31 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஆறு


தமிழ்ப் பதிவுலகத்தின் மிக முக்கியமான சிறப்பு, எல்லாவிதமானவர்களும் ஆச்சர்யப்படத்தக்கவகையில் எழுதுகிறார்கள் என்பதுதான். இதற்குச் சிறந்த உதாரணம், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தூள் பரப்பும் நடிகர் சாருஹாசன்.

அவரை ஒரு நடிகராக, இன்னொரு பெரிய நடிகரின் அண்ணனாகமட்டுமே நாம் அறிவோம். தமிழில் இத்தனை பத்திரிகைகள் இருந்தென்ன, அவர் இத்தனை பிரபலமாக இருந்தென்ன? அவருக்கு எழுதவரும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லையே, இணையம் தந்திருக்கும் Spaceஐ அவர் அருமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

அவரைப்போல, இந்தத் தளத்தில் மிகச் சிறப்பாக இயங்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள், பல துறை சார்ந்த நிபுணர்கள், ஏன், குழந்தைகள்கூட இருக்கிறார்கள். உடனுக்குடன் கிடைக்கும் Feedback இவர்களை மேலும் ஆர்வத்துடன் இயங்கச் செய்வது மகிழ்ச்சி.

பதிவுலகம்பற்றி ஓரிரு குறையும் எனக்கு உண்டு. எழுதும் அளவுக்கு இங்கே பலர் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும்கூட, மற்ற வலைப்பதிவுகளைதான் வாசிக்கிறார்கள். அது தவறில்லை, அவற்றைமட்டுமே வாசிப்பது தவறு. இந்த Spiral தொடர்ந்து ஒரு கட்டத்தில் உறைந்து நின்றுவிடும் அபாயம் உண்டு.

ஆகவே, தொடர்ந்து உற்சாகமாக எழுத விரும்புவோர், சீனியர் வாசகர்களின் உதவியோடு ஒரு reading schedule போட்டுக்கொள்வது நல்லது என்பது என் தனிப்பட்ட விண்ணப்பம்.

அதேபோல், எழுத்துப் பிழைகளைப் பலர் பொருட்படுத்துவதில்லை. அதை யாராவது சுட்டிக்காட்டினாலும் சுருக்கென்று கோபப்படுகிறார்கள். அதனால் இழப்பு அவர்களுக்குமட்டுமல்ல என்பதை உணர்ந்தால் சந்தோஷம்.

*****



பதிவுலகில் பலரும் பலதையும் எழுதிவருகிறார்கள். இதில் துறை சார்ந்து - ஜோதிடம், ஆன்மிகம், கணினி, தொழில்நுட்பம் - போன்றவற்றை எழுதிவருபவர்கள் மட்டுமே தொடர்ந்து எழுதுகிறார்கள். இவர்கள் பார்வையாளர் எண்ணிக்கையைப் பற்றியோ கருத்துரைகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. மற்ற பதிவர்களில் பெரும்பாலானோர் முகநூல் பக்கமும் கூகிள் பிளஸ் பக்கமும் சாய்ந்துவிட, எஞ்சி இருப்பவர்கள் கொஞ்சமே. இவர்களிலும் சிலர் திரட்டிகளில் முதலிடம் பிடிக்கும் முயற்சியில் இருப்பதால் பலருடைய எழுத்துக்களில் தரத்தைக் காண முடியவில்லை. பல பதிவர்களிடம் - என்னையும் சேர்த்து - consistency என்பது அறவே இல்லை. சேர்ந்தாற்போல் ஐந்தாறு பதிவுகள் எழுதுகிறார்கள். பின் மாதக்கணக்கில் முடங்கி விடுகிறார்கள். பின் மீண்டும் சில நாட்கள் கழித்து உயிர்த்தெழுகிறார்கள். பதிவு எழுதுவதற்கு சோம்பலா, அல்லது முகநூல் போன்றவற்றில் எழுதியதால் பதிவு எழுதிய திருப்தியா, தெரியவில்லை. 

சில பதிவர்கள் தினமும் முகநூலில் பதிவு எழுதுகிறார்கள், வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். அதைத் தவறு என்று சொல்லவில்லை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால் நல்லது என்கிறேன். முகநூலை முற்றிலும் தவிர்க்க முடியாது என்பதால் தினம் ஒரு பதிவு எழுதட்டும். அவற்றைத் தொகுத்து வலையிலும் வெளியிடட்டும். பின்னூட்டங்களைப் பற்றி அதிகம் விவாதித்தாயிற்று என்பதால் சுருக்கமாக - ஒற்றை வார்த்தைக் கருத்துரையை முடிந்தவரை தவிர்க்கலாம். பல மூத்த பதிவர்கள் இளைய பதிவர்களைக் கண்டுகொள்வதேயில்லை. அவர்களும் அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது வந்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தலாம். முடிந்தவரை புதிய பதிவர்களின் பதிவுகளை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

*****



இன்றைய தமிழ்ப் பதிவுலகம் அருமையாக இருக்கிறது. பத்திரிகைகளுக்கு அனுப்பி மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் அவஸ்தையை ஒழித்தது இந்த முறை. முன்பு சுஜாதா சொன்னதாகப் படித்த ஒரு வார்த்தை ஞாபகத்துக்கு வருகிறது. "எதிர்காலத்தில் எல்லோரும் அஞ்சு நிமிஷம் பிரபலமாக இருப்பார்கள்" பதிவுலகம் அந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம். புத்தகங்கள் படிக்கும்போது, செய்தித் தாள்கள் படிக்கும்போது கிடைக்கும் அதே பயன்கள்/அனுபங்கள் பதிவுகள் படித்தாலும் வருகிறது.

பதிவுலகம் தனி மனிதத் துதிகள், தாக்குதல்களைத் தவிர்த்து மனமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு நல்ல விஷங்களை எடுத்துச் சொல்லி முன்னேற்றப் பாதையில் நடந்தால் மகிழ்ச்சி."

பதிவுலகம் என்பதில் முகநூல் வட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கிருப்பவர்கள்தானே அங்குமிருக்கிரார்கள்.

பதிவுலகிலும் முகநூல் வட்டத்திலும் நண்பர்கள் இணைந்து கொண்டே ஒரு குழுவாக அமைந்து கொண்டு வருவதும், சேர்ந்து திட்டமிடுவதும் (குடிமியான் மலை, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பயணங்களும், வாசகர் கூடம் போன்ற தளங்களும்), இணைந்து பேசிச் சிரித்து மகிழ்வதும் (முகநூல் நண்பர்கள் அவ்வப்போது வெவ்வேறு நாடகங்களிலும், அவரவர்களுக்குள்ளேயே யாராவது ஒருவர் வீட்டிலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதும், எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டுக்குக் கூட பல நண்பர்கள் இணைந்து சென்று வந்ததும்),சமீப காலங்களில் நடக்கும் பாஸிட்டிவ் நிகழ்வு.

*****


தமிழ் பதிவுலகம்

பல நல்ல விஷயங்கள்பதிவுலகில்நடந்து வருகின்றன. சமீபத்தில் வல்லமை குழுமத்தில் சேர்ந்ததிலிருந்து நிறைய படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். தமிழ் மொழியையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றும் வகையில் பலர் பழைய கோவில்கள், கலைச்சின்னங்கள் ஆகியவற்றை புகைப்படங்கள்/ காணொளிகளாகச் செய்து ஆவணப்படுத்துகிறார்கள். வரவேற்கத் தக்க முயற்சி. வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து இதையெல்லாம் செய்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.

கவலைகள்:

இது ஒருபுறம் இருக்க, தனிநபர் குறித்த வசவுகளும், கன்னாபின்னாவென்று பின்னூட்டங்களும் சில இடங்களில் காணப்படுகின்றன. இளைஞர்கள் நிறைய எழுதுவது நல்ல விஷயம். அதிகமாக சினிமா விமரிசனம் காணக் கிடைப்பது சற்று கவலையைத் தருகிறது. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்கிற நிலை மாறி அதுவே வாழ்க்கை ஆகிவிட்டதோ என்றும் தோன்றுகிறது. விமரிசனம் எழுதுபவர்கள் எல்லா திரைப்படங்களும் நன்றாக இருக்கின்றன என்பது போல எழுதிவிடுகிறார்கள். ஐடி துறையில் நடக்கும் குற்றங்களை எத்தனை பேர்கள் பதிவு செய்தார்கள், தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரியது. ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற வேண்டும், பதிவுகளில். இது நான் முன் வைக்கும் கோரிக்கை. தொடர் பதிவுகள் என்று ஏதோ ‘மொக்கை’ போடுவதற்கு பதில் கவலைக்குரிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து எழுதலாம். எழுதுபவர்களும், எழுத்துக்களும் எல்லை மீறாமல் இருப்பது மிக மிக அவசியம்.

*****

rajamelaiyur.blogspot.com

பதிவுலகம் ஒரு வித்தியாசமான உலகம் . வெவ்வேறு ஊரில் , கருத்தில், கொள்கையில் இப்படி பல மற்று இருத்தாலும்அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்த பதிவுலகம் . நேரில் பார்க்காத பலரை உறவினரைவிட பாசமுள்ள சொந்தகங்களாக எனக்கு ( நமக்கு ) பெற்று தந்தது இந்த பதிவுலகம் . 

இங்கே சண்டை வருவது சகஜம் .ஆனால் அது சில நாட்கள் மட்டுமே . புத்தகம் வெளியிடும் நபர்தான் எழுத்தாளர் என்ற மாயவலையை கிழித்தது இந்த பதிவுலகம் அதனால்தான் பல எழுத்தாளர்கள் பதிவர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வறுத்து எடுக்கின்றனர் . பல சமயங்களில் பெரிய எழுத்தாளர்களை விட பதிவர்கள் எழுதுவது அருமையாக இருப்பதும் ஒரு காரணம் .

மனதுக்கு பிடித்ததை , ரசித்ததை , சொல்ல விரும்பியதை , சமுக அவலங்களை தட்டிகேட்க என நமது எண்ணங்களை வெளிபடுத்த நமக்கான களம் இது. இது தான சேர்ந்த கூட்டம் . பலர் வரலாம் சிலர் போகலாம் ஆனால் பதிவுலகம் என்றும் இருக்கும் . நம் காலத்திற்கு பின்னும் நம்மை பற்றி பேச இது ஒரு டிஜிட்டல் கல்வெட்டு .

