Anna.. I will study very hard..."


Parth while recounting the incident, told me that he thought for a long time about whether to give money or not to that boy.. Small boy.. But he was very clear you know.. for him, it was a lot of money...

'They why did you give him '

'I could not bear it.. We watch such thrid rate movies and spend 300 to 400 Rs and this is for a good reason..he is suffering everyday..Dont you remember, how many times, we would have asked lift when we were young.. nobody would give us.. and when we did not have money, we used to walk 3 kms to school.. in case he wastes that money, imagine what we would do after watching a horrible film.. Nothing.. That's all .. 

'hmm so do you think he will call ?'

'hmm ... Lets see, if he calls, I would call him here and get him some diwali clothes " 

The end 


Kakkai Muttai : Tamil movie..
We had a tamil movie recently called as crow's egg and this movie is based on 2 small boys, who are really poor.. but they desire to eat a Pizza. What happens in their journey to eat the pizza is taken in a very funny but emotional way... 


In the movie, as they don't get Chicken eggs, they steal Crow's eggs and eat them.. 

29 Oct 2015

சின்ன காக்கா முட்டை

நேற்றைக்கு சாரதி அழைத்திருந்தான். கூடவே ஒரு சம்பவத்தையும் கூறினான். மேடவாக்கத்தில் நேற்றைக்கு சரியான மழை. நண்பரைப் பார்ப்பதற்காக வேளச்சேரி வரைக்கும் கிளம்பியபோது தான் சம்பவம் நடந்திருக்கிறது. அவனிடம் ஒரு வழக்கம் இருக்கிறது. தல போற காரியமா இருந்தாலும் யாராவது லிப்ட்டுன்னு கேட்டா வண்டிய நிப்பாட்டி எவ்வித மறுப்பும் இல்லாமல் ஏத்திப்பான். அது நல்ல வெயிலா இருந்தாலும் சரி நடுராத்திரியா இருந்தாலும் சரி. நேற்றைக்கு காலை மணி பதினொன்று இருக்கும். பள்ளிக்கூடம் செல்லும் அவசரத்தில் இருந்த மாணவன் ஒருவன் கையை நீட்ட லிப்ட் கொடுத்திருக்கிறான். சின்ன காக்கா முட்ட மாதிரியே இருந்தாண்டா அவன். வழக்கம் போல அவன்ட்ட பேச ஆரம்பிச்சேன். 

'எந்த ஸ்கூல்ல தம்பி படிக்கிற'

'தரமணி கவர்மென்ட் ஸ்கூல்ன்னா' 

'தரமணியா? இந்நேரத்துக்கு போற, ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?'

'டென்த்க்கு மாடல் எக்ஸாம் நடக்குது, மதியம் தான் வர சொல்லிகிறாங்கோ' 

'என்ன படிக்கிற'

'நெயின்த்ன்னா'

'ஓ சரி சரி, ஆமா ஏன் பஸ்ல போகல'

'பஸ் பாஸ் இல்லனா' 

'ஏண்டா, பள்ளிகூடத்தில ஃப்ரியாத்தான தாரங்க' இங்கிருந்து தான் சம்பவமே ஆரம்பிக்கிறது. சாரதி எப்போதுமே இப்படித்தான் லிப்ட் கொடுப்பதோடு அவர்களின் ஜாதகம் மொதற்கொண்டு விசாரிப்பது அவன் வழக்கம். அப்படித்தான் இந்த சிறுவனிடமும் பேச ஆரம்பித்திருக்கிறான். 

'கொடுப்பாங்கனா. ஆனா வாங்கத்துக்கு தான் காசு இல்லியே' 

'ஃப்ரீ தானடா. அப்புறம் எதுக்கு காசு' 



மழை பெய்து சாலை முழுவதும் சேரும் சகதியுமாக இருந்ததால் மேடவாக்கத்தில் இருந்து வேளச்ச்செரி வரையிலும் செம ட்ராபிக். வாகனம் அனைத்தும் மெல்ல ஊர்ந்து செல்ல, இவ்வளவு பெரிய ட்ராபிக்கிற்கு மத்தியிலும் கண்ணாடியில் தெரிந்த அந்த சிறுவனைப் பார்த்துக் கொண்டே பேசியிருக்கிறான் சாரதி.  

'ஃப்ரீதான்னா. ஆனா போட்டோ எடுக்க, பிரின்ட் போடன்னு நூறு ரூவா கேட்டாங்கோ. எங்க அம்மாட்ட கேட்டேன் துட்டு இல்ல போடான்னு அடிக்கிதுன்னா'.  

'அப்போ அப்பாட்ட கேட்க்க வேண்டியதுதானடா'

'அப்பா இல்லனா. இறந்துட்டாரு' 

'ஓ. என்னாச்சுடா. எப்போ'

'நா பொறக்கதுக்கு முன்னடியேனா. திடிர்ன்னு சொகம் இல்லாம போயிருக்குது. அப்படியே போயிட்டாரு'. ஏண்டா பையன்ட்ட பேச்சு கொடுத்தோம்ன்னு ஆகியிருக்கு சாரதிக்கு. காலைல எந்திச்சதில இருந்தே சாரதிக்கு நிறைய பிரச்சனை. வீட்டவிட்டு வெளியில வந்தா வண்டி ஸ்டார்ட் ஆகலை, வண்டியோடு சண்டை போட்டு கஷ்டப்பட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணினா, பெட்ரோல் இல்ல. ரிசர்வ். மாசக்கடைசி. பர்ஸ்ல சுத்தமா காசு இல்ல.   

