31 May 2013

100வது பதிவு : தமிழ் மீடியம் தேவையா? விடாது கருப்பு

முன் குறிப்பு :

இது என்னுடைய நூறாவது பதிவு, நூறாவது பதிவை பதிவுலகத்திற்கு நன்றி சொல்லி எழுதலாம் என்று நினைத்தால் 25 மற்றும் 50லும் அதைத் தான் செய்துள்ளேன், நான் ஏன் வந்தேன் எதற்கு எழுதுகிறேன் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் வரும் கொஞ்ச நஞ்ச நண்பர்களும் வரமால் போய் விடும் சாத்தியக்கூறு அதிகம். :-)

உங்கள் அனைவருக்கும் என் நன்றி நன்றி நன்றி...! 

என்றும் என்னை புதிதாக புதுப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...!     



தமிழ் மீடியம் விடாது கருப்பு 

சில நாட்களாகவே எழுத நினைத்த பதிவு நேற்று ஜீவன் சுப்புவின் இந்த பதிவை படித்ததும் தான் இதையே நூறாவது பதிவாக எழுதலாம் என்று தோன்றியது. எழுதுகிறேன் என் பார்வையை...   

ந்த அறையில் மிக மெல்லிய அளவில் ஏசி பரவியிருந்தது. மேஜையில் ஐ.டி துறை சம்மந்தமான அத்தனை புத்தகங்களும் மெகா சைஸில் விரவிக் கிடந்தன. என்னை நேர்முகத்தேர்வு காணப் போகும் அந்த ஹெச்.ஆருக்காக காத்துக் கொண்டிருந்தேன். 


ந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி கம்பெனியின் சென்னை கிண்டி கிளையில் எனக்கான ஒரு வேலைக்காக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த நேரம். காலை எட்டு மணியில் இருந்தே கூட்டம் அள்ளிக் கொண்டிருந்தது. கம்பெனியின் கட்டிடமே மிக கவர்ச்சியாக இருந்தது என்றால் அன்றைய தின பெண்களின் விஷுவல் இன்னும் கவர்ச்சியாக இருந்ததுத் தொலைத்தது என் இளமையை, இந்தக் கம்பெனியை இன்னும் அதிகமாக விரும்பச் செய்தது!    

முதல் ரவுண்ட் ஆப்ஸ் கிளியர், இரண்டாம் ரவுண்ட் டெக்னிகல் கிளியர், வந்திருந்த ஆயிரக் கணக்கானவர்களில் நூற்றுக் கணக்கானவர்களை ஜலித்து நேர்முகத் தேர்வுக்கு அனுப்பினார்கள். ஒவ்வொரு கட்டம் தாண்டும் போதும் அம்மாவிடமும் நண்பர்களிடமும் சொல்லிக் கொண்டே இருந்தேன். 

2008 ரிசஷன் என்ற சொல்லால் ஐ.டி துறை அதால பாதாளத்தில் இருந்த நேரம் தேவை ஒரு வேலை. இளநிலை முடித்தவுடன் சென்னைக்கு வெளியே திருவள்ளூரில் குடியேறி இருந்த நேரம், மிக அவசரத் தேவை ஒரு வேலை. இல்லை என்றால் சமாளிப்பது மிக கஷ்டம். நான் படிப்பு வராத கேஸ் இல்லை,  படிக்கும் நேரமெல்லாம் விளையாட்டுத் தனமாய் இருந்துவிட்டு தேர்வு அன்று காலையில் அவசர அவசரமாக படித்து 75 சதவீதம் வாங்கி பாஸ் ஆகும் கேஸ்.அதனால் என்னுடைய படிப்பை நம்பி முதுநிலை படிக்க வைக்க யோசித்த குடும்பக் கஷ்டம். அதை உணர்ந்து படிக்க விரும்பாத என் மனம்.

மணி மாலை ஐந்து, நேர்முகத் தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பான நிமிடங்களில் நகர்ந்து கொண்டிருந்த நேரம், எனக்கான ஹெச்.ஆருக்காக காத்திருந்தேன். நேர்முகத் தேர்வுகாக என்னுடன் ஒரு குழுவாக பிரிக்கப் பட்டவர்கள் மொத்தம் இருபது பேர், பாதிக்கும் மேல் பெண்கள். பெர்ப்யும் மணம் அனைவரின் உடைகளில் இருந்தும் காற்றில் கலந்து கொண்டிருந்தது. என் சட்டையை மோந்து பார்த்தேன் நல்ல வேலை வியர்வை நாற்றம் இல்லை.

அருகில் அமர்ந்து இருந்தவர்கள் அனைவரது விரலிலும் உதட்டிலும் ஆங்கிலம் விளையாடிக் கொண்டிருந்தது. அறையின் குளுமை கை நடுக்கத்தை இன்னும் அதிகமாக்கி இருந்தது. சி, சி++ என்று அவர்கள் பேச்சு மொத்தத்மும் ஆங்கிலமாக, அவ்வபோது சன்னமாக சிரித்த சிரிப்பு கூட ஆங்கிலத்தில் ஒலித்தது போன்ற பிரமை. அந்த சூழ்நிலை என் மொத்த தன்னம்பிக்கையையும் கெடுத்திருந்தது. 

படித்த சிலபல இண்டர்வ்யு டிப்ஸ் மற்றும் பிரிபரேசன் கூட மறந்து போயிருந்தது, எனக்கான தருணம் வந்தபொழுது, இதயம் காதுக்கு வெளியில் துடிக்கத் தொடங்கியிருந்தது. வயிறு முழுவதும் பயம், ஏதோ காற்றுப் போய் சப்பிப் போன பலூன் போல என் வயிரை உணர்ந்தேன்.

உள்ளே இறுக்கமான டீ.சர்ட், தொடை பிதுங்கித் தெரியும் ஜீன்ஸ் அணிந்த ஒரு கல்யாணமான மாது (பதிவின் சீரியஸ்னஸ் குறித்து அந்த ஆங்கில வார்த்தையை தவிர்க்கிறேன்!) என் நேர்முகத் தேர்வாளராக. முகத்தில் பெயரளவில் கூட சிரிப்பின் ரேகைகள் இல்லை. இப்போது கூட அவர் என் கண்முன்னே அமர்ந்து என்னை நோக்கி அதே கேள்விகளைக் கேட்பது போன்ற ஒரு பிரமை.

கடமைக்கு ரெஸ்யும். 'வாட்ஸ் யுவர் நேம்', அந்த ஆங்கிலம் புரிவதற்கே எனக்கு அரை நிமிடம் தேவைப்பட்டது, ஸ்ரீநிவாசன், 'அபவுட் யவர் ஸெல்ப்', பி.சி.ஏ, SPKC, +2 தென்காசி கவர்மெண்ட் ஸ்கூல், 'கவர்மெண்ட் ஸ்கூல்' இதை சொல்லும் பொழுது அவரது முக மாற்றத்தை கவனித்தேன், உன்ன நா எப்பவோ ரிஜெக்ட் பண்ணிட்டேன், இதுக்கு மட்டும் எதுக்கு தனி ரியாக்சன் என்பது போல் என்னைப் பார்த்தார்.

'கேன் யு ஜஸ்ட் எலாபரெட் ஆல் திஸ்' என் மனம் துடித்த துடிப்பில் பொருள் சுத்தமாக புரியவில்லை. 'எனக்கு வேல கூட வேணாம், என்ன இந்த இடத்துல இருந்து அப்புறப்படுத்தினா போதும்' என்ற நிலையில் இருந்தேன். முழுதாக மூன்றாம் கேள்வியிலேயே இந்த நிலைக்கு வந்துவிட்டேன்.

'கேன் யு ஜஸ்ட் எலாபரெட் ஆல் திஸ்' மீண்டும் அந்த அம்மா என்னை நோக்கி கேட்டார் இல்லை கத்தினார் என்று கூட பொருள்பட்டுக் கொள்ளலாம், கேவலமான ஒரு எக்ஸ்பிரசன் கொடுத்தேன், ஓகே இப் யு ஆர்  செலக்ட்டட், வீ வில் கால் யு' இந்த வார்த்தை ஒரு நிமிடம் என்னுள் 'யு ஆர்  செலக்ட்டட், வீ வில் கால் யு' என்பதாக பதிந்தது, மீண்டும் ஒரு முறை அவளை நோக்கினேன் 'வீ வில் கால் யு, நவ் யு கேன் லீவ் அண்ட் மை அட்வைஸ் இஸ் இம்ப்ரூவ் யுவர் கம்யுனிகேசன்'.   

'இம்ப்ரூவ் யுவர் கம்யுனிகேசன்' எத்தனை முறை எத்தனை பேரிடம் கேட்ட அட்வைஸ் சட்டனெ புரிந்து கொண்டது, அந்த இறுக்கமான சூழலிலும் சிரித்துவிட்டு எழுந்தேன், திரும்பிப் பார்க்கவில்லை, இது தான் நடக்கப் போகிறது என்று தெரியும், நிதானமாய் யோசித்துப் பார்த்தால் எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது, இருந்தாக வேண்டும், காரணம் அவர் கேட்பது என்னைப் பற்றி, ஆனால் சொல்லத் தெரியவில்லை, எப்படி சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.       
                    
எப்போதுமே என்னை தமிழ் மீடியத்தில் படிக்க வைத்ததற்காகவோ இல்லை அரசு பள்ளியில் படிக்க வைத்ததற்காகவோ என் பெற்றோர் மீது கோபம் கொண்டதில்லை, காரணம் என் குடும்பம் பற்றிய புரிதல் எனக்கு விபரம் தெரியும் முன்பே எப்படியோ என் மனதில் பதிந்துவிட்டது. 

ஸ்போகேன் இங்க்லீஸ் கிளாஸ் அனுப்பினார்கள், ஹிந்து பேப்பர் வங்கிக் கொடுத்து படிக்க சொன்னார்கள் லிப்கோ, பிரிலியண்ட் எக்ஸட்ரா எக்ஸட்ரா டிக்சனரி வாங்கிக் கொடுத்து படிக்க சொன்னார்கள், ஆங்கிலம் கற்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள், ஆனால் ஆங்கிலம் மீது எனக்கொரு பயம் வரபோகிறது என்ற புரிதலும் எனக்கு விபரம் தெரியும் முன்பே எப்படியோ என் மனதில் பதிந்துவிட்டது.  

