22 Feb 2013

ஆதிபகவன் - கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் !



ழக்கமாக ஜெயம் ரவி படங்களைப் பார்ப்பதே அரிது, அதிலும் அரங்கில் சென்று பார்ப்பது என்பது மிக அரிது. இருந்தும் அமீர் என்னும் மாயபிம்பம் விரித்த மாய வலையில் மாயமாய் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கும் பொழுது அவ்வ்வ்வ்வ்வ்.... 


பாங்காங்கில் பிழைபிற்காக நுழைகிறது நாயகன் குடும்பம். தன்னை ஏமாற்றிய உலகத்தை, ஏமாந்த பொழுது தன்னுடன் நிற்காத உலகத்தை , பணத்தால் வெல்ல வேண்டும் என்று துடிக்கும் நாயகன். அவனை சுற்றி நடக்க ஆரம்பிக்கும் விஷயங்கள் என்று திரைக்கதை பயணிக்கத் தொடங்குகிறது

டம் ஆந்திராதாய்லாந்து(பாங்காங்), மும்பைகோவா என்று பல திருபங்களுடன் நம்மை திருப்பு திருப்பு என்று திருப்புகிறது. தலை சுற்றல்வாந்திமயக்கம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்தப் படத்தை தவிர்க்கவும். அல்லது மருத்துவ ஆலோசனைக்குப் பின் படம் பார்க்கவும்காரணம் படத்தில் அவ்வளவு திருப்பங்கள் உள்ளது
 

ண்பன் மணிகுமரனுடன் படம் பார்க்க சென்றிருந்தேன். குறும்படத்துறையில் எடிட்டராக உள்ளான். "எடிட்டிங் சரியில்ல, ஒளிபதிவு சரியில்ல" என்று ஒவ்வொரு குறையாக சொல்லிக் கொண்டே வந்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கிக் கொண்டிருந்த காட்சிகளை அப்படியே விட்டுவிடுவது தானே புது டெக்னிக் இது கூட புரியாமல் இருக்கிறான்.  

பாங்காங்கில் விபச்சாரம் அதிகம் என்று கேள்விபட்டுள்ளேன், இந்தப் படத்தில் அதை மிக தத்ரூபமாக காட்டியுள்ளர்கள். பார் கேர்ளாக இருக்கும் நமது கதாநாயகியை வைத்து விபச்சாரம் செய்ய  முற்படுகிறான் வில்லன் போல் வந்து செல்லும் ஒரு வில்லன்தன் அனுமதி இல்லாமல் தன்னை கற்பழிக்கப் பார்ப்பவனிடம் இருந்து தப்பிச் செல்கிறாள் நம் கதாநாயகி. அவளை  வில்லனின் அடியாட்கள் துரத்துகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமது கதாநாயகன் ஆதி அவர்களை அடித்து துவைத்து துவம்சம் பண்ணவில்லை, இங்கே தான் இருக்கிறது ட்விஸ்ட். அவள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று விட்டுவிடுகிறான்

சிறிது நேரம் கழித்து நட்ட நடு இரவில் நாயகன் தனியாக காரில் பயணிக்கிறான். அப்போது நடு வழியில் நின்று கொண்டிருக்கும் ஒரு கார் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கிறது. அது ஆடும் ஆட்டத்தைப் பார்த்து இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்டால் "சீ நீங்க ரொம்ப மோசம் பாஸ்". இந்த இடத்தில் தான் இயக்குனர் அமீர் மிக முக்கியமான திருப்பம் வைத்துள்ளார்

