26 Apr 2013

கடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்


பேஸ்புக் சாதாரணர்களையும் அசாதாரணர்களுடன் எளிதில் இணைத்துவிடுகிறது. பல பெரிய மனிதர்களுடன் எளிதில் தொடர்பு கொண்டுவிட முடிகிறது. 

ழுத்தாளர் மற்றும் இயக்குனர் சுகாவின் பேஸ்புக் மூலம் பாட்டையா பாரதிமணி அவர்களுடன் நட்பாக முடிந்தது. நட்பு என்பது சுகா மற்றும் பாட்டையாவுடன் ஒரே அறையில் உறங்கி, ஒரே தட்டில் உண்டு ப்ளா ப்ளா ப்ளா என்னும் படியான நட்பு அல்ல, "எனக்கு ஐ.ஜி யத் தெரியும் ஆனா அவருக்கு" எனும்படியான தெய்வீக நட்பு. இந்த தெய்வீகமான நட்பிற்குக் காரணம் பேஸ்புக் என்பதாலேயே அந்த முதல்வரியை எழுதினேன்.



பாட்டையா பேஸ்புக்கில் "கடவுள் வந்திருந்தார்" நாடகம் குறித்து பகிர்ந்திருந்த பொழுதே எப்பாடுபட்டாவது பார்த்தே தீருவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், முதல் காரணம் நாடகாசிரியர் வாத்தியார் சுஜாதா, இரண்டாவது காரணம் சுகாவிற்கும் பாட்டையாவிற்கும் இடையே நிகழும் பேஸ்புக் புகழ் நெல்லைத் தமிழ் உரையாடல்.

நாடகங்கள் மீது தீராக் காதல் கொண்ட மெட்ராஸ் பவன் சிவக்குமாரும், வாத்தியார் மின்னல் வரிகள் பாலகணேஷுக்கும் வரமுடியவில்லை, அதற்கு முக்கிய காரணம் நாடகம் அரங்கேறிய தினம் சென்னை அசுரத்தனமாக இயங்கக் கூடிய வேலை தினம். கணேஷ் சார் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் அலுவல் இடம் கொடாததால் அவரால் வரமுடியாமல் போயிற்று. இதைப் போல் நாடகத்தைத் தவற விட்ட சுஜாதா மற்றும் பாட்டையாவின் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். பாட்டையா இதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது என் முதல் விண்ணப்பம். (வார இறுதியில் அனைத்து நாடக அரங்கங்களும் நிறைந்துவிட்ட காரணத்தால் வாரநாளில் நாடகம் அரங்கேற்றப்பட்டது என்பது செவி வழித் தகவல்). 

னது வேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டு எக்மோர் நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். சுமார் 35 கி.மீ. எப்படி பயணித்தேன் என்பதை எழுதினால் அது நாடோடி எக்ஸ்பிரஸாக மாறிவிடும் அபாயம் உள்ளதால் கடவுளை சந்திக்கக் கிளம்பி விடுவோம் .       

எனது தங்கை ஸ்ரீ எனக்கு முன்னமே அரங்கத்தை அடைந்திருந்ததால், அரங்க மையத்தில் வசதியான ஒரு இருக்கை கிடைத்தது. வாழ்க ஸ்ரீமதி. அரங்கம் முழுவதும் பெரும்பாலும் இளைஞர்களாலேயே நிறைந்திருந்தது. ஆரம்பம் முதலே அரங்கம் நிறையத் தொடங்கியிருந்தது. பிரிடீஷ் அரசாங்கத்து கட்டடம், கட்டட அமைப்பு, உள்ளரங்க அமைப்பு, அசந்துவிட்டேன், அத்தனை அருமையாக இருந்தது. எதோ ஒரு அரண்மனை அரங்கத்தில் அமர்ந்து நாடகம் பார்ப்பது போன்ற உணர்வு.

ரியாக ஆறரை மணிக்கு அரங்கினுள் கடவுள் வரத் தொடங்கினார். ஸ்ரீனிவாசனாக பாரதிமணி, அவர்தான் கதையின் நாயகன். பொருத்தமான பாத்திரம் மற்றும் உடலமைப்பு.   