29 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஐந்து


சில நினைவுகள் மட்டுமே நம் சாவின் கடைசி நிமிடம் வரைக்கும் நம்மோடு இருக்கும். தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களால் அவர்களின் கடைசி காலம் வரைக்கும் தமிழ் பதிவுலகம் மறக்க முடியாதாக இருக்கும் என்றே நம்புகின்றேன். ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தைப் போல இங்கும் இரண்டு பிரிவினர்கள் உண்டு. அவர்களால் மட்டுமே நாள்தோறும் பதிவுலகம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்க்கை என்பது ரசித்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று கொண்டாட்ட மனோநிலை கொண்டவர்களாலும், ரசிப்பதோடு சிந்திக்கவும் கூடியதாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும் என்பவர்களாலும் நாள்தோறும் பதிவுலகத்தின் பரப்பளவு விரிந்து கொண்டே இருக்கின்றது. 

பதிவுலகத்தின் பலமென்பது எந்த துறையென்றாலும் பட்டவர்த்தனமாக சிதறு தேங்காய் போல உடைத்து தேவைப்படுபவர்களுக்கு பொறுக்க்கிக் கொள் என்று சொல்லலாம். சமூகத்தில் கணவான் வேடம் போட்டுக் கொண்டிருப்பவர்களை கலங்கடிக்க வைக்க முடியும். அதேபோல கடைசி வரைக்கும் வாசிப்பவனை சிந்திக்கத் தெரியாத வெறும் விடலையாக, பொறுக்கியாகவே வைத்து விடவும் முடியும். 

தமிழர்கள் தங்கள் வரலாற்றை ஆவணப்படுத்தி வைப்பதில் காட்டிய தேக்க நிலையினால் 2000 ஆண்டு சரித்திரத்தில் பாதி பக்கங்கள் மட்டுமே இன்று வரையிலும் உள்ளது. மீதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற நிலையில் தான் உள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பதிவுலகம் அறிமுகமான பிறகு எது தேவை எது தேவையில்லை என்பதையும் தாண்டி இங்கே அனைத்தும் ஆவணமாக மாறிக் கொண்டிருக்கின்றது. காலம் தீர்மானிக்கும். தேவையான விசயங்கள் தேவையான நபர்களுக்கு காலம் கடந்தும் அவர்களின் கண்ணில் படும் அளவுக்கு இங்கே உள்ள நவீன வளர்ச்சி நாள்தோறும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.

உங்களால் தினந்தோறும் அரை மணி நேரம் ஒதுக்க முடியும் என்ற சூழ்நிலையில் உங்களைச் சுற்றியுள்ள, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவத்தை எழுதத் தொடங்குகள். அது உங்களுக்குப் பின்னால் இணையத்தில் புழங்கப் போகின்றவர்களின் பார்வையிலும் படப் போகின்றது என்ற அக்கறையுடன் எழுதிப் பழகுங்கள். 

*****


தமிழ் பதிவுலகம் இன்று:

இளைஞர்களும் முதியவர்களும் வயது வித்தியாசமில்லாது போட்டி போட்டுக்கொண்டு தமிழ் பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை எத்தனை பதிவர்கள் தங்களது அனுபவங்களை, படைப்புகளை வலைப்பூ எனும் சிறப்பான ஒரு ஊடகத்தின் வாயிலாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போல் தமிழகத்தினை விட்டு வெளியே இருப்பவர்களுக்கு இந்த வலைப்பூ ஒரு வரப்பிரசாதம். இன்னமும் தமிழை மறக்காது இருக்கவும் பதிவுலகம் உதவி செய்கிறது என்று கூடச் சொல்லுவேன்! சினிமா, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை, அரசியல், நகைச்சுவை என இங்கே இல்லாத விஷயமே இல்லை.

புதியதாய் பல நட்பு வட்டங்களை உருவாக்கும் இந்த தளத்தில் சில இடையூறுகளும் இல்லாமல் இல்லை! பதிவுலகில் சில சமயங்களில் தனி நபர் தாக்குதல்களும், தேவையற்ற விவாதங்களும் நடப்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தம் தான். மற்றவரின் பதிவுகளை படிக்கும் அனைவருக்கும் கருத்துச் சொல்லும் உரிமை இருந்தாலும், அந்த கருத்து, பதிவினை எழுதியவரின் மனதை புண்படுத்தாது இருந்தால் நலம்.

*****


"சமூக இணையதளங்கள் இன்று இணைய மக்களிடையே பரவலாக பிரபலமடைந்து வருகிற சமயத்திலும், வலைப்பூக்கள் புதிது புதிதாய் பூத்துக் கொண்டுதான் உள்ளது. நமது எண்ணங்களை, சுற்றி நடக்கும் நிகழ்ச்சி மற்றும் சம்பவங்களை எழுத்துக்களாக ஆவணப்படுத்த வலைப்பூக்கள் பெருமளவு பங்கு வகிக்கிறது. அவற்றை மற்றவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் கருவியாகவும், அவர்களின் கருத்துகளை அறியவும், நண்பர்கள் கூட்டத்தை உருவாக்கவும், பலதரப்பட்ட விமர்சனங்களை சந்திக்கவும் வலைப்பூக்கள் உள்ளன.....

வலைப்பூவில் பதிவுகள் எழுத நம்மில் பலரும் அவர்களுக்குள்ளேயே பல வரைமுறைகள் வைத்திருப்பதாலும், நேரமின்மை காரணமாகவும் பதிவுகள் வெளியாவது குறைகிறது. தமிழ் வலைப்பூக்களுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த தள ட்ராபிக் இன்று இல்லை. பதிவர்கள் பதிவெழுதுவதை குறைத்ததால் இந்நிலை. மேலும் வாசிப்பவர்களும் குறைந்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம், தமிழ் வலைபூக்களை பலரிடமும் கொண்டு செல்ல உரிய திரட்டிகள் இல்லையென்பதும் மிகப்பெரும் குறை....

எழுதி வெளியிட்ட பதிவுகளை பலரிடமும் கொண்டு செல்ல நிறைய திரட்டிகளிலும், சமூக இணைய தளங்களிலும் இணைக்க வேண்டியிருப்பதாலும் சில சமயங்களில் எரிச்சலடைய செய்கிறது. தமிழ்மனம்ம் தமிழ்வெளி திரட்டிகள் போல ஒரே சொடுக்கில் பதிவை இணைக்கும் வசதி மற்ற திரட்டிகளிலும் இருந்தால், பதிவுகள் நிறைய இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆங்கில வலைப்பூக்களுக்கு தருகிற கூகுளின் பல செயல்பாடுகள் (உம்: ஆட்சென்ஸ்) தமிழுக்கும் அதிகாரப்பூர்வமாக கிடைத்தால் வலைப்பூக்களின் எண்ணிக்கையும், பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை....

*****


பதிவுலகம் இன்று ஏதோ ஹிட்சு படம் கொடுக்காத ஹீரோ போல இருக்கின்றது. முன்னம் பல ஜம்பாவான்கள் இயங்கி உலகம் பதிவுலம் .இதில் மதவாதம் /மற்றும் திரட்டிகளின் ஹிட்சு /தர/செயல்பாடுகள் காரணமாக இன்று பதிவுலகம் ஒரு ந்ல்லாட்சி கிடைக்கும் என்று ஏங்கும் சாமானிய் ம்க்க்ள் போல் நல்ல் பகிர்வுகள் வரும் என்று எதிர்பார்க்கும் வாசகர்கள் பல்ர்! ஆனால் இன்று சினிமா புதுப்பட் வெளியீடு தினத்தில் மட்டும் பல போட்டிப்ப்கிர்வு சூப்ப்ர் மொக்கை என்று ஆனால் அர்சியல் /விளையாட்டு /சமூக/கலைக்கலாச்சார் பகிர்வை ஏனோ தேடிப்பெறுவது என்பது அவசர,உலகில் பதிவுலகில் ஹிட்சு இல்லை இன்று ம்ற்றைய் மொழியுட்ன் ஒப்பீடு செய்யும் போது! பிரெஞ்சு ஆங்கிலம் சிங்கள்ம் பேசும் ப்திவாள்ர்க்ளிட்ம் நாம் இன்னும் சினிமாவில் ஹீரோவைதேடும் விட்டில் பூச்சிகளா இந்த நிலை விரைவில் மாறும் என்ற் நம்பிக்கையில்!தனிமரம் !!பதிவுலகில் கற்றதன் அனுபவம் இது! 

*****


ஆறு வருடங்களாகிவிட்டன பதிவுகள் ஏற்ற ஆரம்பித்து. முந்தை, அதாவது 2008 லிருந்து 2010 வரையான காலம் பதிவுலகின் வசந்த காலம் என்பேன்.

அரசியல், சினிமா, இலக்கியம், போட்டிகள் எனக் கலந்து கட்டி மொத்தப் பதிவுலகமும் இயங்கிய காலமது. நேர் நேர் தேமா வகை நிலைப்பாடுகளைக் கொண்டவர்களும், வெள்ளைக் காக்காய் ரிவர்ஸ்ஸில் பறக்குமென்பவர்களும் இயங்கிய காலகட்டம். டோண்டுவுக்கு ஒரு ரசிகாஸ் பட்டாளமெனில், வாலுக்கும், ராசனுக்கும் ஒரு பட்டாளம். திரட்டிகளில் பதிவுகளைத் தேடித்தேடிப் படித்த காலம். வடைகள் வாங்கக் காத்திருந்த காலம். நேரந்தவறாமல் ஒரு நாளில் ஆறு பதிவுகள் போடும், பிட்டுப் படங்களுக்கெல்லாம் மெய்வருத்தி சிபி எழுதிய காலம். 

சமீப காலங்களில், சினிமா பதிவுகள் தவிர, ஏனைய தளப் பதிவுகளின் எண்ணிக்கைகள் குறைந்துவிட்டன. எனினும், வலைப்பதிவர்கள் சந்திப்பு, போட்டிகள், பதிவர்கள் மேலுயர்ந்து புத்தகங்கள் எழுதுதல், சினிமாத் துறைகளில் பங்காற்றுதல், பத்திரிகை துறை என மனமுவக்கும் நிகழ்வுகளும் நடந்தேறியே வருகின்றன. கேபிள், வா.மணிகண்டன் போன்றோர் உதாரணங்கள்.