நான் ஐந்தாவது படிக்கும் வரை ABCD சொல்லத் தெரியாது. 
ஏழாவது படிக்கும் வரை எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியாது. 
பன்னிரெண்டாவது படிக்கும் வரை கிராமர் என்றால் எமக்கு சாலப் பயம்.
இளநிலையில் ஸ்போகேன் இங்கிலீஷ் பயம்.
நேற்று இந்தியன் இங்க்லீஷ். 
இன்று அமெரிக்கன் இங்க்லீஷ். 
நாளை விடாது கருப்பு...! 

இன்று கூட டிவியில் எதாவது ப்ரோக்ராம் முடிவில் எழுத்துகள் போடும் பொழுது அதில் வரும் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசிக்க சொல்வது என் அம்மாவின் தவிர்க்க முடியா செயலாக உள்ளது. புள்ள மேல அம்புட்டு நம்பிக்க!      

                                                                             விடாது கருப்பு தொடரும்...! 

27 May 2013

ஜம்மு - பாகிஸ்தான் எல்லையை நோக்கிய எனது 'பய'ண அனுபவம்


ம்மு ரயில் நிலையத்தை நெருங்க நெருங்க இந்தியாவின் மிக முக்கியமானதொரு பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே மனதினுள் விவரிக்க இயலா ஒரு உணர்வாய், வார்த்தைகளுக்குள் கொண்டுவர இயலா ஒரு கற்பனையாய் மனதினுள் விரிந்து கொண்டிருந்தது.




புரட்சிப் பதிவரும் எல்லைப் பாதுகாப்புப் படையில் பயிற்சியாலருமாய் பணி புரிந்து கொண்டிருக்கும் நமது சதீஷ் செல்லதுரையிடம் "எனக்கு பார்டர சுத்தி காமிக்க முடியுமா" என்று பேஸ்புக் சாட்டில் விளையாட்டாய் கேட்ட பொழுது மிக சீரியசாய் நிச்சயமாய் சுற்றலாம் என்று கூறி அதற்கான அனுமதிகளையும் விரைந்து பெற்று என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

சென்னையில் இருந்து எப்படி ஜம்மு சென்றேன் என்பதையே தனியொரு பதிவாக எழுதலாம் என்பதால் இப்பொழுது பார்டர் அனுபவங்களை மட்டும் பகிர்கின்றேன்.  

வெள்ளைப் பனி போர்த்திய மலை, மெய்சிலிர்க்க வைக்கும் மிகக் குளிர்ந்த காற்று, சிகப்பு ஸ்வெட்டர் அணிந்து திரியும் வெள்ளை ரோஜாக்கள் ஜம்மு பற்றிய எதிர்பார்ப்பு இப்படியாகத்தான் என் மனதில் பரவி இருந்தது. ஆனால் ஸ்டேசனில் இறங்கிய அடுத்த நொடியே என் அத்தனை கற்பனையும் பணால் ஆகும் என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. 

காரணம் சென்னை ஆவடியைப் போன்ற ரயில் நிலையம், ஏழுமணிக்கே ஆதவன் தனது பணியை செவ்வனே ஆரம்பித்திருந்தான். சூரிய கதிர்களால் அந்த இடமே சற்று மஞ்சள் கலந்த வெளிச்சமாய் தோன்றியது. அவ்வபோது வீசும் லேசானா குளிர்ந்த காற்று மட்டும் சற்றே இதமளித்தது, என்னை அழைத்துச் செல்வதாய் கூறியிருந்த சதீஷ் அண்ணாவிற்காக காத்துக் கொண்டிருந்தேன். 

ஹிந்தி கற்றுக்கொள்ளதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இந்தப் பயணம் முழுவதும் உணர்ந்து கொண்டிருந்தேன் இருந்தாலும் மத்யமா, ராஷ்டிரபாசா போன்ற மேற்படிப்புகளில் புலமை பெற்றிருந்ததால் ஜம்மு என்பதை அழகாக எழுத்துக்கூட்டி வாசித்துவிட்டேன்.மேலும் யாரிடமும் வழிகேட்க முடியவில்லை, எங்கு செல்வது அப்படி செல்வது என்றும் தெரியாது காரணம் மேம் இந்தி நகி மாலும் ஹை என்ற அளவில் மட்டுமே மாலும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

மற்றொரு முக்கியமான விஷயம், ஜம்முவில் வெளிமாநிலத்து சிம் எதுவும்  வேலை செய்யாது. பாதுகாப்பு காரணங்கள் கருதி ஜம்மு எல்லைக்குள் நுழையும் பொழுது சிம்மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். அதனால் சதீஷ் அண்ணனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர் கூறியபடி அங்கிருக்கும் போலீஸ் பூத் அருகில் காத்திருந்தேன், சரியாக ஐந்து நிமிடங்களுக்குள் என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.

"என்ன தம்பி சவுக்கியமா", சொல்ல மறந்துவிட்டேன் அண்ணன் சதீஷ் அவர்களுக்கும் நெல்லை தான், பார்டரில் இருந்தாலும் நெல்லைத் தமிழ் அப்படியே அவரிடம் இருக்கிறது. என்னை அழைத்து செல்வதற்காக மிலிட்டரி ஜீப் எடுத்து வந்திருதார். 

சதீஷ் அண்ணன் தற்போது காவல் காக்கும் சாம்பா எல்லையை நோக்கி எங்களது பயணம் தொடங்கியது. 

ஜம்முவில் இருந்து சாம்பா சரியாக நாற்பது கி.மீ. இங்கு அதிகமான சுற்றுல்லாவாசிகளைக் காண முடிந்தது. சற்றே வித்தியாசமான கலாச்சாரம். ஜம்மு மாநிலம் வளர்ச்சி அடைவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. தாவி நதி மாவட்டம் முழுவதும் பரவி உள்ளது, தண்ணீர் மிகக் குறைவாக ஓடிக் கொண்டிருக்கும் சற்றே அகலமான நதி. அந்நதி வழியாக பயணித்த சமயம் தாமிரபரணியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. 

சாம்பா எல்லையானது பஞ்சாப் மாநிலத்திற்கு மிக அருகில் இருக்கும் இந்திய எல்லை. இமாலய மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதி என்று சொல்லலாம், கண்ணுக்கெட்டிய தொலைவில் இருந்து நீளும் இமாலயத்தைக் வெகு அருகில் காண முடிகிறது. சாம்பா செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கோதுமை பரவிய வயல்வெளிகளும் அவ்வபோது வந்து செல்லும் கிராமங்களும் நம்மூர் வயல்வெளிகளை நினைவுபடுத்தத் தவறவில்லை.  

"மலை, பனி, ஐஸ் காத்து இதெல்லாம் கிடையாதா, அப்போ இதுக்கு பேரு பார்டரே கிடையாது, என்ன ஏமாத்தீட்டீங்க தான" என்றவுடன் என்னை நோக்கி அவர் பார்த்த அந்த பார்வை 'உன்னையெல்லாம் மதிச்சி கூட்டிப் போறேன்பாரு என்ன சொல்லனும்டா' என்ற வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சாம்பாவில் இருக்கும் எல்லைப் பாதுகாப்பு படை ஹெட்குவாட்டர்ஸ்க்கு முதலில் சென்றோம். மிலிட்டரி பேன்ட் சகிதம் ஆஜானுபாகுவான பல வீரர்களை ஒரே இடத்தில் காண கண் கோடி வேண்டும். அங்கிருந்த இடங்களில் பலரும் ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

" இங்க இருக்க ஒவ்வொரு வீரர் கூட்டத்தையும் கம்பெனின்னு சொல்லுவாங்க, ஒவ்வொரு கம்பெனியும் வருசத்துல ஒன்னரை மாசம் கட்டாயமா டிரெயினிங் எடுத்துக்கணும்.." என்று அவர் காண்பித்த ஒவ்வொரு கம்பெனியையும் வாயைப் பிளந்தவாறு பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தேன்.

"தமிழ்நாட்டுல இருந்து எல்லா மாவட்டக்காரங்களும் இங்க இருக்காங்க, நெல்லையில இருந்தே மூணு பேரு இங்க இருக்கோம்" என்று கூறியபடி அவரது நபர்கள் சிலரை அறிமுகம் செய்து வைத்தார். நம்மூறுப் பையன் என்றதும் அவர்களும் உற்சாகமாகி சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.  

சதீஸ் அண்ணன் அவரது ஹெட்குவாட்டர்ஸை சுற்றிக் காட்டிக் கொண்டே அவ்வப்போது பதிவுலகைப் பற்றியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.

"அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ?, நடத்தினா ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தகவல் சொல்லுங்க, நானும் கலந்துக்க முயற்சி பண்றேன்" 

"இங்க செல்போன் ரேஞ் இருக்கது இல்ல, அதனால பதிவுகளே படிக்க முடியல, இந்நேரம் நம்மாளுங்க எல்லாரும் என்ன மறந்து இருப்பாங்க தானே" என்றபடி பதிவுலகம் பற்றி ஏதாவது பேசிக் கொண்டே வந்தார்.

காலை சாப்பாடு ரொட்டி அல்லது பூரி அதுவும் லிமிடெட், மதிய மற்றும் இரவு சாப்பாடு அன்லிமிடட். காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து ஜீரோ லைன் நோக்கி புறப்பட்டோம்.



ஜீரோ லைன் என்னும் மாயக்கோடு தான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மிகசரியாக பிரிக்கும் எல்லைக் கோடு. சாம்பா ஹெட்குவாட்டர்சில் இருந்து மிக சரியாக இருபது கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு செல்லும் வழி முழுவதுமே வயல்வெளிகள் தான் என்றாலும் இந்த வயல்வெளிகளுக்கு நடுநடுவே பங்கர் என்று சொல்லப்படும் பதுங்கு குழிகள் காணப்படுகின்றன. சாதாரணமாக பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண ஜன்னல் அல்லது ஒரு அடி உயர மேடு போல் தோன்றும் அந்த இடம் தான் போர்க்கால தாக்குதலின் போதும், வேவுபார்க்கவும்  பயன்படுத்துகிறார்கள் சொல்லிக் கொண்டே ஒரு பங்கரின் அருகில் ஜீப்பை நிறுத்தி என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.   