'சரி டெய்லி லிப்ட் கேட்டா போற'  

'ஆமான்னா, ஆமா நீ சித்தாலப்பாக்கத்தில இருந்தா வாற'

'இல்லடா எனக்கு மேடவாக்கம். உனக்கு சித்தாலப்பாக்கமா?'

'ஆமான்னா, நீ வந்தா நாளைக்கும் உன்கூடவே வந்திருவேன்'

'ஏண்டா அது உள்ள தள்ளி இருக்கு. ரெண்டு லிப்ட் கேப்பியா'

'ஆமான்னா, யாரும் வேளச்சேரி வர போறதில்ல. அதான் சீக்கிரமே வீட்டில இருந்தே கிளம்பிருவேன்' 

'போன வருஷம் வரைக்கும் பாஸ்க்கு என்ன செஞ்ச'

'போனவருசம் ஆயா காசு கொடுத்திச்சு, இந்த வருஷம் எறந்து போச்சே'

'ஓ..'

'ஆமான்னா, எனக்குதான் சமையல் செஞ்சுட்டு இருந்தது. செய்யசொல திடிர்ன்னு தொப்புன்னு விழுந்தது. ஆட்டோ புடிச்சு சென்ட்ரல் ஆண்ட இருக்கில்ல ஆஸ்பத்திரி அங்க கொண்டு போனோம். ஒரு ஊசி குத்தினாங்க. நல்ல இழுத்து மூச்சு உட்டது. அப்டியே போயிருச்சு' 

'ஓ..'

'இன்னோவ் சித்தாலப்பாக்கம் உள்ள கீதுனா வீடு. ஆம்புலன்ஸ் வரமாட்டேன்னு சொல்லிட்டான். ஆட்டோ புடிச்சு இட்ன்னு போனோம். பாவம்ன்னா ஆயா"

'என்ன ரேங்க் வாங்குற'

'ரேங்க் இல்லனா. கிரேடு. பி கிரேடு'

'ஏண்டா ஏ வாங்க மாட்டியா'

'பொண்ணுங்க வாங்கிருதாங்கோ. அதான்'

'அவங்க படிக்காங்க. வாங்குறாங்க. நீயும் படி'

'பாதிநாள் லேட் ஆயிருது. வாட்சிமேன் தெர்த்திவிடுறான். ன்னா பண்றது. நீ படிக்கிற படிப்புக்கு இவ்ளோதாண்டா வரும்ன்னு வாத்தியார் சொன்னாரு'

'அம்மா என்ன பண்றாங்கடா'

'ஊறுகா கம்பெனிக்கு போதுனா' 

'மேடவாக்கத்திலையா?'

'இல்லனா கோயம்பேடு. டெய்லி போயின்னு வருது'

'ஓ.. எவ்ளோ சம்பளம்'

'நாலாயிரம்ன்னா'

'வாடகை வீடா, சொந்த வீடா'

'வாடகை வீடுன்னா. ஆயிரம் ரூபா வாடகை, மீதிதான் செலவுக்கு'

'சரி வீட்ல செல்போன் இருக்கா. இன்னோவ் பாஸ் எடுக்கவே துட்டு இல்ல. நீ வேற' 

மிகபெரிய யோசனைக்குப் பின் சாரதி கேட்டிருக்கிறான். 'சரி நான் உன் ஸ்கூல்க்கு வந்து பாஸ் எடுக்க துட்டு தாரேன். வாங்கிப்பாங்களா'

'நீ உள்ள வர முடியாதுனா. வுட மாட்டாங்கோ'

'சரி உன்ட்ட கொடுத்தா நீ பாஸ் எடுக்காம செலவு செஞ்சுட்டா' 

'ன்னோவ் அப்டி செய்ய மாட்டேன்னா. அம்மாக்கு தெரிஞ்சா டவுசர் கழரும்'

'துட்டு ஏதுடான்னு கேட்டா ன்னா சொல்வ'

'ஒரு அண்ணா கூட லிப்ட் அடிச்சேன். அவரு கொடுத்தாரு சொல்லுவேன்' 

'உன்ன நம்பி கொடுக்கலாமாடா' 

'இன்னோவ் சந்தேகம்ன்னா வேணாம்ன்னா' 

'உன்ன எப்டி நம்புறது'

'இன்னிக்கு நா நின்ன இடத்தில நாளைக்கும் நிக்குறேன். உண்ட பாஸ காமிக்கிறேன். நீ பாரு' 

'ஒரே நாள்ல வந்த்ருமா'

'போட்டோ எடுத்து பிரின்ட் போட்டா வந்திர போகுது'  

இப்படி பேசிக்கொண்டே வந்ததில் பள்ளிகரணை வந்துவிட்டது. ஏடிஎம் உள்ளே சென்று கார்டை சொருகி இருக்கிறான் சாரதி. சரியாக 267 ரூபாய் இருந்திருக்கிறது. அதில் இருநூறு ரூபாயை எடுத்து நூறு ரூபாய் பெட்ரோலுக்கும் இன்னொரு நூறு அவனுக்குமாக பாக்கெட்டில் வைத்திருக்கிறான். 

'வேளச்சேரில உன்ன விட்டா எப்படிடா போவ'

'தரமணி ஸ்டேசனாண்டதான் ஸ்கூலு. ட்ரெயின் ஏறி போயிப்பேன்'

'ட்ரெயினுக்கு காசு'

'நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்னா. நாங்க ஸ்டுடன்ஸ். ஸ்டுடன்ஸ் டிக்கெட் எடுக்க வேணாம்னு டிடிஆர் சொன்னாரு'.  