சுருக்கமாக கதை சொன்னால், ரிட்டயர் ஆகி வீட்டில் இருக்கும் ஸ்ரீநிவாசன், சினிமா மற்றும் டிவி பைத்தியமான மனைவி மற்றும் மகள் வசு , மகளை டாவடிக்கும் மாடி வீட்டு சுந்தர். வசு சுந்தரை வெறுக்கிறாள் காரணம் அவள் அவளது அலுவலக மானேஜரை விரும்புகிறாள், இதை அறிந்து சுந்தர் செய்யும் கலாட்டா. இந்த கல்யாணத்தை தடுப்பதாக சொல்லி சவால் விடுகிறான். இப்படி ஆரம்பமாகிறது கதை.

வ்வேளையில் சுந்தர், சுஜாதா என்னும் பெங்களூர் தமிழ் எழுத்தாளர் எழுதிய எதிர்கால மனிதன் என்ற புத்தகத்தை ஸ்ரீனிவாசனுக்கு கொடுக்க, ஸ்ரீநிவாசன் அதைபடிக்கும் பொழுதே எதிர்கால மனிதன் இவர் முன் பறக்கும் தட்டில் வந்து இறங்குகிறான்.

திர்கால மனிதனை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதை பற்றி சுஜாதா எழுதியிருக்கும் அந்த வாசகம் மிக அருமை, கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்  எதிர்கால மனிதனை நாம் சந்திபதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது. 

விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் கால எந்திரம் கண்டுபிடிக்கலாம், ஒருவேளை கண்டுபிடித்தால் அவன் இறந்த காலத்திற்கு வரும் பொழுது நம்மை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம், அதாவது நம்மால் அவனை இப்போது சந்திக்க முடியாது, ஆனால் அவனால் அப்போது நம்மை சந்திக்க முடியும்.               



ப்படி சந்திக்க முடிந்த எதிர்கால மனிதனை ஸ்ரீனிவாசனால் மட்டுமே பார்க்க முடியும் பேச முடியும், தொட முடியும், அவன் உட்கொள்ளும் கரண்டை ஷாக்காக தன்  உடம்பில் வாங்கிக் கத்த முடியும். இதனால் எதிர்கால மனிதனுடன் ஸ்ரீநிவாசன் பேசும் பொழுதெலாம் அவரைச் சுற்றி நிற்பவர்கள் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று நினைக்கிறார்கள்.

குடும்பத்திற்குள் பல குழப்பம் எழுகிறது, இதைத் தவிர்க்க  எதிர்கால மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். ஒரு மணி அடித்தால் வீட்டினுள் வர வேண்டும், இரண்டடித்தால் போய்விட வேண்டும். இதை சுந்தர் கவனித்து விட, சுந்தரிடம் மட்டும் உண்மையைக் கூறுகிறார். அவன் நம்ப முடியாமல் நம்புகிறான்.       




ந்நேரத்தில் வசுவின் மேனேஜர் அவளைப் பெண்பார்க்க குடும்பத்துடன் வருகிறான். சுந்தர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு சுட்டிக் குழந்தையின் மூலம் மணியடித்து எதிர்கால மனிதனை காட்சிக்குள் கொண்டு வர, ஸ்ரீனிவாசன் அவனை வெளியே போகுமாறு திட்ட, பெரும் ரகளையாகிறது. நிச்சயதார்த்தம் தடையாகிறது. பைத்தியம் முற்றிவிட்டது என்று நினைத்து சாமியார் வைத்து மந்திரிக்கிறார்கள், மருத்துவர் வைத்து வைத்தியம் பார்கிறார்கள், ஆனால் சுந்தர் புத்திசாலித்தனத்தால் எதிர்கால மனிதனைக் கொண்டு மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக மாற்றி ஸ்ரீனிவாசனை சாமியாராக்கி விடுகிறான். கிளைமாக்ஸ் என்ன என்பது சஸ்பென்ஸ்.

சுஜாதாவின் அறிவியல் புதினம் சார்ந்த நாடகம்.  ட்ரேட்மார்க் வசனங்கள் இருக்கும் கலகலப்பான நாடகம். போகிறபோக்கில் மக்களின் மூடநம்பிக்கைகளை அற்புதமாக நையாண்டி செய்திருப்பார்.

ரு மேடை நாடகத்தை எப்படி திறம்பட எழுத வேண்டும் என்பதற்கு இந்நாடகம் மிக சிறந்த உதாரணம். காரணம் மொத்த நாடகத்தையும் ஒரே ஒரு அறையில் நடப்பது போல் எழுதியிருப்பார் சுஜாதா.       