(இந்திய எல்லைப் பாதுகாப்பு விதிகளின் படி சில மேலதிக தகவல்களை குறிப்பிட வேண்டாம் என்று அண்ணன் கேட்டுக் கொண்டதால் சில தகவல்கள் முழுமையடையாமல் இருக்கும்.)

வயல்வெளிகளில் அறுவடை நடைபெறும் பொழுது விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தாக்குதல்களில் ஈடுபட மாட்டார்களாம், இவை மனிதநேய எல்லை விதிமுறைகளில் ஒன்று.

பின் அங்கிருந்து வாட்சிங் டவர் நோக்கி பயணித்தோம். இந்திய எல்லையில் இருந்து பாகிஸ்தான் எல்லையை வேவுபார்க்க அமைக்கப்பட்ட சற்றே உயரமான டவர். வாட்சிங் டவருக்கும் ஜீரோ லைனுக்கும் இடையில் குறைந்தது 20மீ இடைவெளி இருக்கலாம். சில மீட்டர் இடைவெளியில் பார்டர் முழுவதுமே பல வாட்சிங் டவர் உள்ளன. இங்கிருந்து பாகிஸ்தான் எல்லையை தீவிரமாக கண்காணித்துக் கொண்டே இருப்பது தான் இவர்களது முக்கியமான வேலை.

பாகிஸ்தான் எல்லைப் பாதுகாவலர்களை ரேஞ்சர் என்று அழைகிறார்கள். ரேஞ்சர்கள் ஜீரோ லைன் பக்கம் எவ்வளவு முறை வருகிறார்கள், வந்து என்ன செய்கிறார்கள்,ரேஞ்சரை தவிர வேறு யாரும் வருகிறார்களா, வந்தால் எத்தனை பேர் வருகிறார்கள், வந்து என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தகவல் மையத்துக்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜீரோலைனை இருக்கும் கல் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதோ, ஏதேனும் ஆக்கிரமிக்கப்படுகிறதா என்பது பற்றிய தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். கண்காணிப்பில் இருக்கும் பொழுது எப்போதும் பன்னிரண்டு கிலோ எடையிலான கவச உடையை அணிந்துகொண்டே இருக்க வேண்டும். அந்தக் கவச உடையை என்னால் தூக்கக் கூட முடியவில்லை. எப்படித்தான் அதை அணிந்து கொண்டு நடக்கிறார்களோ!

"அரசியல்வாதி, தலைவர்களுக்கு எல்லாம் பைபரால செஞ்ச வெயிட்லெஸ் புல்லட்ப்ருப் கொடுத்ருக்காங்க, நாங்க இதத் தான் தூக்கி சுமக்க வேண்டியதா இருக்கு" என்றவரிடம்,

" உங்களுக்கு அத கொடுக்க வேண்டியது தான, உங்களுக்கு தான அது ரொம்ப முக்கியம்" என்று அப்பாவியைக் கேட்டவனிடம்,

" அட போப்பா நீ வேற, இதுலையே பயங்கர ஊழல் பண்றாங்க, புல்லட் எல்லாம் இத ஓட்ட போடுது" என்றார் பயங்கர எரிச்சலுடன். 'என்ன அரசாங்கமோ' என்ற கோபம் மட்டுமே எங்கள் மனதில் மிஞ்சியது. 



இம்பரோவைஸ்ட் எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ் எனப்படும் கண்ணிவெடி போன்ற வெடியை ஜீரோ லைன் நடைபாதையில் தீவிரவாதிகள் பாகிஸ்தான் ரேஞ்சர் உதவியுடன் வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள், அது வெடித்து இறந்தவர்களும் ஊனமானவர்களும் பலர் என்ற தகவல் என்னுள் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதை கண்டுபிடிக்க நவீன சாதனங்கள் வந்துவிட்டதாக கூறினார். மேலும் ஒவ்வொரு கம்பெனியிலும் அவ்வகை பாமை வெடித்து செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் உண்டு என்ற தகவலையும் சேர்த்துக் கொண்டார்.      

ஆர்மி எனப்படுபவர்கள் போர்க்காலங்களில் மட்டுமே எல்லைப் பக்கம் வருவார்களாம், ஒருவேளை போர் அல்லது திடீர் தாக்குதல் நடப்பின் அந்த முதல் கட்ட தாக்குதலை சமாளிக்க வேண்டியது எல்லைப் பாதுகாப்பு படையினரின் மிக முக்கிய பணியாகும்.

இதற்காக இவர்களிடம் மெசின் கன், AGL எனப்படும் ஆட்டோமேட்டிக் கிரானைட் லாஞ்சர், ராக்கெட் லாஞ்சர் போன்ற ஆயுதங்கள் எப்போதுமே தயார் நிலையில் இருக்கும். 

சில சமயங்களில் ஜீரோ லைன் அருகில் சென்று ரேஞ்சர்களுடன் பேசுவார்களாம், அவர்களும் " யோவ் அண்ணாச்சி எங்கள பார்த்து பயபடாதீரும்யா, எதுக்கு புல்லட் ப்ரூப்ல்லாம் போடுறீங்க, சும்மா எங்கள மாதிரி சாதரணமா வாங்க" என்று கூறும் அளவிற்கு நட்பாய் மிக சகஜமாய்ப் பேசுவார்கள் என்று கூறினார், மேலும் அவர்கள் ஜீரோ லைன் அருகில் வரும்பொழுது பெரும்பாலும் BP அணிந்திருக்க மாட்டார்களாம்.  

ஜீரோலைனை சுற்றி மிக உயரமான புற்கள் அதிகமாய் வளருவது உண்டு, அந்த புற்களையும் இவர்கள் தான் வெட்ட வேண்டுமாம்,"கடைசி மூணு நாளா    புல்லு தான் வெட்டிட்டு இருக்கேன் கையப் பாரு எப்படி காச்சுப் போயி இருக்குன்னு" என்று காட்டியவரின் கை மிக உறுதியாய் இருந்தது.   

இண்டெலிஜெண்ட் பிரிவில் இருந்து தீவிரவாதி உள்நுழையப் போவது  பற்றிய தகவல்வரின் கண்காணிப்பு இன்னும் அதிதீவிரமாய் இருக்கும். அதில் பெரும்பாலும் பால்ஸ் தகவலாகக் கூட இருக்கலாம். மேலும் இரவு நேரத்தில் எல்லையை கவனிக்க NVD எனப்படும் நைட் வீடியோ டிவைஸ் வைத்துள்ளர்கள். எல்லையில் இரவு நேரம் எரியும் விளக்குகள் பகலை விட மிக வெளிச்சயமாய் இருக்கும் என்று அங்கிருந்த விளக்குகளைக் காட்டி கூறினார். 

சாம்பா எல்லையில் சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் பூமிக்கடியில் துளை அமைத்து உள்ளே புக முயன்ற இடத்தை சுற்றிக் காட்டினார். அந்த பாதாள வழியை கண்டுபிடித்த விவசாயியைப் பற்றியும் கூறினார்.

அவ்வபோது எங்கிருந்தாவது தோட்டாக்கள் வந்து கொண்டே இருக்கும். எந்த மரத்தில் எந்த புதரில் இருந்து வருகிறது என்றெல்லாம் யோசிக்க கூட நேரம் இருக்காது. திடீர் தாக்குதல்கள் எங்களுக்கு தீபாவளி போன்றது, சில இறப்புகள் தான் எம்முள் அதிக வலியை ஏற்படுத்திவிடும் என்று மிக சாதரணமாய் அவர் கூறிய அந்த நிமிடம் என்னுடலும் ஒரு நிமிடம் அதிர்ந்தது.

ஜீரோ லைனில் இருந்து திரும்பும் பொழுது எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் இருக்கும் அந்த இடத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

இந்த நிமிடம் கமல் எழுதிய விஸ்வரூபம் பட பாடலில் வரும் அந்த வரிகள் தான் நினைவில் வந்தது. 

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான் 
நம்மில் யார் இறந்தாலும் 
ஒரு தாய் அழுவாள் - பாரடா 

முக்கிய குறிப்பு : லேபிளைக் கவனமாய்ப் பாருங்கள். சூட்சுமம் அங்கு தான் ஒளிந்துள்ளது.  

24 May 2013

சென்னையும் தென்காசியும்


அந்த நாள் ஆரம்பிக்கும் முன்பே தெரியும் மிக அதிகமான அலைச்சல் இருக்கப் போகிறது என்று.

காலையில் மேடவாக்கம் டூ சிறுசேரி அலுவலகம். பின் வீடு. அங்கிருந்து திருவெற்றியூரில் பிலாசபி பிரபா கல்யாணம். அங்கிருந்து கோயம்பேடு . கிடைக்கின்ற பேருந்துகளில் அப்படியே ஒரு எழுநூறு கி.மீ பயணித்தால் தென்காசி.

சென்னையில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருந்த வார இறுதி, மதியம் இரண்டு மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பி ஓ.எம்.ஆரைக் கடக்கும் வரை வெயில் சுத்தமாய் வெயில் தெரியவில்லை, கிழக்குக் கடற்கரைக் காற்றில் சுகமாய் பயணித்துவிட்டேன். சோளிங்கநல்லூரைக் கடந்த பின் தான் வெயிலின் உக்கிரம் முழுவதுமாய்த் தெரிய ஆரம்பித்தது. தலையில் ஹெல்மட் 'ஹெல்'மேட் ஆகியிருந்தது, அதைக் கழற்றினால் யாரோ கிலோ கணக்கில் தகிக்கும் கங்கை அள்ளி முகத்தில் வீசுவது போன்ற வெப்பக் காற்று. 