'எந்த டிடிஆர் டா'

'ஒருவாட்டி டிக்கெட் எடுத்தேன். டிடிஆர் புச்சாரு. நீ எல்லாம் டிக்கெட் எடுக்க தேவ இல்லடான்னு சொன்னாரு. அன்னில இருந்து எடுக்கது இல்லனா' 

'வேற டிடிஆர் புடிச்சா என்னடா செய்வ'

'வேளச்சேரி டிடிஆர் ஆண்ட இட்னு போவேன்னா' 

'வேளச்சேரி டிடிஆர் மாறிட்டாருன்னா?'

'வேறவயி டிக்கெட் எடுத்துதான் ஆவணும்'

அவனோடு பேசிக்கொண்டே வந்ததில் வேளச்சேரி ரயில்நிலையமும் வந்துவிட, அவனை இறக்கிவிட்டு கையில் நூறு ரூபாயைக் கொடுத்திருக்கிறான் சாரதி. கொடுத்துவிட்டு 'ஒழுங்கா படிக்கணும். படிச்சா இந்த மாதிரி வண்டி வாங்க முடியும். என்ன?'

'படிக்கிறேன்ன்னா'. அப்போதுதான் அவனை ஒழுங்காக கவனித்திருக்கிறான் சாரதி, காலில் செருப்பில்லாமல் சக்தி அப்பியிருக்க. முழங்கால் வரைக்குமே அவன் அணிந்திருந்த பேண்டில் இரண்டு இடத்தில் தையல் போடபட்டிருந்தது. சட்டையில் முதல் பட்டனுக்கும் கடைசி பட்டனுக்கும் பதிலாக ஊக்கு மாட்டபட்டிருக்கிறது. தலையில் என்னை வைத்து பலநாள் ஆனா செம்பட்டை முடி. 

'சரி உன் நோட்டு கொடு. தமிழ் மீடியமா இங்கிலீஷ்மீடியமா'

'தமிழண்ணா' 

'இதுல என நம்பர் எழுதி இருக்கேன். இன்னாத்துக்கு'

'பாஸ் வாங்கிட்டு கூப்புடுவேன்னா'

'எப்படி கூப்பிடுவ'   

'காயின் போன்ல இருந்து கூப்பிடுவேன்னா. தேங்க்ஸ்ன்னா' என்றபடி சந்தோசமாக கிளம்பி இருக்கிறான் அந்த சிறுவன். கிளம்பியவன் 'நீ போன்னா நான் நல்லா படிக்கிறேன்' என்று வழி அனுப்பியும் வைத்திருக்கிறான். 

இந்த சம்பவத்தை என்னிடம் கூறிவிட்டு 'அவனுக்கு காசு கொடுக்கலாமா வேணாம்ன்னு ரொம்ப யோசிச்சேன்டா. சின்ன பையன். தடுமாறுற வயசு. ஆனா ரொம்ப தெளிவா இருக்கான். அவனைப் பொறுத்த வரைக்கும் அது பெரிய துட்டு'

'அப்புறம் ஏன்டா கொடுத்த'

'மனசு கேக்கலாடா. மொக்க படத்துக்கு போயிட்டு முன்னூறு நானுறுன்னு செலவு பண்றோம். ஒரு நல்ல விசயத்துக்குதான. டெய்லி எவ்ளோ கஷ்டப்படுறான். ஒருகாலத்தில நாமளும் அந்த இடத்தில இருந்து வந்தவங்க தான. எத்தனைபேருகிட்ட எத்தனவாட்டி லிப்ட் கேட்டிருப்போம். ஒவ்வொருத்தனும் லிப்ட் கொடுக்காம போறப்ப நமக்கு எப்படி இருக்கும். கையில காசு இல்லாதப்போ நீயும் நானும் மூணு கிலோமீட்டர் நடந்தே ஸ்கூல்க்கு போயிருக்கோம். ஒருவேள அவன் அதை வேஸ்ட் ஆக்குனா! நாம பார்த்த படம் மொக்கைன்னா என்ன செய்வோம். ஒன்னும் செய்ய மாட்டோம்தான. அவ்ளோதான். விடுடா'

'ம்ம்ம். அவன் கூப்பிடுவான்னு நினைக்கிற'

'ம்ம்ம்.... பார்க்கலாம். ஒருவேள அவன் கூப்பிட்டா அவன மேடவாக்கத்துக்கு வர சொல்லி தீபாவளி ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கணும்டா'.   

23 Oct 2015

இருள் பரவும்...!

அன்புள்ள ஆவி வணக்கம், 

கன்னியாகுமரி, தென்காசி சுற்றுப்பயணத்தில் இருக்கின்றீர்கள் என நினைக்கிறன். பயணம் சிறக்க வாழத்துகள். வரும் வாரம் நீங்கள் சென்னை வருகிறீர்கள் என்று கேள்விபட்டேன் மகிழ்ச்சி. அதற்குள் என்ன அவசரம் இந்த கடிதம் எழுத என்பதை அன்புள்ள என்ற வார்த்தையை படிக்கும் போதே மனதிற்குள் நினைத்து, என்ன பதில் எழுத வேண்டும் என்பதையும் இந்நேரம் உங்கள் மனதிற்குள் எழுத ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குமுன்! அதற்குமுன் இந்தக் கடிதத்தையும் ஒருமுறை படித்துவிட்டீர்கள் என்றால் என் முன்முடிவு பொய் ஆகிவிடும். மேலும் நேற்று நடந்த அந்த திகில் அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொண்டது போல் ஆகிவிடும். 