நாடகம் படிக்க கொஞ்சம் பிரம்மிப்பாய் இருந்தாலும் பாட்டையா தனது குழுவினருடன் அசத்தியுள்ளார். இந்த வயதிலும் மனிதர் மிக மிக சுறுசுறுப்பாக மேடையில் ஆடியோடுகிறார். கதாபாத்திரங்கள் அத்தனைபேரும் அசத்தலாக அதனுடன் பொருந்திப் போகின்றனர். ஒலி ஒளி அமைப்புகள் குறைவில்லை, தங்கள் பணியை திறம்பட செய்துள்ளனர். மேடை அமைப்பு எளிமையாக அருமையாக இருந்தது. நாடகத்தில் இடைவேளை விட்டதை முதல்முறையாக இங்குதான் பார்த்தேன்.

திர்கால மனிதனாக வந்த ஜோ, மாடி வீட்டு சுந்தர், சுட்டிக் குழந்தையாக வந்த சிறுமி இவர்களது நடிப்பை வெகுவாய் ரசித்தேன். சாமியாரை வந்தவரது உடல்மொழி கச்சிதம். 

நாடகத்தில் எதாவது ஒரு இடத்தில வசனம் மறந்தாலோ மாறினாலோ காட்சி அமைப்பு சொதப்பி விட வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சொதப்பல் இங்கு இல்லை, நான் கவனித்த வரையில் ஒரே ஒரு இடத்தில ஒருவர் மட்டும் தடுமாறினாலும் அடுத்த நகர்வுகள் கச்சிதமாக நகரத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் பல வசனங்களில் அரங்கமே கைதட்டி அதிர்ந்தது. நாடகத்திற்கு பாதி பலம் சுஜாதா என்றால் மீதி பலம் பாட்டையாவும் அவரது குழுவினரும் தான்.



நாடகம் முடிந்ததும் மொத்த அரங்கமும் எழுத்து நின்று பாட்டையா குழுவினரை வாழ்த்தியது தான் பாட்டையாவுக்குக் கிடைத்த உண்மையான மகத்தான வெற்றி. 

பாட்டையா மற்றும் சுகாவை சந்திக்கலாமா என்று நினைத்தேன், நாடகம் முடியும் பொழுது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. ஸ்ரீ ஹாஸ்டல் செல்ல வேண்டும், நான் மேடவாக்கம் செல்ல வேண்டும், காலம் ஒத்துழையாததால் மானசீகமாக சந்தித்து விட்டு கிளம்பினோம்.     

நாடகம் நடக்கும் பொழுதும், முடிந்து வெளியே வந்த பின்னும் ஸ்ரீ அவ்வப்போது கூறிக் கொண்டே இருந்தாள் "வாவ் சூப்பர்". இந்த நாடகத்தை சுஜாதா பார்த்திருந்தாலும் நிச்சயம் சொல்லி இருப்பார் "வாவ் சூப்பர்".


24 Apr 2013

திருநவேலி அல்வா

"எம்மா திங்கதுக்கு ஏதாது இருக்கா"

"ஒன்னுமே இல்ல , வேணும்னா போய் ஆளுக்கு அம்பது அல்வாவும் மிச்சரும் வாங்கிட்டு வா"

வீட்டிலிருந்து பழைய ஆஸ்பத்திரி லாலா கடை நோக்கி கால்கள் வேகமாக நடக்கும் அல்லது ஓடும். கடையை அடைந்தது மூச்சு வாங்கிக் கொண்டே... 

"அல்வா சூடா இருக்கா, நேத்து செஞ்ச அல்வான்னா வேணாம்ன்னே "

"அந்த அல்வா நேத்தே காலியாயிட்டுடே, இத இப்ப தான் அடுப்புல இருந்து இறக்கியிருக்கேன், சுட சுட இருக்கு, பாரு எப்படி ஆவி பறக்குன்னு"

"அப்டியே அம்பது மிச்சரும் குடுங்க, அல்வா நாலு மிச்சர் நாலு"

வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும்.   


வீட்டிற்கு வந்து சூடாக இருக்கும் அந்த அல்வா பார்சலை பிரிக்கும் பொழுதே கை கொதிக்கும். தினமலரையோ தினத்தந்தியையோ கொண்டு சுருட்டப்பட்ட அல்வா பொட்டலம், அதனுள் சுருட்டபட்ட வாழை இலை, அதனுள் வழுவழு அல்வாகொஞ்சம் வேகமாக வாழை இலையைப் பிரித்தால் அவ்வளவு தான் ஆசையாக வாங்கிய அல்வா நழுவி தரையில் உருளத் தொடங்கி விடும்.