பெயரளவில் கூட மரங்கள் இல்லாத பொட்டல் வெளி. ஒரு காலத்தில் வயலும், மரங்களும் இருந்த இடங்களில் எல்லாம் கட்டிடங்கள் அல்லது கட்டிடங்கள் முளைப்பதற்காக தங்களை தாரை வார்த்துக் கொடுத்த நிலங்கள். பின் எங்கிருந்து காற்றடிக்கும். சென்னையின் அணைத்து மல்டி நேஷசனல் கம்பெனிகளும் பூமித் தாய்க்கு வாரி வழங்கும் குளோரோ ப்ளோரோ கார்பன், நான்கு பேர் செல்ல உபயோகிக்க வேண்டிய நாற்சக்கர வாகனத்தை ஒரே ஒருவர் உபயோகித்து அதனால் பெருத்துப் போன வாகனத்தால் வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு, ஒலி ஒளி மாசுபாடு என்று சென்னையை மக்கள் வாழத் தகுதியுள்ள மிக சிறந்த இடமாக மாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் அன்ட் அரசாங்கம்.

வீட்டில் வண்டியை நிறுத்தி விட்டு, நட்ட நடு வெயிலில் (நட்ட நடு வெயில் என்பது சென்னையைப் பொறுத்த மட்டில் காலை ஒன்பது மணியில் தொடங்கி மாலை நான்கு மணி வரை வேலை பார்க்கும் உண்மையான அரசு ஊழியன் எனக் கொள்க) ஒருவாரத் துணி அடங்கிய பையையும் சில பல புத்தகங்கள் அடங்கிய சோல்டர் பேக்கையும் சுமந்து கொண்டு ஒரு கி.மீ தொலைவில் இருந்த பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.    



அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கியது இல்லையே தவிர பார்த்திருக்கிறேன், அதன் அருகில் நிற்கும் போது அதில் பரப்பியிருக்கும் கங்கின் அனலை மிகச் சமீபத்தில் சென்று முகர்ந்து பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படி உணர்ந்தேன் அக்னியின் தாக்கத்தை. இந்நேரத்தில் நான் செய்த மற்றொரு விரும்பத்தகாத செயல் குளுகுளு ATஎம்மினுள் சென்றது. என்றைக்குமே வேலை செய்யாத ATM ஏசி அன்றைய தினம் அடம்பிடித்து ஓவர்டைம் பார்த்துக் கொண்டிருந்தது. சிட்டி பேங்க் ATM ஏசியை அண்டார்டிக்காவில் ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்கள் போல உள்ளே நுழைந்ததும் பனி பிரதேசத்து கரடிகள் எல்லாம் ஒரு நிமிடம் கண்முன் வந்து சென்றது. 

அடிகின்ற வெயிலில் கூட சுகமாய் ஒரு மணி நேரம் சுகமாய் நின்று விடலாம். இது போல் ATMல் நுழைந்து வெளிவந்த பொழுது சகாரா பாலைவனத்தில் தனித்துவிடபட்டது போல் உணர்ந்தேன். நெற்றியில் இருந்து துடைத்த வியர்வை மில்லி லிட்டர் கணக்கு என்றால், முதுகில் சுகமாய் ஒட்டிக் கொண்ட வைக்கிங்கில் நிச்சயம் லிட்டர் கணக்கில் இருந்திருக்கலாம்.  

மேடவாக்கம் டூ திருவெற்றியூர் வெறும் நாற்பதே கி.மீ. மாற வேண்டிய பேருந்துகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்தது மூன்று. சென்னையின் புறநகர் வாழ்க்கைக் கொடுமையில் இவை எல்லாம் எழுதப்பட்ட 'லா' க்கள். 

சிலரிடம் வழி கேட்டு மூக்கறுபட்டு திருவொற்றியூர் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். சில நேரங்களில் சென்னை மனிதர்களை சுத்தமாய்ப் பிடிப்பதில்லை. அதனாலேயே சென்னையை பல நேரங்களில் பிடிப்பதில்லை.

  

வடசென்னையை முதன் முதலில் அன்று தான் பார்த்தேன், கிழக்குக் கடற்கரை சாலையில் தவறவிட்ட முக்கியமான இடம். கற்களை கடலினுள் அரை கி.மீக்கு நீளவாக்கில் விரித்து வைத்திருந்தார்கள். அங்கு சென்று நின்று கடல் காற்றை அனுபவித்தால் ரம்யமாய் இருக்கலாம். ஒருநாள் நிச்சயம் செல்ல வேண்டும். (யாரேனும் தயாரா, என்னை அழைத்து செல்வதற்கு).

சென்னையின் மிக மிக குறுகலான ரோடுகள். ஹார்பர் வரும் லாரிகள் அந்த ரோட்டின் அகலத்தை இன்னும் பாதியாய்க் குறைத்து சாலை மறியல் செய்வது அதைவிடக் கொடுமை. ஒரு வ(லி )ழியாய் வந்து இருந்து நமது பதிவுலக சிங்கங்களுடன் சேர்ந்து விழாவை சிறப்பித்து கிளம்பும் பொது மணி எட்டு. (இரவு கல்யாண சாப்பாட்டில் எக்ஸ்ட்ரா க்ளோப்ஜாமூன் வாங்கித் தராத அரசனை வன்மையாகக் கண்டிக்கிறேன்).

"திருவொற்றியூர் டூ கோயம்பேடு பஸ் ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ இருக்கு அதுல போ"ன்னு சொன்ன அஞ்சாசிங்கம் செல்வின நம்பி முக்கா மணி நேரம் ஸ்டாப்ல நின்னேன். ப்ராட்வே வழி போயிருந்தால் கோயம்பேட்டில் பாதி வழியைக் கடந்திருப்பேன்.     

எனக்கான சுந்தரா ட்ராவெல்ஸ் எம்.டி.சி உபயத்தில் வெற்றிகரமாக அதிகமான பயணிகளை சுமந்து கொண்டு வந்து சேர்ந்தது. அதிலிருந்து மிக சரியாக  அடுத்த ஒன்னரை மணிநேரம் பிரீமியர் பிரஷர் குக்கரில் அமர்ந்து பயணிப்பது போன்ற பீலிங். என் நேரம் அரசாங்க புண்ணியத்தில் அமர்ந்திருந்த விண்டோ சீட் ரிப்பேர். கண்ணாடியை அசைக்கக் கூட முடியவில்லை. வஜ்ரம் சிமிண்ட்ஸ் உபயோகித்திருப்பர்கள் போல, செம ஸ்ட்ராங்.            

பிராந்தி வாடை, துபாய் சென்ட் வாடை, மீன் வாடை,எங்கிருந்தோ வரும் மல்லிப்பூ 'வாசம்' (கவனிக்க), வேலைக்கு சென்று வரும் உழைப்பாளிகளின் வியர்வை நாற்றம். 'அடியே என்ன எங்க நீ கூட்டி போற' பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் காதினுள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஒருவழியாய் கோயம்பேடு வந்து சேர்ந்தது. தென்காசி, நெல்லை, மதுரை திருச்சி எதாவது ஒரு பேருந்தில் இருக்காய் கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்த பொழுது மணி பத்து. அனைத்து விரைவு பேருந்துகளிலும் ரஜினி பட டிக்கட் கவுண்டர் போல கண்டக்டரை சூழ்ந்து நின்றது மக்கள் சுனாமி.

"எனக்கிது சரியாப்படலை" என்ற மன நிலையில் ஒரு கி.மீ தள்ளி இருக்கும் தனியார் பேருந்து நிறுத்தம் நோக்கி நகர்ந்தேன், மனசில் இருந்த பாரத்தை விட கையில் சுமக்கும் பாரம் கைவலியை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. இந்நேரத்தில் சொந்தபந்தங்கள் என்னை அட்வைஸ் மழையில் நனைய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை தனியார் பேருந்தில் இடமில்லாவிட்டால் மீண்டும் வந்தவழி நடக்கத் தொடங்க வேண்டுமே என்ற வருத்தம் வேறு. சென்னை வாழ்கையை கிட்டத்தட்ட வெறுக்கத் தொடங்கியிருந்த தருணம்.

'மர்ர மர்ர மர்ர மர்ர' சென்னை சிறுவன் என்னை மதுரைக்கு அழைத்துக் கொண்டிருந்தான். 

"டிக்கெட் எவ்ளோ",

 "எயிநூத்தி அம்பது னா"

"என்னது 750 ஆ, வேணாம் பா"   

"ன்னா ன்னு பத்து நிமிசத்துல தொள்ளயிரமாயிரும், வேணா வா" 

இந்நேரம் உள்ளேயிருந்த பெருசுகள் டிரைவருடன் பொங்கத் தொடங்கி இருந்தார்கள்

"யே யா யோவ், ஒன்பது மணிக்கு ஏறினேன்  ஒன்பதரைக்கு எடுக்கேன்னு சொல்லிட்டு இன்னும் எடுக்காம இருக்கியே, உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா"     

மணியைப் பார்த்தேன் சரியாக 10.45. தக்கல் கூட 400 ஊவாத் தான் அதுவும் தென்காசி வரை. மதுரை 750. மனதை கல்லாக்கிக் கொண்டு ஏறினேன். மீண்டும் ஒருமுறை இட்லி குக்கரில் இருப்பது போல் உணர்ந்தேன்.

சென்னை விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். மக்களே நமக்கு நாமே உலை வைத்துக் கொண்டிருக்கிறோம். என்று மேடை போட்டு புரட்சி போராட்டம் நடத்தலாம் போல இருந்தது. சரியாக 11.30க்கு பேருந்து கிளம்பியது.         

காலை ஏழு மணி மதுரையில் வெக்கை இல்லை. ஆனால் காற்றும் இல்லை. பின் ராஜபாளையம், அங்கு வெயில் கொளுத்தியது, ராஜபாளையத்தில் பேருந்து மாறி ஏறி என் பையைத் தொலைத்த கதையெல்லாம் தனி பதிவே எழுதலாம். அங்கிருந்து சங்கரன் கோவிலில் உறவினர் திருமணம். 