உங்களுக்கு நினைவிருக்கும். நம்முடைய மஞ்சோலை மற்றும் கோவா பயணத்தின் போது 'சீனு நீங்க நாய பத்தி ரொம்ப அதிகமா எழுதிட்டீங்க, இனி வேண்டாமே' என்று கூறியது. ஒவ்வொரு முறை நாயைப் பார்க்கும்போதும் மற்ற எல்லா சிந்தனைகளையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து நிற்கிறது இந்த அறிவுரை. 




உங்களுக்கே தெரியும் நான் நன்பகலில் பயணித்து நள்ளிரவில் வீடு வந்து சேர்பவன் என்று. அன்றாட நிகழ்வில் நீங்கள் பலரையும் கடக்கும் போது, பல சமயங்களில் நான் நாய்களை மட்டுமே கடந்து வருபவன். கூடிய விரைவில் நான் எழுதப்போகும் தெருநாய்களைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு ஐநாவில் இருந்தோ சீலேவில் இருந்தோ அல்லது உகாண்டாவில் இருந்தோ பரிசு கிடைத்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை என்பது தான் என் நிலைப்பாடு. இருந்தும் நாய்களைப் பற்றிய நமக்கான விவாதத்தில் ஒரு திருப்புமுனை வரும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை இவ்வளவு அவசர அவசரமாக எழுதுவேன் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் நேற்றைய இரவு வரைக்கும் கூட.  

நேற்றைக்கு வீடு திரும்பும் போது மணி நள்ளிரவு இரண்டு. மழை வரும் போல் இருந்தாலும் நன்றாக பனி விழுந்து கொண்டிருந்தது. சரவணாவை பெரும்பாக்கத்தில் விட்டுவிட்டு அடுத்த சந்து திரும்பினால் அதிர்ச்சி. பேரதிர்ச்சி என்று சொன்னால் உண்மைக்கு மிக அருகில் என்று பொருள். அந்த சந்தில் ஒரு நாய் இல்லை ஒரு நாய்ப் பண்ணையே நின்று கொண்டிருந்தது. ஏற்கனவே குளிரில் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நாய்கள் வேறு. இவைகளைக் கடக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்று வேறு ஒரு சாலையைப் பிடித்து மேடவாக்கம் பிரதான சாலையை அடையலாம். ஆனால் அது கொஞ்சம் சுத்து. சரி ஆனது ஆகட்டும் என்று எண்ணத்தில் என்னிடம் இல்லாத தைரியத்தை வரவழைத்து வண்டியை செலுத்தினேன். உள்ளுக்குள் பரவ ஆரம்பித்த அந்த சிலிர்ப்பு மட்டும் அடங்கவே இல்லை. 

லேசாக ஒரு உறுமல். அப்படியே அந்த உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக பரவி கண்ணுக்கெட்டாத தொலைவில் இருந்தும் கேட்கத் தொடங்கியது.  இருள் பரவும் என்பார்களே அப்படித்தான் இருளோடு இருளாக நாய்களின் உறுமலும் பரவத் தொடங்கியது. லேசாக மின்னல் வெட்டியது. தெருவிளக்குகளில் பாதி எரியவில்லை. மீதி எரிந்தும் பிரயோஜனமாக இல்லை. எத்தனையோ முறை இதே சந்தில் அலறியடித்து ஓடி பின் என்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட கதையை உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். வருத்தத்தோடு கேட்பது போல் மூஞ்சை வைத்திருந்தாலும் உள்ளுக்குள் சிரித்து சந்தோசப்பட்டிருபீர்கள். பரவாயில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிசி மூட்டைகளைப் போல ஏகப்பட்ட நாய்கள். இந்த நள்ளிரவிலும் சில நாய்கள் வாக்கிங் சென்று கொண்டிருக்க சில நாய்கள் காதல் புரிந்து கொண்டிருந்தன. நன்றாக கவனித்துவிட்டேன் பனிக்காலங்கள் வந்தால் இந்த நாய்கள் சுறுசுறுப்பாகி விடுகின்றன. (குஜால்டியாகி விடுகின்றன என்று தான் எழுத நினைத்தேன்.) ஒவ்வொரு நாய்களைக் கடக்கும் போதும் தங்கள் தலையை தூக்கி 'இது எங்க ஏரியா' என்ற தொணியில் ஒரு பார்வை பார்த்தன. லேசாக உறுமவும் செய்தன. அந்தக் கூட்டத்திலேயே நோஞ்சானாக கருதப்படும் நாய் கூட என்னைப் பார்த்து உறுமியது என்ற சோகத்தைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வந்த கோவத்துக்கு அங்கேயே அடிச்சிருப்பேன். ஆனா கடிச்சிருச்சுனா? 

இப்போதெல்லாம் நாய்களின் உறுமலுக்கும் மிரட்டலுக்கும் பழகிவிட்டேன். என்னவென்னாலும், நாய் கடிக்கவே வந்தாலும் வண்டியின் வேகத்தை மட்டும் கூட்டி அவற்றின் கோபத்தை அதிகரிக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன். வேகம் விவேகம் என்பார்கள். பத்து கிமீ வேகம் தான் இங்கே விவேகம். கண்ணாடியை திருப்பி நாய்களைப் பார்க்கும் படி வசதி செய்து கொண்டேன். ஒவ்வொரு நாயைக் கடக்கும் போதும் அவை கொலைவெறியோடு முறைப்பது தெரிந்தது. ஒரு கிமீ நீளமுள்ள அந்த தெருவில் குறைந்தது ஐம்பது நாய்கள் என்றால் என் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 

அந்த தெருவில் ஒரு மெக்கானிக் ஷெட் இருக்கிறது. பழைய கார்களை உடைத்து பாகம்பிரிப்பது தான் அவர்களுடைய வேலை. தினமும் மூன்றில் இருந்து நான்கு கார்கள் அந்த ஷெட்டின் வெளியே இருக்கும். அதில் இரண்டு கடந்த சில மாதங்களாக அங்கேயேதான் நிற்கின்றன. ஒன்று இண்டிகா, மற்றொன்று ஆம்னி. இரண்டிலுமே முன் பக்க கண்ணாடி உடைந்து ஒரு சிறிய துளை இருக்கிறது. பெயின்ட் உதிர்ந்து சிலந்தி வலை பின்னி. சில சமயங்களில் அதன் உள்ளிருந்து கூட நாய்கள் வெளிப்படும். என் கவலை அது இல்லை. 