பிடிஎப் புத்தகங்கள் வெளியிட்டுக் கலக்கி வருகிறார்கள் பதிவர்கள் (செங்கோவி, வசந்த், ஜோதிஜி போன்றோர்). 

தேட்டரீதியில், அன்றைய பதிவுலகத்தின் காட்டம் இன்றைய பதிவுலகில் இல்லை. முன்பெல்லாம், நம் பதிவுகளை பகிர உபயோகிக்கப்பட்ட மற்ற சமூக வலைத்தளங்கள் இப்போது அத்தகைய கருத்துகளையும், படங்களையும் தாங்கிச்செல்கின்றன. 

பதிவுகளின் எண்ணிக்கை நாளும் குறைந்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில், ஏனைய சமூக வலைதளங்களில் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. இதைத் தலைமுறை மாற்றமேன்றே கொள்ளலாம்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் தற்போதைய பதிவுலகம்.

நாளைய பதிவில் 

என்.சொக்கன் 
எங்கள்பிளாக் ஸ்ரீராம்  
ரஞ்சனி நாராயணன் 
 ஸ்கூல்பையன்

இன்றைய வலைசரத்தில்

வழிகாட்டிகள்

28 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் நான்கு


பத்திரிகையுலகம் எஸ்.ஏ.பி. சாவி போன்ற திறமையான ஆசிரியர்களின் இழப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்று கூறப்பட்டாலும் இன்றளவும் வேறுவேறு திறமைகளைக் கொண்டு நன்றாக இயங்கித்தான் வருகிறது. பதிவுலகிலும் அதேபோல் திறமையாக எழுதக்கூடிய பலர் எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தாலும்கூட... ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் என்று பல எதிரிகளைச் சந்தித்த போதிலும்கூட... நன்முறையில் இயங்கித்தான் வருகிறது.

பதிவுலகில் இருப்பவர்கள் தனித்தனி குழுக்களை அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது சமீபகாலமாய். குழுக்களாக இயங்குவதில் தவறில்லை என்பதே என் கருத்து. ஒரே தலைப்பில் பலர் பதிவெழுதும் தொடர்பதிவு என்றொரு விஷயம் முன்பு இருந்தது. ஒருவர் எழுதி, நான்கு அல்லது ஐந்து பேருக்கு அழைப்பு விடுத்து, அந்த நான்கைந்து பேரும் பிறிதொரு நான்கைந்து பேருக்கு அழைப்பு விடுத்து எனச் சென்ற அந்த சங்கிலித் தொடர் குழுக்களையும் ஒருங்கிணைப்பதை செம்மையாகச் செய்தது. இப்போது யாராவது அழைப்பு விடுத்தாலும், “டைம் இல்ல இப்ப... அப்புறம் கன்டின்யூ பண்றேன்” என்று சொல்லிவிட்டு பின் அதை மறந்து தன் சொந்தப் பகிர்வுகளை மட்டுமே அனைவரும எழுதும் நிலை என்பதால் அந்த சங்கிலித் தொடர் அறுபட்டுப் போய்விட்டது. மாறாக ஆளாளுக்கு தங்கள் தளத்தில் ஏதாவது ஒரு (சிலசமயம் நல்ல, சிலசமயம் அபத்தமான) போட்டியை வைத்து அதில் வெல்பவர்களுக்கு ஒரு (சிறு) பரிசு வழங்கும் கலாசாரம் தலைதூக்கி இருக்கிறது.

ஆக... பதிவுலகம் எப்படி இருந்தது, எப்படி இருக்கும் என்று கவலைப்படுவதை விடுத்து... அவரவர் தனக்குத் தோன்றுவதை அவரவர் தளத்தில் எழுதிச் சென்றாலே போதும் என்கிற நிலைதான் தொடர்வதாக என் எண்ணம். ‘உங்கள் பார்வையில் பதிவுலகம்’ என்ற கேள்வியை ஸ்ரீனிவாசன் எழுப்பியதுமே (யாரது ஸ்ரீனிவாசன்னு கேக்கறீங்களா...? நம்ம ‘காதல் இளரவசன்’ ‘ந்ள்ளிரவு நாயகன்’ சீனு தாங்க...!) அனைவரும் முன்வந்து அவரவர் கோணத்தைச் சொல்வதன் மூலமே பதிவுலகம் இன்னும் உற்சாகம் குன்றாமல் இயங்கி வருகிறது என்பதை உணரமுடிகிறதுதானே...?

*****


இன்றைய நிலை :

தமிழ்ப் பதிவுலகம் ஒருபோதும் ஒற்றுமையாய் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அதன் விரிசல் என்னவோ அதிகமாகி கொண்டு வருவது போன்ற நிலையை சமீபத்திய அமைதி உணர்த்துகிறது. கடந்த வருடத்திலிருந்து கணக்கிட்டால் புதிய பதிவர்களை விரல் விட்டு எண்ணி சொல்லும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. பழைய பதிவர்களும் தொடர்ச்சியாக இயங்காமல் தளர்ந்து போனதால் இன்றைய பதிவுலகம் சற்று தடுமாற்றத்தில் இருப்பது வெளிச்சமாகிறது நமக்கு. இப்படி தொடர்வது வருங்காலத்திற்கு நல்லதல்ல!

விரும்பும் மாற்றங்கள்:

1) நண்பர்களுக்கு இணையம் பற்றியும், அதில் எப்படில்லாம் இயங்க முடியும் என்று விளக்கலாம். (எல்லோருக்கும் இது பொருந்தாது ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு மட்டுமே )

2) நமக்கு நாமே குரல் குடுக்கவில்லை எனில் வேறு எவர் நமக்காக குரல் கொடுப்பார். பதிவு செய்யப்பட்ட சங்கம் மிக அவசியமாய் தேவைப் படுகிறது!

3) சிறு சிறு சந்திப்புகள் நடத்தி, சக பதிவர்கள் பதிவில் செய்யும் தவறுகளை சுட்டி காட்டலாம், (அருமை, அட்டகாசம் போன்ற இன்னபிற மானங்கெட்ட கருத்துக்களை தவிர்ப்பது நலம்) மூத்தப் பதிவர் போன்ற போட்டி மனப்பான்மைகள் குறைய வாய்ப்பு இருக்கும்.

4) வலைத்தளம் தவிர்த்து ஏனைய சமூக தளங்களினால் தான் நசிவு ஏற்பட்டுள்ளது என்பது ஒரு காரணியாக இருந்தாலும் அது மட்டுமே தான் காரணி என்று சொல்ல முடியாது. இயங்கவேண்டும் என்று நினைத்து இயங்கினால் நிச்சயம் எழுச்சி பெறலாம்!

5) நம் கையில் கிடைத்திருக்கும் நல்ல ஒரு மீடியத்தை ஜல்லியடிக்க பயன்படுத்தாமல் வலுவாக, தரமாக பதிவு செய்தாலே போதும் புதியவர்கள் வருவர் என்பது என் நம்பிக்கை.

***** 


தமிழில் வலைப்பூக்கள் ஆரம்பித்து எழுதுபவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றது.பதிவர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து செல்கின்றமையும் வலைப்பூக்களில் தம் எழுத்தாற்றலை திறம்பட வெளிப்படுத்தி பத்திரிகைகளில் வேலைவாய்ப்பு பெறும் பதிவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதும் தமிழ்ப் பதிவுலகின் வளர்ச்சியையே எடுத்தியம்பி நிற்கின்றன.அத்துடன் ஆண்டுதோறும் நடைபெறும் பதிவர் சந்திப்புகள் பதிவர்களிற்கிடையேயான நட்பு இணையத்தைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் தொடர்வதற்கு வழிவகுக்கின்றன.இத்தகைய பதிவர் சந்திப்புகள் பதிவர்கள் உற்சாகமாக பதிவுலகில் செயற்பட ஊகமருந்தாக அமைகின்றன.

பதிவுலகில் நான் அவதானித்த குறைபாடுகளில் முக்கியமான இரு விடயங்கள் தொடர்பில் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலாவது கருத்துரைகள் தொடர்பானது.வலைப்பதிவுகளில் இடுகையிடப்படும் கருத்துரைகளில் 99%மானவை அருமை,நன்று,சூப்பர் என்பவையாகவே அமைந்திருக்கின்றன.இதனைத் தாண்டி ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கும் இயல்பு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.அடுத்ததாக அண்மைக்காலத்தில் என்னை அதிகம் கவலைப்படுத்திய விடயம் தமிழ்மண வாக்குகள் இடப்படும் முறை.கருத்துரைகளில் ”அருமை,த.ம 1” என்ற புதிய டிரென்ட் உருவாக்கப்பட்ட பின்பு தரமான இடுகைகள் அதிக வாக்குகளைப் பெறுகின்றனவோ இல்லையோ மேற்கூறிய அமைப்பில் கருத்துரை இடுவோரின் இடுகைகள் அத்தனையும் அதிக வாக்குகளை அள்ளுகின்றன.சில பதிவுகளை வாசிக்கும் போது இதற்கெல்லாம் போய் எட்டு ஒன்பது பேர் வாக்களித்திருக்கிறார்களே என்று எண்ணத்தோன்றும்.அதே நேரம் பிரபலமாகாத ஒரு பதிவர் எழுதிய அருமையான பதிவுகள் கவனிப்பாரற்று கிடக்கும்.பதிவின் தரத்தைப் பற்றிக் கவலைப்படாது நபருக்காக வாக்களிக்கும் தன்மை பதிவுலகிற்கோர் சாபக்கேடு.இந்த நிலை விரைவில் மாறவேண்டும் எனபதே என் அவா. 


பதிவுலகத்தின் பலமே பலவீனமாகிக் கிடக்கிறது. நட்பு வட்டாரமே பலம், ஆனால் அதுவே புதிய வாசகர்களை அன்னியப்படுத்தும். ஓரளவு அனுபவமும், வாசகர் வட்டமும் உள்ள பதிவர்கள் நட்பு ரீதியிலான பாராட்டு கமெண்ட்டுகள் கொடுப்பது, வாங்குவதை, ஓட்டளிப்புகளை தவிர்க்கலாம்.