எல்லாம் முடித்து மாலை ஐந்து மணிக்கு தென்காசி சொர்க்கத்தில் கால் வைத்த பொழுது, என்னை வரவேற்பதற்காக பலஅடி உயர எழும்பி என்னை அப்படியே தூக்கிக் கொஞ்சுவது போல் ஒரு குளிர்ந்த காற்று அடித்து பல முறை என்னை சுற்றி சுற்றி வட்டம் போட்டுக் கொண்டே இருந்ததே...! 

"அது தான்யா தென்காசி, இந்தக் காத்து வேற எங்க கிடைக்கும், அப்டியே பாய் தலவாணி இருந்தா அங்கயே படுத்து தூங்கலாம் போல இருந்தது எனக்கு"    

ஊரில் இருந்த ஒரு வாரமும், பலரும் பல தொனிகளில் என்னை நோக்கி சொன்னது "என்னவோ பெருசா சென்னையில இருக்கேன் சொல்றியே, அங்கலா இப்டி ஒரு காத்து கிடைக்குமா டே", அவர்கள் பேச்சில் இருக்கும் மறை பொருளும் எனக்குப் புரியாமல் இல்லை, இருந்தாலும் தென்காசியை உயர்த்திக் கூறியது எனக்குப் பிடித்திருந்தது. 

ஊரில் இருந்த ஒரு வாரமும் சொர்க்கம் . எங்கு சென்றாலும் சுத்தமான குளிர்ந்த காற்று, குளிப்பதில் இருந்து குடிப்பது வரை அனைத்திற்கும் சுத்தமான குற்றாலம் நீர், உறவினர்கள். அமைதியான வாழ்க்கை. சாயங்கலாம் ஆனால்  பெரிய கோவில் பள்ளியறை பூஜையும் கோவில் காற்றும். பால்ய நண்பர்கள். ஏகாந்தமானா வாழ்க்கை. தென்காசிக்கு நிகர் வேறு எந்த ஊரும் கிடையாது என்பது தான் என்னுடைய நிலை.


ஒருவார வாழ்க்கைக்குப் பின் இயந்திரமாவதற்காக மீண்டும் சென்னைக்கு திரும்பும் பொழுது ரயிலில் அருகில் இருந்த சிறுவன் பேசிக் கொண்டே வந்தான், திடிரென்று கேட்டான் 

"அண்ணா உங்களுக்கு சென்னை பிடிசிருக்காண்ணா"

சென்னை பிடிக்கவில்லை என்று சொல்ல மனம் வரவில்லை, என்ன பதில் கூறுவது என்றும் தோன்றவில்லை. சொல்லபோனால் சிலசமயங்களில் தென்காசி அளவிற்கு சென்னை பிடித்துப் போகும். மவுனமாய் சிரித்துவிட்டு மீண்டும் ஜெமோவின் யானை டாக்டரை படிக்கத் தொடங்கினேன். (உபயம் அரசன்

ஜெமோ சொல்வது போல் அறம் சுமக்கும் மனிதர்கள் சென்னையிலும் இருக்கிறார்கள். நம் கண்களில் குறைவான அளவிலேயே தென்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனம். 


23 May 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4


அத்தியாயம் 1 | அத்தியாயம் | அத்தியாயம் 3 

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை. மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தத இரவு எட்டு மணி . காற்றில் குளுமையும் கருமையும் முழுவதுமாய் படிந்து விட்ட போதும் 108ன் அவசர அலறல் சப்தம் மட்டும் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கிடைத்த மிக முக்கியமான மருத்துவத்தோழன். தனியார் மருத்துவ தெய்வங்கள் கைவிரிக்கையில் அரவணைத்து மருத்துவமளிக்கும் ஆபத்பாந்தவன்.

தற்போது கலெக்டர் பாலாஜியை தொலைத்துவிட்ட தவிப்பிலும், கைக்கு சிக்கிய மர்ப நபரை தப்பிக்கவிட்ட பரிதவிப்பிலும் காவல்துறையுடன் சேர்ந்து கையைப் பிசைந்து கொண்டிருந்தது.  



"கார்த்திக், பாலாஜி கடத்தப்பட்ட விஷயம், கடத்தப்பட்டதாவே இருக்கட்டும், நம்பிக்கையான பெரிய தெய்வத்துட்ட மட்டும் பாலாஜி பற்றிய தகவல் சொல்லுங்க", வினோத்.

"பாஸ், இந்நேரம் கேசவ பெருமாள் கூட்டத்துக்கு தகவல் கிடைச்சு தீவிரமா தேடத் தொடங்கி இருப்பாங்க,அதனால போலீஸ் கிட்ட பாலாஜி கடத்தப்படலைன்ற உண்மைய சொல்றதுல தப்பு இல்ல" 

"இல்ல விக்ரம், போலீஸ்க்கு தகவல் தெரிஞ்சா அது மீடியாவுக்கும் தெரிஞ்ச மாதிரி, மீடியா எல்லாருக்கும் நண்பன், அதனால இந்த விசயத்த இப்போதைக்கு எஸ்.பி கிட்ட மட்டும் சொல்லுவோம், எஸ்.பி ரொம்ப இண்டெலிஜெண்ட் அவர் அண்டர்ஸ்டான்ட் பண்ணிப்பாரு அண்ட் கேசவ பெருமாள் கூட்டம் கொஞ்சம் தலைய பிய்ச்சுகட்டுமே" கார்த்திக் அமைதியாக சிரித்துக் கொண்டே ஜீப்பை மருத்துவமனை பார்கிங்கினுள் செலுத்திக் கொண்டிருந்தான்.

'போலீஸ்க்கு தகவல் தெரிய வேண்டாம்ன்ற நம்ம பிளான்ல நீங்க எதிர்பார்த்த மாதிரியே கார்த்திக் விழுந்துட்டாரு. சந்தோசம் தான பாஸ்' என்ற தொனியில் விக்ரம் வினோத்தைப் பார்த்த பொழுது வினோத் மையமாய் தலையாட்டினான்.

மீடியாவின் கேமராக் கண்கள், மைக் மற்றும் கேள்விகள் அனைத்தையும் தவிர்த்து மூன்று பேரும் வேகவேகமாக மருத்துவமனையினுள் நுழைந்தார்கள். 

"வினோத் இன்னும் ரெண்டு நாளைக்கு வேணா மீடியாட்ட இருந்து உண்மைய மறைக்க முடியும், அதுக்கு முன்னாடி சம்திங் வீ நீட் டு டூ, இல்லாட்டா காவல்துறை மானம் கப்பலேரிரும், உயரதிகாரிகளக் கூட சமாளிச்சிரலாம் ஆனா இந்த மீடியா, அப்புறம் இவங்க கூட புதுசா சேர்ந்திருக்க பிளாக், எப்.பி, ட்விட்டர் நினச்சி பார்த்தாலே பயமா இருக்கு" மூச்சை பெரிதாக இழுத்துவிட்டான் கார்த்திக். 

கார்த்திக்கின் பேச்சிலும் உண்மை இல்லாமல் இல்லை, இருந்தாலும் அரசாங்கத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகள்; பாலாஜி கடத்தப்பட்டது பற்றிய உண்மையை மறைக்க வேண்டும் என்று வினோத்தை கட்டாயப்படுத்தியது.

பேசிக் கொண்டே ஐ.ஸி.யு வார்டை அடைந்தபோது, தகவல் தெரிவித்த எஸ்.ஐ, "இன்னிக்கு ஐ.ஸி.யு வார்ட்பாய் ட்யுட்டியில ஆறு பேரு இருந்தாங்க சார், இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற எல்லா வார்ட்பாய்க்கும் எல்லாரையும் தெரியும், புதுசா யாராவது வந்தாக் கூட ஈஸியா கண்டு பிடிச்சிருவாங்க, அப்படி புதுசா வந்தவன் கூட பேசிட்டு இருக்கும் போது அவங்களுக்குள்ள வாக்குவாதம் ஆகியிருக்கு, அந்நேரம் வார்ட்ல இருந்த நம்மாளுங்க என்னன்னு விசாரிக்கும் போது தப்பிச்சி ஓட பாத்ருக்கான்."

"துரத்தி போய் சட்டைய புடிச்சிருக்காங்க இருந்தாலும் சட்டைய கழட்டி எறிஞ்சிட்டு ஓடியிருக்கான், வெளியில இருந்த ப்ளு கலர் மாருதி ஆம்னியில ஏறி தப்பிசிருக்கான், துரத்துன ரெண்டு போலீசுமே கான்ஸ்டபில்ஸ். அவங்ககிட்ட கன் இல்ல, அதான் சூட் பண்ண முடியல" தேவையான தகவல் அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி முடித்தார் எஸ்.ஐ. இருந்தாலும் அவர் முகத்தில் தப்பவிட்ட பரிதவிப்பு முகத்தை பதட்டமாய்க் காட்டியது.      

மருத்துவமனை டீன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்.  கார்த்திக் அவரது தலைக்கு மேலிருந்த  சீசீடிவியைப் பார்த்துக் கொண்டே டீனிடம் "சார், இந்த சீசீடிவி மானிடர் ரூம் எங்க இருக்கு தெரியுமா?"

டீன் அருகில் இருந்த மருத்துவமனை நிர்வாகி, "சார் நேத்து நைட்ல இருந்து எந்த சீசீடிவியும் வொர்க் ஆகல, கேபிள் எல்லாம் எலி கடிச்சி போட்ட மாதிரி கட் ஆகியிருக்கு, சரி பண்றதுக்கு சென்னையில இருந்து தான் ஆள் வரணும்".

"லாஸ்ட் ஹோப், கை ரேகை எதாவது இருக்கா, அந்த ஆள் கிளவுஸ் எதுவும் போட்ருந்தானா" கார்த்திக் குரலில் சலிப்பு மட்டும் மிஞ்சி இருந்தது.