தாநாயகியை உள்ளே கட்டிபோட்டு விட்டு கடத்தி வந்த தடிமாடுகள் காற்று வாங்கப் போய்விட தப்பிக்கும் வழிதேடி வண்டியை உள்ளிருந்து உதைத்துக் கொண்டிருப்பார் நாயகி. அவர் உதைக்கும் உதையில் வண்டி முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கும், உடனே யாருக்கோ ஆபத்து, 'யாருக்கோ என்ன யாருக்கோ', நாயகிக்கு ஆபத்து என்று புரிந்து புஜபல பராகிரங்களுடன் கிளம்பி விடுவார்இந்த இடத்தில ஒரு சண்டைக் காட்சிசண்டைக் காட்சியை இருளில் புதுமையான கோணத்தில் அமைதுள்ளார்கள். ஹீரோ அடியாள் என்று எவ்விதமான பேதமும் இல்லாமல் அனைவருக்கும் இருளுக்கு ஏற்ற பளபளப்பான கருப்பு ஆடைகள் கொடுத்து யார் யாருடன் சண்டையிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கா வண்ணம் வெகு சாமர்த்தியமாய் அமைதிருப்பார்கள். கண்டுபிடிப்பவர்களுக்கு லட்ச ருபாய் பரிசு கொடுக்கலாம். பல அற்புதமான கேமராக் கோணங்களை உள்ளடக்கி அறிவுக்கு வேலை தரும் விதமாக அமைந்திருகிறது இந்த சண்டைக் காட்சி.

டம் முழுவதும் நாயகன் குடிக்கிறார், நாயகி ஊதுகிறார், தமிழ் கலாசாரக் காவலர்கள் என்று தன்னை முன்னிறுத்துவது வெறும் சொல்லளவில் மட்டும் தானோ என்னவோ. இதில் ஒரு மிகப் பெரிய காமெடி, சிகரெட்டின் ப்ரண்ட் நேம் வரும் பொழுது அதை ப்ளர் ஆக்குபவர்கள் அந்த சிகரெட்டையும் ப்ளர் ஆக்க வேண்டியது தானே.   

துவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் வந்திராத வசனங்கள், அதற்காவே இந்தப் படத்தை இன்னுமொரு முறை மறுபடியும் பார்க்கலாம்.

1. எவ்ளோ வேகமா ஓடுரோம்ன்றது முக்கியம் இல்ல, யாரு வேகமா ஓடுராங்கன்றது தான் முக்கியம்.
2. எனக்கு வாழ்கையில எதுவுமே முக்கியம் இல்ல, பணம் தான் முக்கியம்.
3. ஒன்னு இந்த இடத்துல அந்த பகவான் புணமாகனும், இல்ல இந்த ஆதி புணமாகனும்         

(வசனங்களில் பிழை இருக்கலாம்) 

வாரேவா இது போன்ற பல வசனங்களை படம் நெடுகிலும் அள்ளித் தெளித்திருக்கிறார். வசன உழைப்பில் புது முயற்சி. அதை விட புது யுக்தி வசன உச்சரிப்பில் வெளிபடுகிறது. மதிய உணவு இடைவேளைக்குப் பின் "ஐன்ஸ்டீனின் இயற்பியல் கோட்பாடுகளை" அறிவியல் வாத்தியார் விளக்கும் பொழுது எவ்வளவு இதமாக இருக்கும். அதே போல் தான் ஒவ்வொருவரும் வசனம் பேசுகிறார்கள்

அதிலும் ஜெயம் ரவியின் வசன உச்சரிப்பு மார்வலஸ். நாம் இயற்பியல் கோட்பாடுகளில் லயித்து இருக்கும் நேரம், அந்த வாத்தியார் "வெளியே போடா நாயே" என்று கத்தினால் கூட தேன் பாய்வது போன்று இருக்குமே அதேபோல இயல்பாக கோவப்படுகிறார்கள் நமது கதாபாத்திரங்கள். "ஒன்னு இந்த இடத்துல அந்த பகவான் புணமாகனும், இல்ல இந்த ஆதி புணமாகனும்" என்று ஜெயம் ரவி கத்திக் கதறும் பொழுது ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று அருகில் இருந்தவன் அந்த வசனத்திற்கு தாளம் சேர்த்துக் கொண்டிருந்தான். குட் காம்பினேசன்.           

நாயகிக்கு வசன உச்சரிப்பு சுத்தமாக வரவில்லை, உதட்டசைவு என்பது பெயரளவில் கூட இல்லை. அநியாயத்திற்கு தமிழ் உச்சரிப்பை கொல்லு கொல்லு என்று கொலையாய்க் கொல்கிறார். இடைவேளைக்குப் பின் படம் மும்பையில் பயணிக்கத் தொடங்குவதால், ரசிகர்கள் நலன் கருதி ஹிந்தி உதட்டசைவுகளுக்கு தமிழ் டப்பிங் இருக்கும் என்று மைக்ரோ எழுத்தில் போடுகிறார்கள். மிஸ்டர் அமீர் சார் படம் மொத்தமுமே அப்படித்தானே உள்ளது, இதை ஆரம்பத்திலேயே போட்டிருக்கலாம். டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் ஆதிபகவன் முழுவதும்