பேஸ்புக்கில் நன்றாக எழுதுபவர்களிடம் வலைப்பூக்களின் முக்கியத்துவத்தை கூற வேண்டும். பேஸ்புக்கில் ஒரு விஷயத்தை பகிர்ந்து விட்டு சில மாதங்கள் கழித்து அதை நாம் தேடினாலும், மற்றவர்கள் தேடினாலும் எளிதில் கிடைக்காது, ஆனால் வலைப்பூக்களில் எப்போது வேண்டுமானாலும் தேடி உடனடியாக பார்க்க, பகிர முடியும். அதே போல பேஸ்புக்கில் நாம் பகிர்வது பெரும்பாலும் நம் நண்பர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு மட்டுமே சென்று சேரும். பயனுள்ள பதிவுகளை வலைப்பூக்களில் எழுதுவதன் மூலம் இணையத்தில் எல்லோருக்கும் அது சென்று சேரும், அத்தோடு கூகுள், பிங் போன்ற தேடுபொறிகளில் தேடும் போதும் கிடைக்கும். இதற்கு நாம் இலவசமாக பயன்படுத்தும் பிளாக்கர் வசதியை அவர்களை பயன்படுத்த சொல்லலாம்.

நாளைய பதிவில் 

ஜோதிஜி 
வெங்கட்நாகராஜ் 
தமிழ்வாசி பிரகாஸ் 
இலக்கியசெம்மல் 
தனிமரம் 

இன்றைய வலைசரத்தில் 

  

26 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் மூன்று


எழுத்து என்பதை பத்திரிக்கைகள், புத்தகம் என்பதை கடந்து வாசகனையும் எழுத்தாளனாக மாற்றியது இணையம்தான். யாஹூ குழுமத்தில் பிறந்த வாசக எழுத்தாளன் கூகுள் தந்த பதிவுலகம் எனும் அறிய வாய்ப்பை மிகச்சரியாக பயண்படுத்திய காலம் ஒன்று உண்டு. பதிவுலகம் என்பது தான் பார்க்கும், தன்னை பாதிக்கும் அல்லது வியக்க வைக்கும் நிகழ்வுகளை எழுதுவதற்கும் மேலும் மாற்றுக் கருத்துகளின் விவாத களமாக இருந்த காலம் ஒரு பதிவுலக பொற்காலம். அக்காலத்தில்தான் சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களுக்கு இணையாக வாசகர்களும் எழுதிய காலம். முக்கியமான கட்டுரைகள், கதைகள், தொழில்நுட்ப உதவிகள் என எல்லோரிடமும் எல்லாவற்றையும் கொண்டு சேர்க்க துவங்கிய காலம். அதே நேரத்தில் அதற்கு சரி சமமாக நகைச்சுவை தளங்களும், மிகுதியாக கவிதை தளங்களும் கூட போட்டி போட்டன.

இந்த காலகட்டத்தில்தான் கருத்தியல் ரீதியாக நிறைய குழுக்கள் உருவாகி அதன் அடிப்படையில் ஒரு உலகளாவிய நட்பு வட்டங்கள் தோன்றின. இக்காலத்தில்தான் சமூகத்திற்கு பெருமளவில் எழுத்து ரீதியாக தொழில்நுட்ப ரகசியங்களை தமிழுக்கு கொடுத்தனர். மேலும் பதிவர் ஒருவரின் பிரச்சனைகளை முகம் தெரியாத வாசகன் வரைக்கும் ஒன்று சேர்ந்து தீர்த்து வைத்தனர். பெரிய அளவில் நிதி உதவிகள் செய்யப்பட்டன. கருத்து ரீதியாக எதிர் அணியில் இருந்தாலும் நேரில் சந்திக்கும்போது நீண்ட காலம் பழகியவர்களைப் போல மனம் விட்டு பேசிக்கொண்ட நிறைய நண்பர்களை நான் அறிவேன். 

ஆனால் முகநூலும், ட்விட்டரும் வந்தபின் மிகுதியானவர்கள் அதற்கு தாவி விட்டனர். 2006 ஆம் ஆண்டு முகநூல் வருவதற்கு முன்பாக ஆர்குட் ஒன்றுதான் சமூக வலைத்தளமாக இருந்தது, முகநூல் கூட ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் வந்த பிறகுதான் சரேலென எல்லோர் கைகளுக்கு வந்தது.

தற்கால பதிவுலகம் என்பது மிகுதியாக வாசிப்பு அனுபவங்கள் இல்லாத நபர்களால் எழுதப்படுவதால் கிட்டதட்ட பதிவுலகம் ஒரு குறிப்பிட்ட குழுவால் அது சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமே படிப்பது, ஓட்டு போடுவது, கருத்துக்கள் சொல்வது என்று மாறிவிட்டது. இப்போதும் சினிமா விமர்சனம் எழுதும் ஒரு சிலரின் பதிவுகள் மட்டுமே அதிகம் பேரை சென்றடைகிறது.

ஆனாலும் எழுத்தை தொடர்ந்து நேசிக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ”நிசப்தம்” வா.மணிகண்டன், ”வாரியர்” தேவா, சிறுகதை போட்டிகள் நடத்தும் :வெட்டி பிளாக்கர்ஸ்” சவால் போட்டிகளை நடத்தும் “டெரர் கும்மி”  மற்றும் சமீபத்தில் வெகு சிறப்பாக இயங்கும் “வாசகர் கூடம்”  போன்ற அனைத்தும் பாராட்டுதலுக்கு உரியவை.

பதிவுலகம் இன்னும் சிறப்பாக மாற தமிழ்மணம் போல் அல்லாது ஆங்கிலத்தில் மிக சிறப்பாக இயங்கும் தளமான இண்டி பிளாக்கர் தளம் போல ஒரு சிறப்பான திரட்டியும், புதிதாக எழுத வருகிறவர்களுக்கான ஒரு வழிகாட்டுதலும், அங்கீகாரமும் தேவை. வியாபாரம், பங்கு சந்தை, விவசாயம், மகளிர் மேம்பாடு, உணவு, தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பு இப்படி பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் துறை சார்ந்த பதிவுகளை எழுத முன்வரவேண்டும் அல்லது அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து எழுத ஊக்குவிக்க வேண்டும்.


*****


பத்திரிகை உலகத்தை தாண்டி பதிவுலகம் விசாலமானது விசித்திரமானது. குறிப்பிட்ட வாசக வட்டத்திற்க்குள்ளேயே சுற்றி வரச்செய்யும் சூழலை உணர முடிகிறது. உறவுகளுக்குள் மொய் விருந்து போல இன்று நாம் உன் பதிவுக்கு வந்தால் தான் நாளை என் பதிவுக்கு வருவார்கள் என்ற நிலை மாற வேண்டும் . நல்ல தரமான கருத்து, சிந்தனை, சொல்லாடல் எங்கிருந்தாலும் எழுதுவது யாராக இருந்தாலும் உற்சாகப்படுத்த வேண்டும். புதியவர் வருகையும் புதிய தேடலும் நம் பார்வையில் இருக்கும் வரை பதிவுகலகம் வளரும் வாழும்.
தென்றல் சசிகலா.

*****



பாஸ்ட் ரைட் கலாசாரம் 

முன்பை பார்க்கிலும் மிக அதிகமான விடயங்கள் பதிய படுகின்றன. விமர்சனம் செய்ய படுகின்றன. விவாதிக்க படுகின்றன. ஆலோசனைகள் கூறபடுகின்றன. ஆனால் அது எங்கே நிகழ்கிறது என்று ஆராயும் போது தான் பிளாக்கரை, வேர்ட் பிரஸ்ஸினை வீழ்த்தி பயங்கரமாக பேஸ்புக்கும், டுவிட்டரும் வளர்ந்து வருவது தெரிய வரும்..

பேஸ்புக் என்பது பலரை மிக இலகுவில் சென்றடையும் மீடியா. உடனடி ரிசல்ட் கிடைத்து விடும். பதிவுலகில் சிற்றரசாக இருந்த பலர் பேஸ்புக்கில் தற்போது ராஜாங்கம் நடத்தி வருவதும் அதனால் தான். ஆனால் பதிவுகளுக்கு நீண்ட ஆயுள் இருப்பதில்லை. ஏன் வாரபோக்கில் எழுதியவர் டைம்லைனுக்கே லோட் அடிக்கும். இருந்தாலும் பேஸ்புக்கின் போதை அலாதியானது தான். 

இதை இவ்வண்ணம் ஒப்பிட்டு பார்க்கலாம் என்று நினைக்கிறேன். எப்படி அச்சு ஊடகமும், இணைய எழுத்தும் மோதுகையில் அச்சு ஊடகம் பல வகையில் சுக அனுபவமோ அதே போலவே தான் பாஸ்ட் ரைட் கலாசாரத்தை பதிவுலகோடு ஒப்பிடுகையில் பதிவுலகம் சுக அனுபம் .. 

பதிவுலகு அட்டையில்லா, திறபட்ட டைரி போலானது. பேஸ்புக் எப்படி எமது கட்டுப்பாட்டிற்குள் இருக்காதோ அவ்வளவு தூரம் பிளாக் எமது கட்டுக்குள் இருக்கும். நாலு பேர் தான் வாசித்து இருப்பினும் எமது 2 வருட முற்பட்ட சில எழுத்துக்களை பார்க்கும் போது எமது நினைவுகளின் ஆனந்தம் அலாதியானது. ஏன் இன்று சில பிளாக் பக்கங்களின் பழைய பதிவுகளின் தேதி இலக்கம் கூட பதிவின் தாக்கத்தில் ஞாபகம் வைத்து இருக்கிறேன். குறிப்பிட்டவரின் பிளாகிற்குள் சென்று குறைந்த கிளிக்கிற்குள்ளாய் நான் நினைத்ததை அடைந்து விடுகிறேன். 

இன்னும் தெளிவாக சொல்ல போனால் சில தனிநபர் பிளாக்கிற்கு இருக்கும் கட்ஸ், கெத்து எந்த ஒரு தனி நபர் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்திற்கும் இது வரை கிடையாது. வருட கால இடைவெளிகளில் அவை மறைந்து போய் கிடக்கும் அல்லது மறந்து போய் கிடக்கும்
*****

ப்ளாக்ல இப்போலாம் பலரும் சினிமா & சினிமா விமர்சனம் தான் எழுதிட்டு இருக்காங்க...பொதுவான விசயங்களை எழுதுபவர்களும் சரி, வாசிப்பவர்களும் சரி குறைந்து கொண்டே வருகிறார்கள். இதனாலேயே பொதுவா எழுதுற நெறையா பேரு இப்ப எழுதுறதே இல்ல..