"கிளவுஸ் போட்ட மாதிரி தெரியல ஸார், அவன் தள்ளிட்டு வந்த வீல் சேர் அந்த இடத்துல அப்டியே இருக்கு, நிச்சயம் அதுல பிரிண்ட்ஸ் இருக்க சான்ஸ் இருக்கு"

"பாஸ் கேன் யு பீலீவ் திஸ்"

"அதான் எனக்கும் தெரியல விக்ரம், சீசீடிவிய அவுட் பண்ற அளவுக்கு பிளான் பண்ணினவன், கிளவுஸ் போடாமலா நடமாடியிருப்பான், சம் திங் டிபரண்ட்", வினோத் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தான். "கார்த்திக் பாரன்சிக் ஆளுங்க வந்தாங்களா"  

"கலெக்டர் பங்களால பிரின்ட்ஸ் எடுக்றதுக்காக என்கொயர் பண்ணினோம்,  பாரன்சிக் டீம்ல ரெண்டு பேரு லீவ்ல போயிருக்காங்க, இன்னொருத்தரு புதுசு, மதுரைக்கு மார்னிங்கே தகவல் சொல்லிட்டோம், இந்நேரம் வந்த்ருபாங்க" 

கைரகை நிபுணர்கள் வருவதற்குள் விக்ரமும் வினோத்தும் ஹாஸ்பிடலை ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டனர்.

"என்னதான் நம்மாளுங்க அரசாங்க ஆஸ்பத்திரின்னு ஒதுக்கினாலும் எமெர்ஜென்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கறதுல இவங்கள மிஞ்ச வேற ஆளு கிடையாது, ரொம்ப ஸ்பீடா வேல பார்பாங்க " வினோத் 

"எவ்வளவு காஸ்ட்லியான மருந்தா இருந்தாலும் ப்ரீ தான் பாஸ், எத்தனையோ உயிர காப்பாத்தின டாக்டர்ஸ் இங்க சர்வ சாதாரணமா நடமாடுறாங்க, பலரோட சுயமும் சேவையும் ஒருசிலரோட சுயநலத்தால ஈசியா மறஞ்சு போயிருது , இங்க இருக்க வார்ட் பாய்ல இருந்து ஆயா மொத்தக் கொண்டு எல்லாரையும் பணத்தால வாங்கிரலாம் பாஸ்"

"சம்பவ இடத்துல இருந்த வார்டுபாய விசாரிக்கணும்,ஏன் அவங்களுக்குள்ள வாக்குவாதம் வந்தது, வார்டுபாய் யாரையும் பணம் கொடுத்து வளைச்சு போட்ருக்காங்களா, எல்லா விசயத்தையும் விசாரிக்கணும்" , வினோத்.  

"குற்றம் செஞ்சா தப்பி ஓடுறதுக்கு இந்த ஆஸ்பத்திரியில பல வழி இருக்குது பாஸ், ரொம்ப பெரிய ஹாஸ்பிட்டல், ரொம்ப சுதந்திரமான ஹாஸ்பிடல், மார்னிங் வந்தப்பவே இந்த இடம் சரி இல்லைன்னு தோணினது. இந்த இடத்துல க்ளு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்" விக்ரம்.

"ஆனாலும் பாஸ் இவ்ளோ பெரிய உலகத்துல ஏதோ ஒரு மூலையில நமக்கான  ஒரு தடயத்த விட்டுட்டுப் போகாமலா இருப்பான்." விக்ரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார்த்திக் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்.

"வினோத், டிபார்ட்மெண்ட் ஆளுங்க பிரிண்ட்ஸ் எடுத்து இருக்காங்க, அதுல நிறைய கைரேகை இருக்கு, இந்த ஹாஸ்பிடலோட மத்த வார்ட்பாய்ஸ் ரேகையோட மேட்ச் பண்ணி பார்த்தோம், ரெண்டு ரேகை மட்டும் மேட்ச் ஆகல, இன்னும் டூ டேஸ்ல ரிசல்ட் சொல்றதா சொல்லிருக்காங்க"

"பரவாயில்ல கார்த்திக் ஸார்...ரொம்ப ஸ்பீடாவே இருக்கீங்க", என்று சொல்லிய விக்ரமை நோக்கி தீவிரமாய் பார்த்தான் கார்த்திக். 

"கார்த்திக், அந்த பிங்கர் பிரிண்ட்ஸ் போட்டோகாபி எங்களுக்கு கிடைக்குமா,எங்க எம்.டி வரதராஜன் கேட்டார்"

"இத வச்சி அவரு என்ன பண்ணப் போறாரு, ப்ரைவேட் பாரன்சிக் வேணாம் வினோத், நாங்க டீல் பண்ணிக்கிறோம்"

விக்ரம் கொஞ்சம் நக்கலாய் சிரித்துவிட்டு, "கார்த்திக் சார், வரதராஜன் பாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல இன்ஸ்பெக்ட்டரா இருந்து வீ.ஆர்.எஸ் வாங்கினவரு, 25 வருஷ சர்வீஸ், ரேகையே பார்த்தே குற்றவாளி பேரு சொல்ற அளவுக்கு தமிழ்நாட்டு குற்ற ரேகைகளுக்கும் அவருக்கும் ரொம்பப் பரிச்சியம்"

"ஓ ஓகே. ஐ வில் அரேஞ் பார் தி சாம்ப்ள்ஸ், கொஞ்சம் வொர்க் இருக்கு, நீங்க கிளம்பறதா இருந்தா கிளம்புங்க" வினோத்தின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான் கார்த்திக்.

"பாஸ் ஜென்ரல் சைக்காலஜி, இந்த கேஸ்ல நாம தலையிடறது கார்த்திக்குப் பிடிக்கல"

"யுவர் சைக்காலஜி இஸ் ராங், நீ தலையிடறது அவருக்கு பிடிக்கல"

"ஓகே அப்போ நா சென்னைக்கே கிளம்புறேன், ரம்யா என்ன பார்க்காம வாடிப் போயிருப்பா, ரம்யா... ஓ... மை ஸ்வீட் ஹார்ட்..."

"ரம்யா த்ரீ டைம்ஸ் போன் பண்ணி பாலாஜிய தான் கேட்டாலே தவிர உன்னப்பத்தி ஒரு வார்த்த கேட்கல"

"என் மொபைல் ஸ்விட்ச் ஆப் பாஸ், இல்லாட்டா எனக்கு தான் போன் பண்ணிருப்பா... சிரிக்காதீங்க பாஸ்... கமான். லீவ் மீ அலோன்"

"பாரன்சிக் சாம்ப்ள்ஸ எம்.டிக்கு நான் மெயில் பண்றேன், வார்ட் பாய், சிசிடிவிரூம் இங்க எதாவது க்ளு கிடைக்குமா பாரு அன்ட் சீக்கிரம் ரூம் வந்து சேரு, ஐ'ம் சோ டயர்ட்"

"ஐ'ம் சோ அப்சர்ட். மொக்க வேலையெல்லாம் என் தலையில தள்ளுங்க, கலெக்டர் பங்ளால நாளைக்கு தான் சாம்ப்ள்ஸ் எடுபாங்கலாம் எஸ்.ஐ பேசிட்டு இருந்தாரு"

"பாலாஜிய இப்போ பார்க்க முடியுமா விக்ரம்"

"இல்ல பாஸ் இப்ப வேணாம், இந்த இருட்டுல நம்ம பின்னாடி எவன் பாலோ பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது, மார்னிங் கூட்டிட்டுப் போறேன், இப்ப ரெஸ்ட் எடுங்க, வீ ல் மீட் லேட்டர்", சொல்லிவிட்டு சிசிடிவி ரூம் செல்லும் பாதையில் இருந்த இருளில் கலந்து மறைந்தான் விக்ரம்.   

விக்ரமின் நண்பன். அவன் வீட்டின் மாடியில் ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தான், நெல்லை ஜன்க்ஷன் அருகிலேயே வீடு, ரயில் தடதடக்கும் இரவுகளில் தான் இந்த ஏரியா மக்களின் உறக்கமும் கிறக்கமும் இருந்தாக வேண்டிய கட்டாயம். 

இருள் இருள் இருள் மட்டும் நிறைந்திருந்த நெல்லை வீதி, பெயர் தெரியவில்லை, எங்கிருந்தோ கேட்கும் நாய்களின் மிரட்டலான ஊளை, சின்ன சின்ன வண்டுகளின் ரீங்கராம், யாருமற்று அனாதையாய் கிடக்கும் அமைதியான வீதி, அருகில் விக்ரம், திடிரென்று அமைதியை கிழித்து எதிர்பாராத விதமாய் முன்னாள் குதித்த முரட்டு உருவம், நேராய் விக்ரமை குறிபார்த்து குத்த வந்து அருகில் இருந்த வினோத்தைப் பார்த்ததும் அவனை விடுத்து இவனை நோக்கி வேகமாய் மிக வேகமாய் நகர்ந்து, பாய்ந்து அருகில் வந்த கத்தி, எதிர்பாராத விதமாக இவனது முகத்தின் அருகில் மிக அருகில், டக்கென்று எழுந்து விட்டான். சொப்பனம், மிக கெட்ட சொப்பனம். மூச்சை வேகவேகமாக இழுத்தான் விட்டான்.மீண்டும் இழுத்தான்.  

எப்போது அறைக்கு வந்து எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை, பயணித்த களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டான், அருகில் விக்ரமும் தூங்கிக் கொண்டிருந்தான், அவன் வந்தது பற்றிய உணர்வும் வினோத்திற்கு இல்லை. கடந்த நாட்களின் ஒவ்வொரு சம்பவமும் மனதினுள் மாறி மாறி நகர்ந்து கொண்டே இருந்தது, தூங்குவான் திடிரென்று விழிப்பான் பின் தூங்குவான். ஒரு கட்டத்தில் முழுவதுமாய் தூங்கிவிட்டான். 

மீண்டும் உடலை யாரோ வேகமாக உலுக்குவது போன்ற உணர்வு, போர்வையை விலக்கி டக்கென்று கண் திறந்தவனை நோக்கி வேகமாய் மிக வேகமாய் நகர்ந்த ஒரு கத்தி. மிக அருகில் கண்ணை நோக்கிக் மிதந்து கொண்டிருந்தது. நேற்றைய கனவில் கண்டது போலவே இருந்த கத்தி, ஆனால் இது நிஜக் கத்தி, கனவில் கண்டது போலவே முகத்தின் அருகில் மிக அருகில் வந்த பொழுது நிலைமையை முழுவதுமாய் உணர்ந்திருந்தான்.