சமீப காலமாகவே அந்த கார்கள் என்னை அதிகம் பயமுறுத்துகின்றன. ஒரு திகில் படத்தில் வரும் வில்லனைப் போல் என்னைப் பார்த்து சிரிக்கின்றன. உடைந்த அந்த கண்ணாடிகளின் வழியே எப்போது வேண்டுமானாலும் ஒரு பேய் வெளிப்படலாம் என்ற உணர்வுடனேயே அவற்றை நெருங்குகிறேன். எப்போது வேண்டுமானாலும் கதவுகளைத் திறந்துகொண்டு என் முன் நிற்ககூடும் என்ற உணர்வை தடுக்க முடியவில்லை. அது ஏன் இந்த பேய்களுக்கு பழைய வீடுகளும் கார்களுமே பிடித்துப்போகின்றன. 

பேய்களை நான் நம்புகிறேனா என்ற வாதத்திற்கு செல்ல விரும்பவில்லை. நான் ஏன் பேய்களை நம்புகிறேன் என்ற கேள்விக்கும் பதிலும் தெரியவில்லை. பள்ளிகூட நாட்களில் இருந்தே பேய்கதைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். நள்ளிரவில் ஆட்டோவில் வந்த பேய். கிணத்தில் குளிக்கும் போது கழுத்தை நெரித்த பேய். புளியமரத்து பேய், பக்கத்து வீட்டு குழந்தையை பிடித்துகொண்ட பேய் என்று எத்தனையோ கதைகளை எத்தனையோ பேர் கூறக்கேட்டும் அலுத்ததே இல்லை. கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டோ, கருவேல மரத்தின் அடியில் அமர்ந்தோ நாங்கள் பேசிய பாதி கதைகள் பேய்களைப் பற்றிதான். அப்போது கேட்ட கதைகள் அனைத்தும் இப்போது நிஜமாகிவிட்டால். வெள்ளை உடை அணிந்த மோகினி ஒன்று மல்லிகைப்பூ வாசத்தோடு முன்னால் வந்து நின்றால்...! எனக்குத் தெரியும் இதற்கு முந்தைய வரியை மீண்டும் ஒருமுறை படித்து சிரிப்பீர்கள் என்று. ஆனால் என் கவலையே வேறு. ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். 

ஒருவேளை வாக்கிங் வந்த பேய் ஜாலியாக என்னுள்ளே செட்டில் ஆகிவிட்டால் என்னையே நம்பியிருக்கும் இந்த சமுதாயத்தின் நிலைமை என்னாவது. அப்போதும் 'வர வர நீ பேயாட்டம் எழுதுற' என்றுதான் கூறுவீர்களே ஒழிய ஏன் பேயாட்டம் எழுதுறேன் என்பதை குறித்து சிந்திக்க மாட்டீர்கள். சிரிக்காதீர்கள். நான் புலம்புவது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா?

இப்போதெல்லாம் நாய்களை விடவும் அந்த கார்களையே அதிகம் கவனிக்கிறேன். அதிகமாகவும் யோசிக்கிறேன். அதே யோசனையில் மேடவாக்கம் வரையிலும் வந்துவிட்டேன். யாருமற்ற சாலையில் இருந்து சிவகாமி நகர் நோக்கி திரும்பியபோது தான் அந்த பொம்மையைப் பார்த்தேன். நல்ல பெரிய பொம்மை. நடுரோட்டில் தலையை விரித்துப் போட்டபடி குப்புறக் கிடந்தது. காஞ்சுரிங் போன்ற படங்களில் பாத்திருக்கிறோமே. இம்மி பிசகாமல் அதேமாதிரி இருந்தது. அதைபார்த்த மாத்திரத்தில் வண்டியை நிறுத்திவிட்டேன். லேசாக வீசிய காற்றில் அதன் முடி அசைவது போல் இருந்தது. உயிர் இருந்தாலும் இருக்கக் கூடும். பொம்மை என்றே நினைக்க முடியவில்லை. பொம்மை உருவில் வந்த பேய் அல்லது பேய் உருவில் வந்த பொம்மை. 

தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் மேலும் உயிரூட்டியது. நான். அந்த பொம்மை. ஒரு சில தவளைகளின் அலறல். எங்கும் நிரம்பி இருக்கும் நிசப்தம். அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அதற்கும் ஏதேனும் பூர்வஜென்ம தொடர்பு இருக்கக்கூடுமோ என்றெல்லாம் கூட யோசித்தேன். மெல்ல அதனைக் கடந்து செல்ல தொடங்கினேன். வண்டியின் கண்ணாடியில் அசையாது படுத்துக்கிடந்தது அதன் பிம்பம். எப்போது வேண்டுமானலும் நிமிர்ந்து உட்காரலாம் என்பது போல் படுத்திருந்தது. வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆவி! எனக்கு என்ன பயம் என்றால் நம்முடைய அடுத்த நீண்ட பயணத்தில் 'சீனு நீங்க இப்போல்லாம் பேய்களைப் பத்தி அதிகமா எழுதுறீங்க' என்று கூறிவிடக் கூடாதே என்பது தான். 