சினிமாவைத் தாண்டி எல்லோரையும் எழுத வைக்க ஏதாவது செய்ய வேண்டும்.. அதற்கென்று ஒரு சங்க்ம் ஆரம்பித்து இதைப்பண்ணலாம்.. அதாவது மும்பையில் குறிப்பிட்ட சாலைகளில் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.. அது போல் நாமும், குறிப்பிட்ட மாதங்களில்/நாட்களில் ஒரு சில விசயங்களை எழுத வேண்டாம் என அந்த சங்கம் மூலம் சொல்லலாம்..

சினிமா விமர்சனம் எழுதுபவர்களிலும் பலருக்கும் விமர்சனம் என்றாலே என்னவென்று தெரியவில்லை.. கதையை முழுதாக எழுதுகிறார்கள்.. அப்புறம், படத்தின் பாடல், இசை, சண்டைக்காட்சி, கேமரா போன்றவற்றை குறிப்பிட்டு முடித்துவிட்டு அதை விமர்சனம் என்கிறார்கள். இதையெல்லாம் படித்தால் அது நல்ல படமாகவே இருந்தாலும் அதன் freshness போய்விடுகிறது.. படம் பார்க்கும் ஆர்வமும் குறைந்துவிடுகிறது.. அதனால் விமர்சனம் எழுதும் ஆட்கள் வெள்ளிக்கிழமையே விமர்சனத்தை எழுதிவிடாமல், அட்லீஸ்ட் திங்களுக்கு பிறகாவது எழுதலாம்... நல்ல படம் என்றாலும் கெட்ட படம் என்றாலும், நாம் விமர்சனம் எழுதாமல் இருப்பதால் அந்த ரெண்டு நாட்களுக்கு ஒரு 100 பேராவது தியேட்டருக்கு போவார்கள்.. நம் புண்ணியத்தில் தியேடர்க்காரன் ஒரு 1000ரூபாய் எக்ஸ்ட்ரா சம்பாதிப்பான்..
வலைசரத்தில் இன்றைய பதிவு

கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்



25 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் இரண்டு


கோவை ஆவி - பயணம் 

பதிவுலகம் எத்தனையோ விசித்திரமான பதிவர்களை சந்தித்துள்ளது. சீரியஸாக கதை சொல்லும் இலக்கியவாதிகள் ஒரு பக்கம், தற்கால நிகழ்வுகளை எழுத்துகளில் வடிக்கும் கவிஞர்கள் ஒரு பக்கம். பெண்கள் முன்னேற்றம், பெண் அநீதி என காற்றில் கட்டப்பட்ட அடிமை சங்கலியை அவிழ்க்கப் போராடும் பெண்ணியவாதிகள் ஒருபுறம். உண்ணும் உணவு, செல்லும் இடங்கள் ஆகியவற்றை பதிவேற்றி மக்கள் தொண்டு ஆற்றுபவர்கள் சிலர்.. திரைப்படங்களை தரையில் இட்ட அப்பளங்களாய் நொறுக்கி கலைச் சேவை புரிபவர்கள் என சிலர். இப்படி தமிழை வாழ வைக்க, தமிழ்ப் பதிவுலகத்தை தழைத்தோங்கச் செய்ய பலர் இருக்கையிலே பதிவுலகைப் பற்றி நான் மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறேன்...


             ஜாலியாக கமென்ட் போட்டேன், கலாய்த்தேன் என்கிறார்கள்.. இரண்டு வரிகளில் இலக்கியம் சொன்னேன், மொக்கை என்கிறார்கள். கண்விழித்து கதை எழுதி கடை விரித்தேன், டுபாக்கூர் என்றார்கள்.. திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றேன் – ஒரு “தல”பட்சம் என்றார்கள், திரைப்படம் சுமார் என்றேன் – சினிமா மொழி தெரியாதவன் என்றார்கள், மோசம் என்றதற்கு நீ கொடுத்த நூற்றியிருபதுக்கு சுறாவா கிடைக்கும், எறாதான் கிடைக்கும் என்றனர். சுறாவா என்று பயந்தபடி மேலும் எழுதினேன். தொடர்கதை என்ற பெயரில் வாழ்வின் சோகங்களை எழுதினேன்.. சிறுகதை என்ற பெயரில் சின்னதாய் ஒரு ட்விஸ்டு வைத்து எழுதினேன்.. கவிதை என்ற பெயரில் கல்லை கொண்டு அடிக்குமளவிற்கு எழுதினேன்.. எழுதினேன் எழுதினேன், கீபோர்ட் உடையும் வரை எழுதினேன்.. சிஸ்டம் ஹேங் ஆனதால் நிறுத்திவிட்டேன்.

              உனக்கேன் இவ்வளவு அக்கறை.. நான் கேட்டதென்ன நீ சொல்வதென்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எழுத்து என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் கிறுக்கும் ஒரு கூட்டமும், மகுடத்தின் பின்னால் ஓடும் ஒரு கூட்டமும், இருக்கும் வரை தமிழோ தமிழ் பதிவுலகமோ யாதொரு நன்மையையும் அடையப் போவதில்லை. “பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற வாக்கினை தவறாக புரிந்து கொண்ட ஒரு சமூகம் டாஸ்மாக்கிலும், “நூலைப் படி, நல்ல நூலைப் படி” என்ற பாரதிதாசனின் வாக்கை வாசிக்க கூட நேரமின்றி  பீச்சிலும், தியேட்டரிலும் நேரம் செலவழிக்கும் இளங்காளைகளும், பூஞ்சோலைகளும் பதிவெழுத மட்டுமல்ல, படிக்கக் கூட நேரமின்றி சுற்றுகின்றன. இவர்கள் ஏட்டுச் சுரக்காய் மட்டும் கறிக்கு சுவை சேர்க்காது என்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இது மாற வேண்டும்.. நான்கைந்து வருடங்களுக்கு முன்பிருந்த பதிவர்கள் இன்று ஓய்ந்துவிட்ட நிலையில் அடுத்த தலைமுறை சரியாக உருவாகவில்லை என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் முகநூலின் ஆதிக்கமும், கவர்ச்சியும் பதிவுலகத்தின் பால் ஒரு அயர்ச்சியை உண்டு பண்ணிவிட்டதென்றே கூற வேண்டும். அறிவியல் வியாபித்திருக்கும் அமெரிக்காவில் கூட சிறு வயதிலிருந்தே படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் உருவாக்குவதை கண்டு வியந்திருக்கிறேன். நம் தமிழ்க் குழந்தைகள் சோட்டா பீமும், போகோ வும் பார்த்து மட்டுமே வளர்கின்றன. அதைவிட கொடுமை தமிழை படிக்கவே தடுமாறுகின்றன.. இந்த அடித்தளமே வீக்காக இருக்கும் போது பதிவுலகம் எனும் கட்டிடம் எப்படி ஸ்ட்ராங்காக இருக்கும்.

                   குழந்தைகளுக்கு முதலில் வாசிப்பனுபவத்தை உணர்த்துதல் அவசியம். முன்பெல்லாம் தாத்தா பாட்டி சொன்ன காக்கா கதையோ, தாலாட்டுப் பாடலோ கேட்டு வளர்ந்ததைப் போலவே கதைகள், கவிதைகள், இலக்கியம் என அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் போது நிச்சயம் அடுத்த கட்டமாக எழுத முன்வருவார்கள். பதிவுலகம் மரிக்காம்லிருக்க இது ஒன்றே வழி..!

கே.ஜி.கௌதமன் - எங்கள் பிளாக்    

இன்றையத் தமிழ்ப் பதிவுலகம் பல தீவுகள் கொண்டதாய் விளங்குகிறது. ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு ரசனைக்குத் தீனி. சில தீவு அரசர்கள் மேடைப் பேச்சாளர்கள். தாம் சொல்ல வந்ததை உரத்துக் கூறி, கேட்கின்ற மக்கள் மறுமொழி கூறாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்கள். 

சிலர் தீவுகளைக் கண்டுபிடித்துவிட்டு, கொஞ்ச காலம் அரசாட்சி செய்து பிறகு நீண்டு படுத்து நித்திரை செய்துவிடுகிறார்கள். அரசியல் எழுதும் தளங்கள் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக்கொள்வதில்லை. பதிவுகள் படித்துத் தங்கள் கருத்துகளை மாற்றிக் கொண்டவர்களும் கிடையாது. இன்னும் சில பதிவுலக பெயிண்டர்கள் உண்டு. கையில் ஒரு பக்கெட் வர்ணக் கலவை, ஒரு பிரஷ். நம் தளத்தில் சிலப் பதிவுகளைப் படித்துவிட்டு உடனே இவர்கள் இதுதான் என்று ஒரு வர்ணம் அடித்துவிட்டு, அடுத்த பதிவைத் தேடிப் போய்விடுவார்கள். 

பதிவுலகம் எப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

சொல்வது யார் என்று பார்க்காமல், சொல்லப்படுவது என்ன என்பதை மட்டும் விவாதம் செய்யவேண்டும். பதிவுகள் இடுபவர்கள் எல்லோருமே படித்தவர்கள். படித்தவர்களுக்கு உரிய பண்புடன், இனிமையான இதமான வார்த்தைகள் பயன் படுத்த வேண்டும். எந்தக் கருத்தையும், மறுக்கலாம் - ஆனால், பண்பான வார்த்தைகள் பயன் படுத்தி!

விஜயன் துரைராஜ் - கடற்கரை 

இன்றைய தமிழ் பதிவுலகம்

தமிழ் பதிவுலகை சார்ந்த பதிவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1.பிரபல பதிவர்கள்
2.ப்ராப்ல பதிவர்கள்
3பிற பல பதிவர்கள்

இந்த மூன்றுக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கிறேன்.

நம் பதிவுலகில் சிறந்த எழுத்துவளம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள், சில
பேர் எதையாவது எழுத வேண்டுமே என்ற எண்ணத்தில் கைக்கு வந்ததையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில பேர் சில சமயம் சில நல்ல விசயங்களையும்,பயனுள்ள விசயங்களையும் எழுதுகிறார்கள்., இன்னும் சில பேர் தங்கள் வட்டங்களுக்கு மட்டுமே புரிகிற மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி அரட்டைத்தனமான பதிவுகள் எழுதுகிறார்கள்.

நகைச்சுவை பதிவுகள்,பல்சுவை பதிவுகள்,அனுபவ பதிவுகள் இது பற்றி எல்லாம் No comments … I like them :)

சரி!