ருவேளை நழுவாமல் கையில் சிக்கிய அல்வாவை எடுத்த வேகத்தில் வாயில் வைத்தாலும் அவ்வளவு தான், அல்வாவின் சூடு மொத்தமாக நாக்கைப் பதம் பார்த்துவிடும்ஐந்து நிமிடத்திற்கு வாயைத் திறந்து காத்தாட நின்றால் மட்டுமே சூடு குறையும்.

ல்வாவின் சூடு தாங்காமல் வாழை இலையின் நிறமே மாறி இருக்கும்அல்வாவின் மணமும், சுடசுட கட்டியதால் ஏற்பட்ட வாழை இலையின் மணமும் மனதை என்னவோ செய்யும். அல்வாவின் சுவை வாழை இலையிலும், வாழை இலையின் சுவை அல்வாவிலும் ஒட்டிக் கொண்டு விடும். இப்போதெல்லாம் எந்தக் கடையிலுமே வாழையில் அல்வா தருவதில்லை. பிளாஸ்டிக் தாளில் தான் தருகிறார்கள். வாழை இலை அல்வா சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அதன் சுவை மட்டும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.      

ல்வாவை சைடிஷ் இல்லமால் சாப்பிட்டால் சுவை நன்றாய் இருக்காதுஅல்வாவைப் பிரிப்பதற்கு முன், வாங்கிவந்த மிச்சரை முதலில் பிரிக்க வேண்டும். கொஞ்சம் அல்வாவைப் பிய்த்து மிச்சரில் நன்கு புரட்டி, மிச்சரில் இருக்கும் சகலவிதமான வஸ்துகளும் அல்வாவின் முதுகில் ஏறிக் கொண்டபின் மொருமொருமென்று அந்த அல்வாவை சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான்.  

ம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம் திகட்டவே திகட்டாது. அல்வா திகட்டக்கூடது என்பதற்காகவே வந்த ஆபத்பாந்தவன் தான் மிச்சர்.

கொஞ்சம் பெரியவனாகி மேல்நிலைப் வகுப்பு சென்ற பொழுது வீட்டில் அனுமதி வாங்கி அல்வா சாப்பிடும் நாட்களும் மலையேறிவிட்டது. அல்வா சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலே எதாவது ஒரு லாலா கடைக்கு சென்று விடுவோம். டீ கடையில் வடை பஜ்ஜி சாப்பிடுவது போல் தான் லாலா கடையில் அல்வா சாப்பிடுவது, வீட்டிற்கு வாங்கி வந்து தான் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, சுட சுட கடை வாசலிலேயே நின்று சாப்பிடலாம்இன்றும் கூட நெல்லையில் பல கடைகளின் வாசலில் அல்வா சாப்பிடுபவர்களைப் பார்க்கலாம்

முன்பெல்லாம் அல்வா சாப்பிட்டு முடித்தவுடன், கை நிறைய ஒரு கொத்து மிச்சரையும் தருவார்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நாமே கேட்டால் மட்டுமே முகம் சுளித்துக் கொண்டு தருவார்கள், இன்றோ காசு கொடுத்தால் மட்டுமே ஒரு கொத்து  மிச்சர்  கிடைக்கிறது

ஜாருக்கு சென்றால் பெரும்பாலும் பெரிய லாலா கடைக்கு சென்று அல்வா சாப்பிடாமல் திரும்பியது இல்லைதென்காசி பெரிய லாலா கடை அல்வாவை விரும்பி வாங்கி செல்பவர்கள் அதிகம். எப்போதுமே பெரிய லாலா கடையில் கூட்டம் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூட அல்வா ஏற்றுமதி செய்வதாக சொன்னார்கள், அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை

ருட்டுக்கடை அல்வாவோ அல்லது நெல்லையில் இருந்து வாங்கி வந்த  அல்வாவோ அவற்றை  நள்ளிரவில் அரை தூக்கத்தில் சாப்பிட்ட நாட்களே அதிகம். வீட்டில் இருந்து யாராவது நெல்லை சென்றாலே அன்று வீட்டிற்கு அல்வா வரப்போவது நிச்சயம். அல்வாவின் சூடு தணியும் முன் சாப்பிட வேண்டும் என்பதற்காக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட எழுப்பி அல்வா ஊட்டிவிட சாப்பிட்ட நியாபகங்கள் இருக்கிறது.   