இப்படிக்கு
சீனு    

14 Oct 2015

ஐடி வேலை @ மெண்டல் கேர்

நேற்று இரவு உணவு முடித்து வந்து கொண்டிருக்கும் போது எதிரில் வந்து கொண்டிருந்தவன் தான் இந்தப் பதிவை எழுதக்காரணம். இப்போதெல்லாம் யாரேனும் தனியாக பேசிக்கொண்டு போனால் யாரும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. நேற்றைக்கு தனியாக பேசியபடி நடந்த அவனை கணேஷிடம் காட்டிய போது 'அண்ணே ஒழுங்கா பார்த்தியா, போன்ல எதுவும் பேசிட்டுப் போகப் போறான்' என்றான். 'இல்ல அவன் போன்ல பேசல தனியாத்தான் பேசிட்டு போனான்'. விரக்தியின் உச்சத்தில் எதையோ அவன் உதடுகள் முணுமுணுக்க யாரிடமோ எதையோ சொல்லும் வேகத்தில் அல்லது தன் அருகில் நடந்து வரும் ஒருவனிடம் மிக சீரிசயாக பேசும் தொணியில் கைகளை வீசிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் நிறைய சோகமும் விரக்தியும் நிறைந்திருந்ததது. திரும்பித் அவன் நடந்து சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.   

***

நண்பனுக்கு நடந்த கதை

அலுவலகத்தில் ஒரு காட்சியை காணும் போதெல்லம் வயிற்றில் புளியைக் கரைக்கும். அது யாரையாவது ஸ்ட்ரெக்சரில் வைத்து தூக்கிக்கொண்டு போகும் காட்சி. எவ்வித அசைவும் இல்லாது கிடக்கும் அவர்களது உடலை சுற்றி ஒரு கூட்டமே பதறி அடித்துக்கொண்டு ஓடும். அப்படி ஒரு காட்சியை காண நேரும் போதெல்லாம் ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்வி ஆயிரம் முறை எழும். அதற்கான பதில்அதனை அனுபவித்துப் பார்த்த  என் நண்பனின் மூலமே கிடக்கும் என்பது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி. அதே போன்ற ஒரு ஸ்ட்ரெக்சரில் அவனை தூக்கிகொண்டு போகும்போது உடைந்துவிட்டேன். மனசு கேட்கவில்லை. அவனை தூக்கிச் சென்றவர்களிடம் போய் கேட்டேன். யாருமே பதில் பேசவில்லை. சொல்லப்போனால் அவர்கள் யாருக்கும் என்னை தெரியவில்லை. 'அவன் என் நண்பன், ஏன் என்னாச்சு' என்று மீண்டும் கேட்டபோது 'திடிர்ன்னு மயங்கிட்டாரு, ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை' என்றார் அந்தக் கூட்டத்தில் ஓடிய ஒருவர். ஐடி கம்பெனியில் இது ஒரு பெரிய பிரச்சனை. மயங்கி விழுவது இல்லை. உயிருக்கு உயிரான நண்பனின் ப்ராஜெக்ட் நபர்களுக்கு நம்மை யாரென்றே தெரியாது என்பதுதான். ஒரு கண்ணாடிச் சிறைக்குள் அடைபட்டுக் கொண்ட உலகமது. ஓடிசென்று அவர்களிடம் கேள்வி கேட்டபோது பதட்டத்தில் அவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என்னை மூன்றாம் நபராக மதித்த அவர்களுக்கு என்னிடம் பேசப்பிடிக்கவில்லை. விளைவு ஏதோ குறுகுறுப்பில் நான் கேட்டதாக தோன்றியிருக்ககூடும் அவர்களுக்கு


அடுத்த நாளே அவனுக்கு போன் செய்தேன். 'இன்னிக்கு ஆபீஸ் வந்துட்டேன். நேர்ல பார்க்கணும் வா தல' என்றான். அடிபட்ட பாம்பு போல் சுருண்டு கிடந்தான். 'என்னடா ஆச்சு' என்றேன். பேசத் தொடங்கினான். அழத் தொடங்கினான் என்பது தான் சரி. 'பயங்கர பிரஷர் தல, ஒருவாரமா கசக்கி புழியுறாங்க. லாஸ்ட் ஒரு மாசமா ஐஞ்சு மணி நேரம் தான் தூங்குறேன். சரியா சாப்பிடறது இல்ல, எந்தநேரமும் வேலைய பத்தி மட்டும் தான் யோசனை ஓடுது. நேத்து மதியம் பயங்கரமா தல வலிக்கிற மாதிரி இருந்தது. மண்டைக்குள்ள எதோ பிரச்சனைன்னு தெரியுது ஆனா என்னன்னு தெரியல. என்ன சுத்தி பயங்கர வெளிச்சம். எல்லாமே மெதுவா நகருற மாதிரி ஃபீல். உணர்வே இல்ல. பக்கத்தில இருந்து என்கூட பேசுறாங்க, நான் கல்லு மாதிரி உக்கார்ந்து இருக்கேன். மூளையே எம்ட்டி ஆனா மாதிரி ஒரு ஃபீல். என் பேரு மட்டும் தான் நியாபகம் இருக்கு. நான் யாரு, எங்க இருக்கேன் ஒண்ணும் நியாபகம் இல்ல. பக்கத்தில இருந்தவர்கிட்ட கேட்கிறேன் 'நான் ஏன் இங்க உக்கார்ந்து இருக்கேன்னு' என்ன மொறைச்சு பார்த்தாரு. திரும்பவும் கேட்டேன். ரெண்டு மூணு தடவ கேட்டேன். காமெடி பன்னாதடான்னு கோவத்தில எந்திச்சு போயிட்டாரு. அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாமே கனவு மாதிரி இருக்கு. முழிச்சு பார்த்தா பெட்ல இருக்கேன். குளுகோஸ் ஏறிட்டு இருக்கு. மயங்கி விழுந்துட்டேன்ன்னு சொன்னாங்க. எல்லாமே கனவுன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு அப்புறம் ஃபிரண்ட் கேட்ட கேள்விதான் தல' என்று கூறிவிட்டு நிறுத்தினான். 