சில நேரங்களில் சிலபேர் எழுதிவைத்திருக்கும் சிறந்த,பயனுள்ள பதிவுகளின்
கீழ் கமென்ட் பெட்டி சீண்டுவார் இன்றி காலியாக கிடக்கும், மொக்கை கவிதை
(கவிதை என்கிற பதத்தையே கேவலப்படுத்தும் வகையில் இருக்கும்...) ஒன்றின் கீழ் ஆகோ ஓகோ என புகழாரம் மின்னிக்கொண்டிருக்கும்.அத்தகைய கமென்ட்களை பார்க்கும் போது அவர்களை பொடனியிலேயே அடிக்க வேண்டும் போல தோன்றும் :) , சில நல்லவய்ங்க செம மேட்டர எழுதி வச்சுருப்பாய்ங்க கீழ பார்த்த ஒன்றிரண்டு கமென்ட் இருக்கும் ,இல்லை ஒரு கமென்டும் இருக்காது !

பதிவுலகில் பதிவை முழுமையாக படித்து விட்டு கமென்ட் இடுபவர்கள் குறைவென்றே நம்புகிறேன் . இவர்கள் Skimming, Scanning, Skipping என்று பதிவை பர பர வென பயணிப்பார்கள் ... அதேமாதிரி நீ எனக்கு கமென்ட் இட்டால் நான் உனக்கு இடுவேன் என்ற சம்பிரதாய கோமாளித்தனம் கொண்ட நபர்கள் அதிகம் உலவுகிறார்கள். நாம் அவர்களை புகழ்ந்தால் பதிலுக்கு நம்மை புகழ்வார்கள்... (சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன :) 

என்ன மாற்றம் வேண்டும் ???

(என் கருத்து:)

எழுதுகோல் தெய்வம்... இந்த எழுத்தும் தெய்வம் என்று பாரதி சொல்லி இருக்கிறான் !! எழுதுகிற ஒவ்வொருவனும் எழுத்தை தெய்வெமன மதித்தால்
எழுத்து தெய்வம் தன் ஆசியை கொடுக்கும். தெளிவு மதியோடு தெள்ளத்தெளிவான நடையில் எழுத்து எழுதுகிறவனிடமிருந்து ஜனித்துதிக்கும் !

சில சமூகம் சார்ந்த விசயங்களை பலர் முன்னிலையில் தன் கருத்தாக வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்வு,ஆராய்ச்சி இதெல்லாம் அவசியம் என நம்புகிறேன்.

(கமென்ட்கள் பற்றி...)

டெம்ப்ளேட் கமென்ட் கலாச்சாரம் மீது எனக்கு அளவு கடந்த ஆதங்கம் உண்டு !!

பதிவை முழுசாக வாசிக்காமல் கமென்ட் இடுதல் தவறு

மொக்கைத்தனமான எழுத்துக்களையெல்லாம் புகழ்ந்து கொட்டி அந்த மொக்கை மனிதர்களை அதிகம் எழுத வைக்கும் செயல் ஆச்சர்யமாக உள்ளது...

சுபத்ரா - சுபத்ரா பேசுறேன் 

வலைப்பதிவுகள் டையரிக்குறிப்புகள் போலத்தான். என்ன, டைரியில் எழுதினால் பெர்சனலாக வைத்துக்கொள்ளலாம். இல்லை, நமக்கு வேண்டியவருக்கு மட்டும் படிக்கக் கொடுக்கலாம். வலைப்பதிவுகள் மற்றவர்கள் படிப்பதற்காகவே எழுதப்படுபவை. கூகிள் ஏற்படுத்தித் தந்திருக்கும் இந்தக் கட்டற்ற இலவசச் சேவையை யார் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் எழுத வேண்டும் என்னும் தீராத ஆசையுள்ளவர்கள் தங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை வலைப்பூக்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். 

அவ்வப்போது போட்டிகளை நடத்தி மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகின்றனர். சிலர் தீவிர சமூக நலப் பிரச்சனைகளை ஆராய்ந்து பின்னூட்டங்களின் மூலம் விவாதம் செய்கின்றனர். இது போக சமையல், அழகு, மருத்துவக் குறிப்புகள், புத்தக, சினிமா விமர்சனங்கள் எனத் தமக்கு ஆர்வம் உள்ள விஷயங்களைப் பதிவேற்றுகின்றனர். சிலர் கன்னாபின்னா என்று சண்டையும் போட்டுக்கொள்கின்றனர். என்னைப் பொறுத்தவரை ஜாலியாக மனதிற்குப் பிடித்தவற்றை எழுதிவைப்பதும் பிறர் அவற்றைப் படித்துப் பின்னூட்டமிடுவதும் வலைப்பூக்கள் நமக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய stress releasing factor.

நாளைய பதிவில் 

கே.ஆர்.பி.செந்தில்
ஹாரிபாட்டர் 
சசிகலா 
ராம்குமார் 

இன்றைய வலைசரத்தில் 

24 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஒன்று

திடிரென்று ஒரு எண்ணம் சமகால பதிவுலகம் பற்றி பதிவர்கள் என்ன நினைகிறார்கள். அனைவரும் கூறுவது போல் நிஜமாகவே பதிவுலகம் சோம்பிவிட்டதா? அல்லது முழுக்க முழுக்க பேஸ்புக்கில் தஞ்சம் புகுந்துவிட்டதா? எழுத ஆள் இல்லையா அல்லது படிக்க ஆள் இல்லையா என்றெல்லாம் எழுந்த கேள்விகளுக்கு சக பதிவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என்று நினைத்து என்னால் தொடர்புகொள்ள முடிந்த பெரும்பாலான பதிவர்களைத் தொடர்பு கொண்டேன். 

அலுவல் காரணமாக சிலரால் மட்டும் பதில் தர இயலவில்லையே தவிர முப்பதிற்கும் மேற்பட்ட பதிவர்கள் தங்கள் பார்வையை பதிவு செய்து எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் மிக்க நன்றி. நம் சக பதிவர்களுடைய பார்வைகள் இந்த வாரம் முழுவதும் இங்கு பதிவு செய்யப்படும். ஒரு ஆரோக்கியமான விவாதகளமாக இந்த வாரம் அமைய வேண்டும் என்பது எண்ணம். 

இனி பதிவர்களின் பார்வைகள்...!           

வெற்றிவேல்
iravinpunnagai.blogspot.com 

இன்றைய தமிழ் பதிவுலகம் ஆரோக்கியம் இல்லாத மாதிரி. தான் எனக்கு தோன்றுகிறது. வளர்ந்த பதிவர்கள் எம்மைப் போன்ற வளரும் பதிவர்களை வழி நடத்தவில்லை. தவறுகளை சுட்டிக் காட்டவில்லை. மனதார பாராட்டுவதிலும் கஞ்சத் தனம். வழங்கும் கருத்திலும் ஆகா அருமை என்று அதிலும் கஞ்சத் தனம். அதையும் படித்து போடுகிறார்களா அதுவும் கிடையாது... பெரும்பாலும் குழுவாகவே செயல் படுகிறார்கள்....

*****
குடந்தையூர் சரவணன் 

இணையம் தந்திருக்கும் மேடை இது.இவர் தான் எழுதலாம் இதை தான் எழுதலாம் ஆசிரியரின் நிபந்தனைக்கு உட்பட்டது என்றெல்லாம் எல்லை வகுக்காமல், எழுத நினைக்கும் யாரும் எழுதலாம் யாரும் கருத்து சொல்லலாம் என்ற சுதந்திரத்தை தந்திருக்கும் உலகம் இது 

பத்திரிகைகளுக்கு அனுப்பி காத்திருந்த காலங்கள் போய் எழுதிய மறு நிமிடமே பதிவேற்றி அதற்கான கருத்துரைகளை உடனே பெறும் நிலை என்பது  இங்கே ஒரு வரப்ரசாதம்.  சிவப்பு கம்பளமிட்டு வரவேற்று படைப்புகளை உலக அரங்கில் காட்சிக்கு வைத்து அழகு பார்க்கிறது இப்பதிவுலகம்.

ஒரு பதிவு பாராட்டப்படும் போது எழுதியவருக்கு அடுத்து எழுதும் ஆர்வம் பிறக்கிறது இவர் எதை எழுதுவார் இவரது எழுத்தில் இந்த பிரச்சனை எப்படி பார்க்கபடுகிறது என்று படிப்பவருக்கும்  ஒரு ஆர்வம் இருக்கிறது.எழுதுபவரை வாசகர் ஆக்குவதும், வாசகரை எழுத்தாளர் ஆக்குவதும் இங்கே சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கும் சாதனை என்றால் அது மிகையல்ல.

ஆண்டிபட்டியில் எழுதுபவரை அமெரிக்காவில் இருப்பவரும் படித்து ஊக்கபடுத்தும் விந்தையும் இங்கே காணலாம். முகமறியாமலே எழுத்துக்களால் கை குலுக்கி நட்பையும் வளர்க்கலாம் 

நேற்று வந்த சினிமாவுக்கும் இங்கே சுட சுட விமர்சனம் தர,பெற முடியும் சமையலறையில் செய்யப்பட்ட சமையலும் இணைய மேடையில் எழுத்து எழுத்து சுவையின் மூலம் காட்சிக்கு வைக்கபடுகிறது.சந்தோசத்தையும் துக்கத்தையும் பரிமாறி கொள்ள முடிகிறது. சமூகத்தில் நடந்த அநீதியை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் நன்மையை ஆராதனை செய்யவும் கால நேரம் பார்க்காமல் செய்ய முடிகிறது. நேற்றைய அரசியல் நிகழ்வும் இன்றைய விமர்சனங்களால் விளாசப்படுகிறது. இருந்தாலும் கலாய்ப்பு கேலி கிண்டல் என்று விசயமே இல்லாமல்  தேற்றப்பட்ட சில பதிவுகள் அங்காங்கே காணப்படுவதுண்டு. அதில் சில ரசித்து சிரிக்க வைக்கும்.  மற்றும் சில எரிச்சல் படவும் வைக்கும். 