"என்ன பாஸ் நைட் செம ட்ரீமா, ஒரு சின்ன கத்திக்கே இப்படி பேயறஞ்ச மாதிரி பயபடுறீங்களே" ஒரு கையில் ஆப்பிலும், மறு கையில் கத்தியுமாக வினோத்தை எழுப்பிக் கொண்டிருந்தான் விக்ரம்.

"உங்க ஊர்ல இதுக்கு பேரு சின்ன கத்தியாடா... டைம் என்ன விக்ரம்" தூக்கம் வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்ட கையால் விக்ரமுக்கான குட்மார்னிங்கும் சேர்த்துக் கொண்டான்.

"டைம் இஸ் டென், எம்.டி டூ டைம்ஸ் போன் பண்ணிருந்தாரு, உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொன்னாரு, பட் உடனே கால் பண்ண சொன்னாரு" 

"சம் திங் வெரி இன்ட்ரெஸ்டிங் பாஸ். கதையில ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கும் போல" காதின் மிக அருகில் வந்து சரசம் பேசுவது போல் சொல்லிவிட்டு சட்டென நகர்ந்து சிரித்தான்.

என்ன இன்ட்ரெஸ்டிங் என்பது போல பார்த்த வினோத்தை நோக்கி, 

"மொதல்ல ரிபிரஷ் பண்ணிட்டு வாங்க, வீ ஹவ் லாட் ஆப் வொர்க்"   




                                                                                                       உன்னைத் தொடர்கிறேன் 

20 May 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 3


அத்தியாயம் 1 | அத்தியாயம் 2

'நீங்கள் அழைக்கும் எண் தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்குப் பின் முயற்சிக்கவும்.' 




'விக்ரம். ஆபத்து இவனுக்கா, இல்லை இவனை நம்பியதால் பாலாஜிக்கா? அருகில் இருக்க வேண்டிய நேரத்தில் எங்கே போய்த் தொலைந்தான்.'  வினோதிற்கு, பாலாஜியின் அளவிற்கு விக்ரமின் மீதும் கவலை ஏற்பட்டிருந்தது .

விக்ரம் மிக புத்திசாலி. நாம் யோசிப்பதை யோசித்து முடிக்கும் முன்பே செய்து முடிக்கும் அளவிற்கு புத்திசாலி. அனைவரின் கோபத்தையும் எளிதில் சம்பாதித்துவிடுவான். எல்லாராலும் அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிவதில்லை, 'சின்னபையனுக்கு இவ்ளோ திறமையா' என்ற பொறாமையின் வெளிபாடே மற்றவர்கள் விக்ரமின் மீது வெளிபடுத்தும் கோபத்திற்கு காரணமாய் இருக்கும். நிதானமாய் யோசித்துப் பார்த்தால் விக்ரமை கொண்டாடலாம், ஆனாலும் பெரியவர்களின் சின்னபுத்தி இளையவர்களின் சாதுர்யத்தை ஆராதிக்க விடுவதில்லை.       

"வினோத், இன்னும் எங்களுக்கு க்ளு எதுவும் கிடைக்கல, ஐ'ம் வெயிட்டிங் பார் யு, நீங்க எப்போ ரீச் ஆவீங்க" பெரிய தெய்வங்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட அவசரத்தில் இருந்தார் கார்த்திக், காக்கி அஸ்திரங்களும், வெள்ளை வஸ்திரங்களும் இந்நேரம் அவரை துகிலுரிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஒரு ஆபத்பாந்தவன் அவசரத் தேவையாய் இருக்கலாம், அந்த அவசரம் அவரது பேச்சில் தெரிந்தது.

"வீரவாஞ்சி தாண்டி பத்து நிமிஷம் ஆகுது, ஸ்டேஷன் வந்ததும் ஆட்டோ புடிச்சி நேரா ஹாஸ்பிடல் வாரேன், வீ வில் மீட் தேர்." 

"வேணாம் வினோத், நானே ஸ்டேஷன் வாரேன், வைட் ஷர்ட், காக்கி பேன்ட்"

"நீங்க சொன்ன குறிப்புல பல தலை தென்படும் கார்த்திக், நான் இறங்கினதும் உங்களுக்குக் கால் பண்றேன். அப்படி இல்லாட்டா எஸ் 7,அங்க வந்த்ருங்க" 

ரயில் மெதுவாக நெல்லை காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருந்தது. பெரிய ரயில்வே ஸ்டேஷன் என்றாலும் பிரமாண்டமான ஸ்டேஷன் இல்லை. சமீபகாலமாய் 24X7 என்ற அளவில் உற்சாகமாக இயங்கத் தொடங்கியுள்ளது. 

கொஞ்சம் பணக்காரத்தனம் தெரிந்த மனிதர்கள் ஏசிப்பெட்டியின் வருகைக்காக தங்கள் அரைகால் சட்டைகளுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரணமான மனிதர்கள் அவர்களைப் போன்ற சாதரான மனிதர்களை வரவேற்க, நலம் விசாரிக்க, கட்டி அணைக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள். 

பெரும்பாலானா கூட்டம் மதுரையிலேயே இறங்கிவிட்டதால் குறைவான மக்களே தங்களை குருவாயூரில் இருந்து விடுவித்துக் கொண்டார்கள். வினோத்தை அடையாளம் கண்டுகொண்ட கார்த்திக், நடந்து வந்த வேகத்துடனேயே அவசரமான ஒரு புன்னகையையும் சேர்த்துக் கொண்டார். 


கார்த்திக். துல்லியமாக 5.எட்டடி உயரம் இருக்கலாம், உயரத்திற்கேற்ற எடை. இளமையும் அழகும் கார்த்திக்கை கொஞ்சம் கம்பீரமாய், தோரணையாய்க்  காட்டியது, அளவாய் வெட்டப்பட்ட தலைமுடி. மாநிறத்தில் கொஞ்சம் உயர்ரக நிறம். மப்டிக்கே உரிய காக்கி பேண்ட், வெள்ளை சட்டை. ஓரம் ஒதுக்கப்படாமல்  முறுக்கிக் கொண்டிருக்கும் மீசை மட்டும் சற்றே அன்னியமாய்.

அவருடனான முதல் கைகுலுக்கலிலேயே  அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று விசாரிக்க வேண்டும். மிகபெரிய கருப்பு கண்ணாடியை தன் வெள்ளை சட்டையில் சொருகியிருந்தார்.

"ஹல்லோ கார்த்திக்" என்று சிரித்துக் கொண்டே நீட்டிய வினோத்தின் கையை மற்றொரு கை வேகமாக பலவந்தமாக பற்றியிழுத்து "ஹலோ வினோத் வெல்கம் டூ நெல்லை" என்றது புன்னகை மாறாமல்.    

திடிரென கார்த்திக்கின் பின்னால் இருந்து தோன்றி வலுக்கட்டாயமாக கையை  இழுத்து நிகழ்ந்த ஒரு இழுவையான வரவேற்பை வினோத்தும் கார்த்திக்கும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

"என்ன பாஸ் திருடன பார்த்த மாதிரி இப்படி முழிக்கிறீங்க, சாயங்காலம் S7க்கு நாந்தான வாறேன்னு சொல்லிருந்தேன்... ஹாய் கார்த்திக்...உங்கள ஹாஸ்பிட்டல்ல தேடுனா இங்க என்ன பண்ணுறீங்க"

விக்ரமின் இயல்பான பேச்சு கார்த்திக்கின் முகத்தை மேலும் சுருங்கச் செய்து கொண்டிருந்தது.

"பாஸ் அவர அப்படி பார்க்க வேணாம்ன்னு சொல்லுங்க" 

"விக்ரம் பீ சீரியஸ், உன் மொபைல் ஏன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது, எத்தன தடவ நானும் கார்த்திக்கும் ட்ரை பண்றது.  பாலாஜிய ஹாஸ்பிடல்ல இருந்து கடத்திட்டாங்களாம், நீ கூட பிரச்சனையில மாட்டிட்டியோன்னு பயந்துட்டு இருக்கோம்" , வினோத்

"விக்ரம் இவ்ளோ நேரம் எங்க போனீங்க, வொய் நோ ரெஸ்பான்ஸ், டூ யு நோ வாட் இஸ் ஹாப்பனிங் ?", கார்த்திக் கேள்விகளை அடுக்கினார். 

"ஒன்னு சொன்னா ரெண்டு பேரும் கோச்சுக்க மாட்டீங்களே.. பாலாஜிய நான் தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கடத்தினேன்..."  இயல்பாக கூறிவிட்டு குழந்தையைப் போல்  போல் விக்ரம் சிரித்ததை புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார் கார்த்திக்.

"இதுவே வேற யாராவது இப்படி பேசியிருந்தா தோல உறிச்சிருப்பேன்", கார்த்திக். 

"இப்போ ஒன்னும் கெட்டுப் போகல, கூட்டிட்டுப் போயி உறிங்க கார்த்திக், விக்ரம் ஜஸ்ட் பீ சீரியஸ், வாட் ஹாப்பெண்ட்"

"ஓகே பாஸ் ஐ'ம் சீரியஸ், பாலாஜி பத்திரமா, ரொம்ப பத்திரமா இருக்காரு, ஸ்டேஷன்க்கு வெளியில, அந்த விநாயகர் கோவில் பக்கம் காபி ரொம்ப நல்லா இருக்கும், கமான் காபி குடிச்சிட்டே பேசலாம்."

"கார்த்திக், ப்ளீஸ் டோன்ட் மைண்ட் திஸ், எனக்கு இவனப் பத்தி தெரியும், கொஞ்சம் ஆர்வக் கோளாறு பட் நம்பலாம், வாங்க காபி குடிச்சிட்டே பேசலாம்"

" திஸ் இஸ் இரிடேட்டிங் மீ வினோத்" கார்த்திக் வேறு வழியில்லாமல் வினோத்துடன் நகரத் தொடங்கினான். 