'என்னடா கேட்டாரு' என்றேன். 'நேத்து காமெடிக்கு தான் அப்படி கேட்கிறேன்னு நினைச்சேன். ஆனா உண்மையிலேயே உனக்கு எதுவும் நியாபகம் இல்லையான்னு கேட்டாரு' என் மைன்ட் ஃப்ளாஷ் ஆனதுகூட கனவுன்னு தான் நினைச்சேன். ஆனா அவரு கேட்டதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது நிஜமாவே அவர்கிட்ட அப்படி கேட்ருக்கேன். மயங்கி விழுறதுக்கு முன்னாடி அரை மணி நேரம் பைத்தியம் மாதிரி நடந்துகிட்டேனாம். இப்ப நிஜமாவே பயமா இருக்கு தல எனக்கு எதுவும் ஆயிருச்சோன்னு' என்று கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டான். என்னை விட ரெண்டு வயது சின்ன பையன். குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறான். 'தல வேலைய விட்ரடுமா' என்றான். பதில் சொல்லத் தெரியவில்லை. பதில் சொல்ல முடியாத இடத்தில் தான் நானும் நின்று கொண்டிருக்கிறேன். 

'சரி இன்னிக்கு ஏண்டா ஆபீஸ் வந்த ஒருவாரம் லீவ் எடுத்துருக்க வேண்டியது தான' என்றேன். 'முடிஞ்சா வர முடியுமான்னு கேட்டாங்க. மனசு கேட்கல வந்துட்டேன்' என்றான். இந்தப் பதில் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் இது தான் நிஜம். இதுதான் நிதர்சனம். 

***

நண்பர் சொன்ன கதை 

'ஃகேபிடேரியால செம கூட்டம். உட்கார இடம் இல்லை, ஒரே ஒரு டேபிள் மட்டும் காலியா இருந்தது. அங்க ஒரு பொண்ணு தனியா உட்கார்ந்து இருந்தா. வேற வழி இல்ல அங்கதான் உட்காரனும். உக்கார்ந்த பின்னாடி தான் தெரியுது அவ அழுதுட்டு இருந்தது. பயங்கரமா அழுதுட்டு இருந்தா. கண்ணீர் அப்படியே தாரதாரயா கொட்டுது. திடிர்ன்னு போன் எடுத்தா, ரொம்ப நேரம் பேசுனா, இடையில செத்ரலாம் போல இருக்குன்னு சொன்னா. எனக்கு பகீர்ன்னு ஆயிருச்சு. அங்க இருந்து எந்திச்சு போயிரலாம்னு பார்த்தேன். அந்த வழியா போறவன்லா நம்ம ஒருமாதிரியா பாக்குற மாதிரி இருந்தது. மனசு கேட்கல நானே அதுகிட்ட பேச ஆரம்பிச்சேன். ன்னா தான் பிரச்சனை, ஏன் இப்படி அழுதுனு இருக்கீங்கன்னு. நிமிர்ந்து பார்த்தா. சொல்ல வேணாம்னா விட்றுங்க. ரொம்ப அழுதுனு இருக்கீங்க. எதுவும் பிரச்சனைன்னா வீட்டுக்கு கிளம்பி போயிருங்க. இங்க இருக்காதீங்கன்னு சொன்னேன். அவ பேச ஆரம்பிச்சா.'

'பத்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் அவளுக்கு. நாலு வருஷம் ஆன்சைட்ல இருந்திருக்கா. அதுல ரெண்டு வருஷம் மேனேஜரா இருந்திருக்க. ஆன்சைட்ல இருக்கும் போதே ஃப்ரஜெக்ட் முடிஞ்சு போனதால இங்க அனுப்பி விட்டுடாங்க. இங்க புது ஃப்ராஜெக்ட். அடிமட்ட லெவல்ல இறங்கி வேல பார்க்க சொல்லிருக்காங்க. பதினஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கவங்களே அடிமட்ட வேலை பார்க்கும் போது நான் பார்க்க முடியாதுன்னு இவளால எப்படி சொல்ல முடியும். ஆனாலும் சொல்லிருக்கா. எல்லாருமா சேர்ந்து இவள கட்டம் கட்டி மட்டம் தட்ட ஆரம்பிச்சிடாங்க. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் கிளம்பிரலாம் ஆனா லேப்டாப் எடுத்துட்டு போகனும். எப்போ கூப்பிட்டாலும் வேல செய்ய தயாரா இருக்கணும், இப்படி நிறைய பிரஷர்'. 