தமிழ் பதிவுலகம் சமூக அக்கறையுடன், மனிதத்தை வளர்க்கவும் மனிதாபிமானத்தை போதிக்கவும் நல்லவற்றை உலகுக்கு அறிவித்து பொல்லாததை புறந்தள்ளி நசுக்கி விடவும் ஏற்ற வலிமை மிகுந்த ஊடகமாக ஆகியிருக்கிறது. கையில்கிடைத்திருக்கும் கருங்கல்லை அழகான சிற்பம் செய்ய போகிறோமா அல்லது கல்லாகவே பார்த்து கொண்டிருக்க போகிறோமா என்பது நம் கையில் இருக்கிறது   

முக  நூல் வந்து பதிவுலகின் கவனம் திசை திரும்ப வைத்திருக்கிறது. என்பதை மறுப்பதற்கில்லை.இருந்தாலும் நாடகத்தை சினிமா அழித்து விட முடியாத போது சினிமாவை டிவி அழித்து விட முடியாத போது இது மட்டும் அழித்து விட முடியுமா என்ன.  

பாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் சாப்பாடு அவசர உலகுக்கு ஏற்றது தான். இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது ஒரு அழகுணர்ச்சி இருக்கிறது. அதற்கு ஈடானது தான் இந்த தமிழ் பதிவுலகம் 

நம் எழுத்துக்களால் படிப்போரின் இதயம்  நிறைப்போம் வாருங்கள் பாரினில் மனிதம் வளர்ப்போம் வாருங்கள் 

நாளை நமதாகட்டும் 
வருங்காலம் நம் வசமாகட்டும். 

*****

அவர்கள் உண்மைகள் 

ஆங்கில மொழிகளுக்கு அடுத்த நிலையில் ,இந்திய ரீஜன்ல மொழிகளிலேயே மிக அதிகமாக தமிழ் மொழியில்தான் வலைத்தளம்  இருக்கின்றது அது மட்டுமல்லாமல் உலகெங்கிலுமிருந்து அதிக நபர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது இன்னும் ஆரம்பித்த அதே நிலையில்தான் இன்னும் வளராமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை கதை கவிதை மற்றும் எனது தளத்தில் வருவது போல உள்ள மொக்கைகள்தான் அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் எந்தவொரு பதிவுகளும் சமுக பிரச்சனைகளை பற்றி பேசுவதாக தெரிவதில்லை அப்படி ஒருரிருவர் எழுதிச் சென்றாலும் அதற்கு மத மற்றும்அரசியல் முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறது


ஒரு பிரச்சனையே பேசும் போது அந்த பிரச்சனையை ஆராயமல் அது என் மதத்தை அல்லது என்னை சார்ந்த அரசியல் கட்சியை இழிவு படுத்துவதாக இருக்கிறது அதனால் அதை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்போம் என்ற நிலைதான் நம் பதிவுலகில் இருக்கிறதே தவிர அந்த பிரச்சனை  நம் சமுகத்தை உண்மையில் எந்த அளவில் பாதிக்கிறது என்ற உண்மை நிலையை ஆராய முற்பட முயல்வதில்லை.


சமுக பிரச்சனைகளை உணர்வுகளை வளர்ச்சியைப் பற்றி பேசாத எந்தவொரு பதிவும் என்னைப் பொறுத்தவரை குப்பையே. அந்த நிலமை முற்றிலும் மாறுபட வேண்டும். அது மாறுமா என்பது ஒரு கேள்விக் குறியே...

-----------------------------------

இன்னும் நிறைய எழுதாலாம்  சொல்லலாம் பதிவின் நீளம் குறிட்து கட்டுபாடு இருப்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.. இது பற்றி ஒரு முழுப் பதிவு விரைவில் வெளியிடுகிறேன்

அன்புடன்

மதுரைத்தமிழன்
*****
இம்ரான் மூஸா - ஆத்மா

காத்திரமான படைப்புக்களை காட்டிக் கொடுப்பதால் பதிவுலகம் விலைமதிப்பிட முடியாத ஒன்றாகிவிட்டது. பதிவுலக நட்பானது பதிவர்களின் சின்ன சின்ன ஒன்றுகூடல்கள் மூலமாக திருவிழாவாக மாறியிருப்பது எதிர்காலத்தில் மிகச் சிறந்த படைப்புக்களுக்கு உரமிடும் என்பதுமட்டுமல்லாமல் அறிமுக பதிவர்களுக்கு சிறந்த களமமைத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்று வலைச்சரம், பதில் போன்றவற்றின் பணி மிகவும் பாராட்டப்படவேண்டியது. மதம், கடவுள் கொள்கைகள், மூடநம்பிக்கைக்களை கழைதல் போன்றவற்றில் அநாகரீமான விவாதங்களும் வார்த்தைப் பிரயோகங்களும், முக்கியமாக பெயரில்லாமல் வந்து கருத்திடுதலும் தொடர்வது கவலையே

முகஸ்த்துதிக்கான பின்னூட்டங்கள் வேண்டவே வேண்டாம், மேலும் பரபரப்புக்காகவும், வலைத்தள தர வரிசைகளின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும்  பதிவிடுபவர்கள் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டினால் நன்று.

நன்றி
-ஆத்மா-

நாளைய பதிவில் 

கோவைஆவி 
கே.ஜி.கௌதமன்    
விஜயன் துரைராஜ் 
ராஜபாட்டை ராஜா 

வலைசரத்தில் எனது இன்றைய பதிவு... 


திடங்கொண்டு போராடு என்னும் நானும் பதிவுலகமும் - 1


17 Mar 2014

கொண்டையும் மீசயும் - சிறுகதை

அம்மணமாக பம்புசெட்டின் மீது நின்று கொண்டிருந்த கொண்ட மெல்ல குதிக்கத் தயாரானான். 

'எலேய் செருக்கியுள்ளையலா, பேதியிலபோவானுவலா, சவத்துமூதியலா எவன் வீட்டு கிணத்த எவன்லே அசிங்கப்படுத்துரிய' அந்த வயக்காட்டில் எங்களைத் தவிர வேறுயாருமே இல்லையென்பதால் வெகுதூரத்தில் இருந்து கத்திய மீசயின் குரல் மிகத்துல்லியமாக எங்களை வந்தடைந்தது.

குதிக்கத் தயாரான கொண்டையால் தன்னை கட்டுப்படுத்தி நிற்க முடியமல் 'எலேய் மீச வண்டாம்ல ஓடுங்கள ஓடுங்கள' சொல்லிக்கொண்டே கிணத்தினுள் தொப்பென்று குதித்துவிட்டான், மீசையின் குரலைக் கேட்டு உசாராகியிருந்த நாங்கள் கிணத்தோர பைப்பைப் பிடித்தபடி மேலேறி ஓடுவதற்கு தயாரான சமயம் மீசயும் எங்களை நெருங்கியிருந்தான்.

'சொல்லிகிட்டே இருக்கேன், அந்தா ஒருத்தன் குதிக்கான் பாரு, அறுத்துவுட்டா தாம்ல இனி வரமாட்டிய..சின்னப்பயளுவலா',  

மீச அருகில் வந்துவிட்ட பதட்டத்தில் அவசரவசரமாக மேலேறினான் கொண்ட, 'எலேய் கொண்ட சீக்கிரம்வா... அறுத்ருவாராம்லே, அறுத்துட்டா என்னல பண்ணுவ' நேரங்காலம் தெரியாமல் கிண்டலடித்தான் முத்து. மீச கையிலிருந்த அருவாளை அப்போது தான் கவனித்தேன். பயம் இன்னும் அதிகமாகியிருந்தது. ஏற்கனவே மீசயைப் பற்றி கேள்விபட்டிருந்தாலும் அன்றுதான் அவனை முதல்முறையாகப் பார்கிறேன். வயல்வேலை பார்த்துப்பார்த்தே பளபளக்கும் கருத்தமேனிக்குச் சொந்தகாரனானவன். ஆறடிக்கும் குறையாத உயரம். வயது ஐம்பதுக்கும் மேல் இருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கும் MR வயலை கவனித்து வருகிறான்  Mr.மீச.

நாங்களனைவரும் தயாராயிருக்க, கொண்டைக்கோ அவனுடைய டவுசரை தேடக்கூட அவகாசம் தரவில்லை மீச, 'எலேய் ஓடுங்கல ஓடுங்கல வண்டாம்லெ', என்றபடி ஓடதொடங்கையில் கொண்ட கத்தினான் 'என் டவுசர கானோம்ல, எவனாது பாத்திங்களா' முத்து மெல்ல என் காதில் கிசுகிசுத்தான் 'கொண்ட டவுசர் என்கிட்டதான் இருக்கு, கொஞ்ச நேரத்துக்கு அம்மணமா திரியட்டும்'.  போனவாரம் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததை டீச்சரிடம் மாட்டிவிட்ட கொண்டையின் மீது இன்னும் கோவம் இருந்தது முத்துவிற்கு. 

'இன்னிக்கு ஒருத்தனுக்காது மார்க்கம் பண்ணாம விடமாடேன்ல' சாமக்கொள்ளைக்கு புறப்பட்ட கருப்பன் போலிருந்தார் மீச. எப்போதும் கொஞ்சதூரம் துரத்துவார், கொஞ்சம் பயங்காட்டுவார் அப்புறம் விட்ருவார் இதுதான் மீசயைப் பற்றி நான் கேள்விபட்டிருந்த தகவல்கள். ஆனால் இன்றோ அளவுக்கு அதிகமாய் சூடேறி இருந்தார். போதாக்குறைக்கு அவர் சொல்லச்சொல்ல கேளாமல் கிணற்றினுள் குதித்த கொண்டயும் அவனது அம்மணமும் அவரை இன்னும் கடுப்பேற்றி இருக்க வேண்டும். நிலைமை மோசமாகியிருந்தது. 

'எப்படியாவது வழுக்காம்பாறைய தாண்டிட்டோம்னு வையி, மீச என்ன அவன் அப்பனே வந்தாலும் பிடிக்க முடியாது, ஏலே மக்கா டவுசர எடுத்திருந்தா குடுங்கல' கொண்ட இப்போது எங்களையும் தாண்டி எங்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தான், மீசயும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான்.          

தென்காசி வாய்க்காபாலம் பகுதியில் மிகபெரிய கிணறு என்றால் அது MR கிணறு தான். பச்சைப்பசேல் வயல்வெளிகளுக்கு நடுவில் இருக்கும் அந்த கிணறு பார்ப்பதற்கு ஒரு பெரிய நீச்சல்குளம் போல் காட்சியளிக்கும்.