த்யா அண்ணனுடன் ஒருமுறை குற்றாலம் சென்றிருந்த பொழுது குற்றாலநாதர் கோவிலுக்குப் அருகே இருக்கும் முதல் சந்தில் இரண்டாவதாக இருக்கும் வெங்கடேஸ்வரா அல்வா கடைக்கு அழைத்துச் சென்றார்குற்றால சீசனில் குளித்துவிட்டு சூடாக நெய் அல்வா சாப்பிட்டால் எவ்வவளவு அருமையாக இருக்கும். இன்றுவரை குற்றாலம் சென்றால் வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடையில் சாப்பிடாமல் திரும்புவது கிடையாது. மெயின் பால்ஸ் அருகே பல வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடை உள்ளது, நான் கூறிய கடையில் மட்டுமே சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அல்வாவை கையில் கொடுக்கும் பொழுதே குற்றால அருவி போல் நெய் வழிந்தோடும்.    

நெல்லை அல்வா என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது இருட்டுக்கடை அல்வா மட்டுமே, ஆனால் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் நெல்லையில் எங்கு அல்வா வாங்கினாலும் அதன் சுவை கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். வெளி மாவட்டத்தவர்களால் இருட்டு கடை அல்வாவையும் மற்ற கடைகளின் அல்வா சுவையையும் எளிதில் பிரித்தறிந்து விட முடியாது.  

ருட்டுக்கடை அல்வாவை விட பலருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பிடிக்கும், சிலருக்கு லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா மட்டுமே பிடிக்கும்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தாலே மிகவும் காமெடியாக இருக்கும், பத்தடி நடப்பதற்குள் பத்து சாந்தி ஸ்வீட்ஸ் பார்த்து விடலாம். ஓம் சாந்தி, ஸ்ரீ சாந்தி, நியூ சாந்தி, ஹாய் சாந்தி, ஒரிஜினல் சாந்தி, புராதன சாந்தி என்று புதிய பேருந்து நிலையம் முழுவதுமே சாந்தி மயமாகத் தான் இருக்கும், பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் சென்றால் யார் கண்ணிலும் படமால் அழுக்குப் படிந்து ஒரு போர்ட் தொங்கிக் கொண்டிருக்கும் "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, நம்பி ஏமாற வேண்டாம்" என்று. சாந்தி ஸ்வீட்ஸில் அல்வாவை விட அவர்கள் தயாரிக்கும் மைசூர்பாகு மிக நன்றாக இருக்கும்.

ல்வாவை மருத்துவ குணத்துடனும் பார்ப்பது உண்டு, வயிறு சரியில்லாமல் நான்ஸ்டாப் என்றால் மருத்துவர்கள் கூட பரிசீலிப்பது அம்பது கிராம் அல்வா

ல்வா இருபது நாட்களுக்குக் கூட கெடாமல் இருக்கும். டால்டாவில் செய்து இருந்தால் மூன்று நாட்களுக்குள் மேலே வெள்ளை நிற கோட்டிங் வந்துவிடும், தோசைக் கல்லில் போட்டு சுட வைத்து சாப்பிட்டால் அதுவும் வித்தியாசமான சுவை தான்.

சென்னை கல்லூரியில் சேர்ந்த பின் எப்போது ஊருக்கு சென்றாலும் தவறாது அல்வா வாங்கி வர வேண்டி இருக்கும். சில முறை பதினைந்து கிலோ வரை அல்வாவை சுமந்து வந்திருக்கிறேன். ஊரில் இருந்து யார் வீட்டிற்கு வந்தாலும் அல்வா இல்லமால் படியேறுவதில்லை என்பதால் பெரும்பாலும் வீட்டில்  அல்வா ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்


வடியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வாவைப் பார்த்தேன், முகவரி கூட பழைய பேருந்து நிலையம், நெல்லை என்று தான் போட்டிருந்தது. பேக்கிங் ஆகி இருநாட்கள் என்றுகூறியதுஅல்வா சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்றதால் கால் கிலோ வாங்கி சென்றேன், ஆசையாக அந்த அல்வாவைப் பிரித்தவுடன் கண்டு பிடித்து மனம் வெறுத்தேன் அது லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா இல்லை போலி என்று.

பெரும்பாலும் அல்வா கருஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் இதுவோ நல்ல ரோஸ் கலரில் இருந்தது, இருந்தும் அல்வா ஆசை தணியாததால் லேசாக பிய்த்து வாயில் வைத்தேன், ஷப்ப்ப்பா வாந்தி வராத குறை. வாழ்கையில் முதன் முறையாக ஊசிப்போன அல்வாவை வாயில் வைத்தது அன்று தான். வாழ்க சென்னை!   

பின்குறிப்பு :