இவ கொஞ்சம் ஸ்லோ பிக்கப் போல அவங்க வேகத்துக்கு ஈடுகொடுத்து வேலை செய்ய முடியல. அதுதான் பெரிய பிரச்சனையா மாறி இருக்கு. நைட் எல்லாம் தூக்கம் வராம எப்போ பார்த்தாலும் எதையோ பார்த்து பயந்த மாதிரியே இருந்திருக்கா. குழந்தைகளை போட்டு அடிக்கிறது, புருஷன்ட்ட கோவபடுறதுன்னு டெய்லி வீட்லையும் பிரச்சனை. புருஷன் தயவுசெஞ்சு நீ வேலைய விட்று இப்படி லூசு மாதிரி பிகேவ் பண்ணாதன்னு சொல்லிருக்கான். எங்க நிஜமாவே எதுக்கும் உதவாதவளா மாறிட்டமோன்னு பயம் வந்தருக்கு. அந்த டிப்ரெஷன்ல ரெண்டு நாளா சாப்பிடவே இல்லியாம். யாருகூடவாவது கொஞ்சம் பேசுனா நிம்மதியா இருக்கும்னு புருசனுக்கு போன் செஞ்சிருக்கா, அவன் நான் பிசியா இருக்கேன் அப்புறம் கூப்புடுன்னு சொல்லிருக்கான். அதனாலதான் செத்துரட்டும்மான்னு கேட்டிருக்காளாம். என்றார். 

'இன்னா சொல்றதுன்னு தெரியல. தயவுசெஞ்சு தப்பான முடிவு எடுத்திராத, நல்லா யோசிச்சு முடிவு எடு. உனக்குன்னு குடும்பம் குழந்தைங்க இருக்கான்னுனு சொல்லிட்டு வந்தேன்' என்றார். மனசு பாரமா இருக்கு நண்பா. நிம்மதியே இல்லாம ஏன் இப்படி ஒரு வாழ்க்கை என்றவருக்கு என்னால் கூற முடிந்த பதில் ஒரு சொட்டு புன்னகை, நானும் இங்க தான இருக்கேன் என்ற ஆறுதல் பார்வை.  

மெண்டல் கேர்

அலுவலகத்தில் எர்கோ கேர் என்று ஒரு மென்பொருள் நிறுவி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உங்கள் கை கால் கழுத்து முதுகுக்கான உடற்பயிற்சிகளை செய்யச்சொல்லி உத்தரவு கொடுக்கும். எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதுவே செய்துகாட்டும். யாருக்கும் அதை கவனிப்பதற்கு கூட நேரம் இல்லை. ஒரு ஓரத்தில் அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்தபடி இருப்போம். சரி அது இருக்கட்டும். என்னைக் கேட்டால் எர்கோ கேருடன் சேர்த்து மெண்டல் கேர் கூட கொடுக்கலாம். ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று அவதிப்படும் பலருக்கும் மெண்டல் கேர் மிக அவசியமான அவசரமான தேவையாக இருக்கலாம். உடன் இருப்பவர்களுடன் பேசினாலே பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும். ஆனால் இங்கே ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக நடந்து கொண்டிருக்கும் போது தீர்வு என்பது மெண்டல் கேர் போன்ற மென்பொருள் வழியாகக் கிடைக்கலாம் என்பதும் ஊகம் தான். 

அலுவலக இணையத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எர்கோ கேர் மென்பொருளை நீங்கள் உபயோகிப்பதற்கான முக்கிய காரணம் என்ன 1. கை வலி 2. கழுத்து வலி 3. முதுகு வலி 4. இவை அனைத்தும். கை கழுத்து முதுகு என வாக்களித்தவர்கள் அத்தனைபேரும் ஒற்றை இலக்கத்தில் இருக்க இவையனைத்தும் என்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இப்போது வரைக்கும் 42.2%. வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன் மாதிரி என்று ஒரே இடத்தில் கொஞ்சம் கூட நகரமால் கணினிக்குள் புதைந்து போவது தான் முக்கிய காரணம். ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு என்று அலுவலகத்தில் பல வழிகள் உண்டு. ஒரு பெரிய பூங்கா, புல்வெளி, எக்ஸர்சைஸ் செண்டர் என்று எவ்வளவோ இருந்தும் இதைப்பற்றி எல்லாம் யோசிக்கும் மனநிலை வாய்ப்பதே இல்லை. நேரத்திற்கு வேலையை முடிக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே ஓடிக் கொண்டிருந்தால் எப்படி மற்ற சிந்தனைகளுக்கு நேரம் ஒதுக்க முடியும். 

தினமும் காபி குடித்துவிட்டு அலுவலகம் நோக்கி நடக்கும் போது எதிரில் சிலர் வாக்கிங் சென்று கொண்டிருப்பார்கள், சிலர் புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் சரவணா ஏக்கமாக சொல்வான் 'நாளைக்கு நாமளும் வாக்கிங் போகணும்டா, இப்பலாம் நாம நடக்குறதே இல்ல' என்று. தினமும் நாளை நடக்கலாம் என்று சொல்லும் சரவணாவுக்கும் தெரியும் அதை கேட்கும் எனக்கும் தெரியும் அது எங்களுக்கு நாங்களே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் என்று. மற்றபடி நாளை மற்றுமொரு நாளே.  
***

ஐடி வேலை இப்படித்தான் இருக்கும் என்பது தெரியும். உங்கள் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் வழி உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் உங்கள் உடலுக்கும் மனதுக்குமான ரிலாக்சேஷனை அவ்வபோது கொடுங்கள். குறைந்தபட்சம் அதற்கான முயற்சியையாவது எடுங்கள். இல்லை எதோ ஒரு கட்டத்தில் மனநிலை பாதிப்பு அடைந்து திரியும் போது உங்களை நீங்களே இழந்திருப்பீர்கள். அப்போது உங்கள் வயது நீங்கள் வாழ வேண்டிய வயதாகக் கூட இருக்கலாம்.