'வெளாடிட்டு MR கிணத்துக்கு போய் ஒரு குளியல போட்டாதாம்ல சுகமா இருக்கும்' வேண்டுமென்றே வகுப்பறைகளில் என் காதுபட பேசுவார்கள் என் நண்பர்கள். போதாகுறைக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் 'எலேய் நேத்து செம குளியலு, அந்த பம்புசெட் மேல இருந்து கொண்ட தலைகீழா குதிச்சான்பாரு, மூணு நிமிசத்துக்கு மேல வரலன்னா பாத்துகோயேன்' என்று முத்து ஆரம்பிக்க கொண்ட முழுவாண்டுத் தேர்வில் பாஸானது போல் பெருமைப்படுவான். 

'கொண்டைக்கு நீச்சலே தெரியாது, நான் தரையவே தொட்டாந்தேன் தெரியுமா, மண்ணு கூட அள்ளுனேன், கொண்ட சொல்லுல' கொண்டையை மட்டம் தட்டி பெருமை பீத்துவான் கோனு. 'எப்படி அளக்கான் பாரு, ஏ உனக்கு நிலா நீச்சல் தெரியுமாடே, உள் நீச்சல், வட்ட நீச்சல்.. சும்மா பேசாத என்ன..'  பதிலுக்கு கோனை வம்புக்கு இழுப்பான் கொண்ட... இப்படி நீண்டு கொண்டே போகும் பேச்சின் பாதியிலேயே அடக்க முடியாத அழுகையுடன் சேர்ந்து வரும் கோவத்துடன் எழுந்து விடுவேன் நான். இவர்களுடன் கிணற்றுக்குப் போக முடியவில்லை என்பதையும் தாண்டி எனக்கு நீச்சல் தெரியாது என்பது தான் என் கோபத்திற்குக்கான முக்கிய காரணம்.  

'ஏ மக்கா இப்ப எதுக்கு கோவபடுற' நான் எதற்க்குக் கோபப்படுகிறேன் என்று தெரிந்தாலும் வேண்டுமென்றே கேட்பான் கொண்ட.

'நீயும் வேணுமின்னா அடுத்த வாரம் வாயேன்.. நீ தான் சமஞ்சபுள்ள கணக்கா வீட்டுகுல்லையே இருக்க'

'எனக்கு நீச்சல் தெரியாதுல்லா'

'அதுகென்ன, நாங்க இருக்கமுல்லா..' சூடேத்துவான் கோனு 

'அம்மா திட்டுவாங்க, எனக்கு நீச்சல் தெரியாது, கிணதுக்குன்னா விடவே மாட்டாங்க, நான் வர மாட்டேன்'      

'வேணா அம்மாக்கு தெரியாமவா. MR கிணத்துக்கு போலாம். ஞாயித்துகிழம பள்ளியோடம் லீவுதான, முத்து வீட்டுக்கு வா அங்கருந்து போவோம்' இப்படித்தான்  மெல்ல என் ஆசையைக் கிளப்பிவிட்டார்கள்.

வாய்க்காபாலம், கொலையே செய்தாலும் கண்டுபிடிக்க நாலுநாள் தேவைப்படும் ஊரின் ஒதுக்குபுறம். அங்கிருந்து கீழிறங்கி வழுக்காம்பாறையை கடந்து வயல்வெளிகளினுள் நுழைந்தால் பத்து நிமிட நடையில் MR கிணறு. சிற்றாறு இந்த இடத்தைக் கடக்கும் போது மட்டும் இதன் பெயர் வழுக்காம்பாறை. இங்கிருக்கும் பாறைகளின் மீது எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருப்பதால் இவை அனைத்தும் நல்ல பாலிஷ் செய்தது போல் வழுவழுவென்று இருக்கும். அந்தபாறையில் ஓவென கத்திகொண்டே வழுக்கி விளையாடுவதில் எங்களைபோல் சிறுவர்களுக்கு அப்படியொரு ஆர்வம். இன்னும் சொல்லபோனால் எங்கள் ஊருக்கு இயற்கை அமைத்துக் கொடுத்த கிஸ்கிந்தா இந்த வழுக்காம்பாறை. இங்கும் சில இடங்களில் ஆழமும் சுழித்துச் செல்லும் நீரின் வேகமும் அதிகமாய் இருக்கும்.

முதல்முறையாக MR கிணறில் குளிக்கப் போகிறேன். கிணற்றினுள் இறங்கும்முன்  'அம்மாக்கு தெரியாம ஆத்துக்கு கிணத்துக்குலா போய் குளிக்கக் கூடாது, தண்ணிக்கு பகை தெரியாது' என்றெல்லாம் மிரட்டியிருந்த அம்மாவின் எச்சரிக்கை காதுக்குள் கேட்டபோதும் நண்பர்கள் கொடுத்த தைரியம் இதோ முதல் முறை நானும் கிணத்தினுள் இறங்கப் போகிறேன். 

'கொண்ட அவனப் பாத்துக்கோ, நான் வந்ததும் நீ போ' என்றபடி சுழற்சி முறையில் என்னை பார்த்துக் கொண்டார்கள். பம்புசெட்டின் மீதிருந்து குதிப்பதும், விதவிதமாக ஜாலங்கள் செய்வதும் என பலவித வித்தைகள் காட்டிகொண்டிருந்தார்கள். நானோ கிணற்றின் ஒரு மூலையில் இருந்த PVR பைப்பைப் பற்றிக்கொண்டு அவர்களையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

'லேய் அடுத்ததடவ வரும்போது ஒரு கயிறும், லாரி டயரும் எடுத்துட்டு வரணும்' என்றபடியே என்னை நோக்கி நீந்தி வந்த கொண்ட 'நீச்சல் ஒன்னும் பெரிய விசயமில்ல மக்கா, சீக்கிரம் கத்துகலாம்' என்றபடி நம்பிக்கையூட்டினான்.

'ஆமா இது யாரு கிணறு, நம்மள ஒன்னும் சொல்லமாட்டாங்களா' என்று நான் கேட்ட போது தான் மீசயின் வரலாறை எடுத்துவிட ஆரம்பித்தார்கள் என் நண்பர்கள். அப்போதே கொஞ்சம் டரியலாகி இருந்தாலும், நான் இரண்டாம் முறையாக இங்கு வருகையிலேயே மீசயின் தரிசனம் கிடைக்கும் என்று துளி கூட நினைத்துப் பார்க்கவில்லை. தரிசனம் என்ன தரிசனம் இதோ உருமா கட்டாத கருப்பனாக எங்களைத் துரத்திக் கொண்டுள்ளான் இந்த மீச.  

மீசயிடம் சிக்குவது கூட எனக்கு பெரிய விசயமாய்த் தெரியவில்லை. எங்கே என் அம்மாவுக்கு தெரிந்துவிடுமோ என்று நினைத்தபோது என் ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமாகி இருந்தது. 

வயக்காட்டில் இருந்து வழுக்காம்பாறையினுள் இறங்குவதற்கு கிட்டத்தட்ட பத்தடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். காய்ந்த இலைச்சருகுகள் மற்றும் களிமண் தரை என்பதால் தலைகீழாகக் குதித்தாலும் அடிபடாது. எங்கள் வேகத்துடன் மீசையால் ஈடு கொடுக்க முடியவில்லை. வழுக்காம்பாறையை நெருங்கி விட்டோம். ஆற்று நீர் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றை நெருங்க நெருங்கத்தான் எனக்கு நீச்சல் தெரியாது என்ற விசயமே எங்களுக்கு உரைக்கத் தொடங்கியது. அதற்குள் எங்களுடன் வந்த பாதிபேர் ஆற்றினுள் இறங்கி நீந்தத் தொடங்கியிருந்தார்கள்.

நானும் முத்துவும் கொண்டையும் நின்றுவிட்டோம். மீசை பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் சப்தம் ஆற்று நீரின் சலசலப்பு, குளிர்ந்த காற்று, மயான அமைதி இவை அனைத்தும் விடாது எங்களை பயமுறுத்தத் தொடங்கியிருந்தது. 

''கொண்ட இப்போ என்ன பண்ண'  வருத்ததுடன் கேட்டான் முத்து.

'பொறு ஏதாது பண்ணுவோம், இல்லைனா சுன்னத்தான்' 

'எலேய் நீ தண்ணி உள்ள குதி. நானும் முத்துவும் உன்ன எப்படியாவது அங்க கொண்டு போயிருதோம். நீ கைய கால எதையும் அசைக்காத, ஆனா தலைய மட்டும் தண்ணிக்கு வெளிலையே வச்சிக்கோ' என்று கூறிக்கொண்டே சடாரென்று என்னை நீரினுள் தள்ளிவிட்டான் கொண்ட. அவனுள் எப்படி அப்படியொரு வேகம் வந்தது, முத்துவும் அவனும் என்ன செய்தார்கள் எதுவும் தெரியவில்லை ஆனால் அடுத்த நொடி எதிர்பக்கம் இருந்த பாறையில் கிடந்தோம். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. கொஞ்சம் தண்ணீரைக் குடித்திருந்தேன்.

'குண்டன் பொணொம் கணம் கணக்கான் பாரு' என்றபடி கொண்டையும் என்னருகில் படுத்துவிட்டான். மீச இந்நேரம் நீருக்குள் இறங்கியிருந்தான்

'செத்தோம் எலேய் கொண்ட உங்க அய்யாட்ட சொல்லி ஆயின்மெண்ட் வாங்கிகோல' என்றபடி முத்து சிரிக்க என்னாலும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினேன். மூவருக்கும் வேர்த்துக் கொட்டியது, பலமாக மூச்சு வாங்கியது. 

மீச வன்ட்டான் எந்தி எந்தி என்றபடி ஓடத்தயாராகும் போது, திடிரென்று மீசயின் செயல் மாறியிருந்தது. கையில் இருந்த அருவாளை கீழே போட்டுவிட்டு தண்ணீருக்குள் இருந்த கூழாங்கற்களை பொறுக்கிக்கொண்டிருந்தான். கல்லடி படுவதற்குள் அவன் பார்வையில் இருந்து விலக வேண்டும் என்றெண்ணி மீண்டும் ஓடத்துவங்க, அவனோ எங்களுக்கு நேர் எதிர் திசையில் தான் பொறுக்கிய கற்களை எறிந்து கொண்டே இருவரைத் துரத்த ஆரம்பித்திருந்தான். நானும் முத்துவும் நொடிப்பொழுதும் தாமதியாமல் அவசரமாக கொண்டையின் கண்களை மூடினோம். 

மீச துரத்திக் கொண்டிருந்த திசையில் ஒரு ஆணும் பெண்ணும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள் அம்மணமாக