"அண்ணாச்சி, மூணு பெரிய கிளாஸ் காபி... நல்ல சூடா.." அண்ணாச்சியிடம் அலறிவிட்டு வினோத்தை நோக்கினான் விக்ரம் 

"சாயங்கால தலவலிய சமாளிக்க காப்பி இஸ் அவர் எனர்ஜி இல்ல பாஸ். ஸ்டேஷன்க்கு வெளியில் இருக்குற இந்த கடை நெல்லை பேமஸ், செம ரிப்ரஷா இருக்கும்."     

"விக்ரம்..பாலாஜிய எங்க? இப்ப எப்டி இருக்கார்?", கார்த்திக்கால் வேறு எதிலும் மனதை செலுத்த முடியவில்லை, அதே கேள்விகள்,ஆனால் பலமுறை கேட்டும் கிடைக்கப்பெறாத பதிலுக்காக பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தார்.     

"மொதல்ல இருந்தே சொல்றேன் கார்த்திக், அப்பறம் என்ன திட்றதும், திட்டாததும் உங்க விருப்பம்"

"மார்னிங் ஹாஸ்பிடல்க்குப் போய் பாலாஜிய பார்த்தேன், தலையிலையும் கால்லயும் நல்ல அடி, முழிச்சாலும் நடக்கறதுக்கு ஒரு மாசமாது ஆகும். நம்ம கார்த்திக் நேத்து நடந்தத விலாவாரியா சொன்னாரு, மத்தியானம் அவர கூட்டிட்டு கலெக்டர் பங்களாவுக்கு போனேன்"

கார்த்திக், "எனக்கு எஸ்பிட்ட இருந்து போன் வந்தது, கலெக்டர் விசயமா ரொம்ப அர்ஜெண்ட் மீட்டிங், சோ உடனே கிளம்பிட்டேன், இப்போ கலெக்டர் எங்க அத மட்டும் சொல்லு மொதல்ல்ல..." வார்த்தையின் தீவிரம் அதிகமாகியது.

" கொஞ்சம் பொறுமையா இருங்க, விலாவாரியா சொல்லிட்டு இருக்கேன்ல" விக்ரமும் கொஞ்சம் எரிஞ்சலடைந்தான். 

"போலீஸ் தரப்புல  கலெக்டர மிரட்டுறதுக்கா நடந்த வெறும் கொலை முயற்சின்னு எப்.ஐ.ஆர் பைல் ஆகியிருக்கு. இது வெறும் கொலை முயற்சி இல்ல, அவர கொலை பண்றதுக்ககாவே நடந்த முயற்சி, நிச்சயமா பாலாஜி அவங்க கூட சண்ட போட்ருகாறு, ரூம்ல இருந்த அலாராம் வொர்க் ஆகல, சண்டை போட்டுட்டே ரூம் கதவ திறந்து செக்யுரிட்டிய கூப்பிட்டு இருக்காரு, போலீஸ பார்த்ததும் கொலை பண்ண வந்தவங்க பாதியிலேயே விட்டுட்டு ஓடிட்டாங்க, கொலை, கொலைமுயற்சியா மாறி இருக்கு."

கார்த்திக், "இது கொலை முயற்சி தான், ரொம்ப நாளாவே கேசவ பெருமாள், கலக்ட்டர விலைக்கு வாங்க முயற்சி பண்றாரு. அவருக்கு தேவ கலக்ட்டர் தான், அவரோட உயிர் இல்ல. போன்ல மிரட்டி பணியாதவர, ஆள் வச்சி அடிச்சா பணிஞ்சிருவாருன்னு கணக்கு போட்டுருக்காரு".

வினோத் "கார்த்திக், விக்ரம் முழுசா பேசி முடிக்கட்டும்"   

விக்ரம், "கம்பவுண்ட் சுவர உடச்சி உள்ள வந்தததா போலீஸ் சொன்னாங்க,  சுவர் உயரம் ரொம்ப அதிகம், பட் அந்த பெரிய சுவர ஓவர் நைட்ல உடைக்கிறது ரொம்ப கஷ்டம்."

"சுவர உடைக்கறதுக்கு அவங்க பயன்படுத்தினது கடப்பாறையோ கம்பியோ இல்ல, கொஞ்சம் அடுத்த லெவல், இல்ல புதுவகையான அச்சுறுத்தல், சைலண்ட் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் யூஸ் பண்ணிருக்காங்க, பாமோட அதிர்ச்சி சுவர் முழுசும் பரவி இருக்கு, செங்கல் உடைப்பு ரொம்ப தூரத்துக்கு சிதறியிருக்கு. அவங்க யூஸ் பண்ணினது வெறும் பில்டிங் உடைக்கிற கெமிகல்ஸா இல்ல எக்ஸ்ப்ளோசிவ்ஸான்னு கண்டுபிடிக்கணும், இதெல்லாம் போலீஸ் குறிப்புகள்ள மிஸ்ஸிங்", கார்த்திக்கை கொஞ்சம் துருதுருவென்று பார்த்தான் விக்ரம்.  

"எதிரி கையில அருவா கத்தி இருந்தா கூட இவ்ளோ பதறி இருக்க மாட்டேன்.  பங்களாவுல கொலைபண்ண முயற்சி பண்ணினவங்க நிச்சயமா ஹாஸ்பிடல்க்கும் வருவாங்கன்ற  எச்சரிக்கை உணர்வு என்ன துரத்திட்டே இருந்தது. உடனே கார்த்திக்கு போன் பண்ணினேன் அவரு எடுக்கல, மீட்டிங்ல பிசியா இருந்த்தார்"

" சோ", வினோத்   

"இங்க இருக்குற மத்த போலீஸ் யாரையும் நம்பி என்னால களத்துல இறங்க முடியல, என்னோட ரொம்ப நம்பிக்கையான பிரண்ட்ஸ் வச்சி பாலாஜிய ஹாஸ்பிடல் கடத்தினேன், போலீஸ் பாதுகாப்பு ரொம்ப அமோகமா இருந்தததாலா பாலாஜிய இடம் மாத்துறது ஒன்னும் அவ்ளோ பெரிய சவாலா இல்ல. முகம் தெரிஞ்ச எதிரிக்கு தெரியாத இடத்துல இப்போ பாலாஜி  பத்திரமா இருக்கார்"   

"மொபைல் சார்ஜ் இல்லாம ஆப் ஆனது மட்டும் தான் தற்செயல் மத்த எல்லாமே என்செயல் தான். இடம் மாத்தினதும் திரும்பவும் ஹாஸ்பிடல் வந்தேன் கார்த்திக் இல்ல, பாஸ்ஸ கூப்பிடலாம்ன்னு இங்க வந்தேன், நீங்க ரெண்டு பெரும் இங்க இருக்கீங்க."

"கார்த்திக் சார் உங்காளுங்க இருக்கும் போது, உங்க பாதுகாப்புல இருந்த பாலாஜிய தான் நான் இடம் மாத்தினேன். கிண்டலுக்காக சொல்லல, பணம் எல்லா இடத்துலையும் சர்வசாதாரணமா விளையாடுது, நீங்க கைகாட்டாத எந்த போலீஸையும் நாங்க நம்ப தயாரா இல்ல, இத நான் சொல்ல, ஒருமுற பாலாஜியே சொல்லிருக்காரு." 

" பாலாஜி இருந்த இடத்துல வேற ஒருத்தனையோ இல்ல ஒரு பிணத்தையோ வச்சி டெஸ்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சேன், ஆனா எனக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு கிடையாது. இப்போதைக்கு வேற இடத்துக்கு தான் மாத்த முடிஞ்சது"   

"இன்னும் அவரு மயக்கத்துல தான் இருக்காரு, ஆனா பாதுகாப்பா இருகாரு, என்னால உறுதியா சொல்ல முடியும், அவரோட உயிருக்கு ஆபத்து இருக்கு, கொலைகார எதிரிய சம்பாதிக்கிற அளவுக்கு எதோ ஒரு ரகசியம் பாலாஜிட்ட மறஞ்சு இருக்கு.. எதிரிய கண்டுபிடிக்கணும் அதோட அந்த ரகசியத்தையும் சேர்த்து கண்டுபிடிக்கணும்" 

வினோத், யாருக்கு பரிந்து பேசுவது என்று தெரியாத இரண்டுகட்டான் மனநிலையில் கார்த்திக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, விக்ரம் கார்த்திக்கின் சட்டையிலிருந்த கருப்பு கண்ணாடியை அணிந்து தலையை கலைத்து விட்டுக் கொண்டிருந்தான். இந்த செயல் கார்த்திக்கை இன்னும் கோவப்படுதியது.  


"ரொம்ப அதிகமா கற்பன பண்ணியிருக்க விக்ரம், இது உனக்கு தேவை இல்லாத வேல, எங்களுக்கு தேவை இல்லாதா டென்சன், என்னிகாது ஒருநாள் நீ இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்" திடிரென வெளிப்பட்ட கோவத்தில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் விருட்டென ஜீப்பில் ஏறி புறப்படுவதற்கு தயாராக, இஞ்சினுக்கு கட்டளை பிறப்பித்த நேரம்,  


ஜீப்பில் இருந்த கண்ட்ரோல் ரூம் போன் வேகமாக அலறியது. 

"ஸார், பாளையங்கோட்டை எஸ்.ஐ ஸ்பீகிங் சார், ஓவர்"

"எஸ்"

"சந்தேகப்படுற மாதிரி நடமாடுன ஒரு வார்டுபாய பிடிச்சி விசாரிக்கும் போது தப்பிச்சி ஓடிட்டான் ஸார், அவன்கிட்ட இருந்த பாய்சனஸ் டிரக்ஸ் அண்ட் ஒரு கத்தி பறிமுதல் பண்ணிருக்கோம், பட் ஆள் எஸ்கேப். கொஞ்சம் உடனே வர முடியுமா ஸார். ஓவர்"            





                                                                                                          உன்னைத் தொடர்கிறேன்