பாடல்கள் ஹா ஹா ஹா ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இருந்தும் தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பற்றி குறிபிட்டே ஆகவேண்டும். ஹாலிவுட் சினிமாக்களில் என்னதான் லாஜிக் மிஸ்டேக் வைத்திருந்தாலும் பாடல்கள் இல்லாமல் இருப்பதால் விறுவிறுப்பு குறையாமல் அல்லது குறைக்காமல் திரைக்கதையை நகர்த்திச் செல்வார்கள். இந்த விசயத்தில் நம் இயக்குனர்கள் பெரிதும் கோட்டை விட்டுவிடுகிறார்கள். படத்தில் பாடல் வரும்போதெல்லாம் நானும் மணிகுமரனும் லாஜிக் ஓட்டைகளைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம். இதை நாளைய இயக்குனர்கள் கவனத்தில் கொண்டால் அட்லீஸ்ட் அந்த ஒரு ஓட்டையையாவது அடைக்க முயற்சி செய்யலாம்.

ரண்டாவது பாதியில் வரும் திருப்பம் மட்டும் கொஞ்சம் வொர்த். அது தான் பகவான். படத்தில் ஜெயம் ரவி டபுள் ஆக்ட் என்பது காட்சிப்படுத்தப்பட்ட இடம் அல்லது காட்சிக்குள் கொண்டுவந்த இடம் சூப்பர். இருந்தும் ஒருவரின் பின்புலமும் சொல்லப்படாதது கொஞ்சம் உறுத்துகிறது. ஆதி, பகவான், ராணி, என்ற வலுவான கதாபாத்திரங்களுக்கு வலுயேற்ற மறந்துவிட்டார் நமது இயக்குனர். படத்தில் ஹீரோ என்று யாருமே கிடையாது. வரும் அனைவருமே வில்லன்கள் தான். அதனால் தானோ என்னவோ பலரும் நட்டாற்றில் கழற்றி விடப்பட்டு விட்டார்கள்


னது தங்கை முறையற்ற ஒருவனை காதலிக்கும் பொழுது அவளது கண்ணெதிரே அவனைக் கொன்றுபோடும் இடத்தில ஜெயம் ரவியின் நடிப்பு சபாஷ். சில இடங்களில் வசனமும், சில சில காட்சிகளும் சபாஷ். "நீ எல்லாம் என்னடா பெரிய கிரிமினல், உன்னோட பிரண்டு கூட என்ன மோப்பம் புடிச்சிட்டான், ஆனா உன்னால முடியல" என்று நாயகி சொல்லும் இடம் சூப்பர். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி சூப்பர். 'ஒருவேள தனித்தனி காட்சிகளாக பார்த்தால் வேணா புடிக்குமோ என்னவோ'.      

ந்திரவாலாக்கள்ஜெயம் ரவியின் முதல் பார்ட்னர், மத்திய மந்திரி, என்ற பல வில்லன்களையும் பக்குவமாய்காட்டி பின் அவர்களை உப்புகுச்சப்பாணி ஆக்கிவிட்டு பகவான் என்னும் வில்லனுக்கு அபிநயம் கூட்டி நல்ல சுருதி சேர்த்துள்ளார். அரவாணியாக வரும் பகவான் சிறப்பாக செய்ய முயன்றுள்ளார், காரணம் அவர் எதாவது ஒரு அபிநயம் பிடிக்கும் போதெல்லாம் வரலாறு அஜீத் கண்முன் வந்து செல்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் ஆதியாக வரும் ஜெயம் ரவியின் மீசையை பார்க்கும் பொழுது தடையறத் தாக்க அருண் விஜயின் நியாபகம் வந்துத் தொலைகிறது
  
டத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று பார்த்தால் காட்சிக்கு காட்சி இருக்கிறது. அனுபவமுள்ள இயக்குனருக்கு இதுவா அழகு. அதிலும் சூர்யா ஜீவா கார்த்தி என்று மூவருக்கும் சிறப்பான அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த இயக்குனாரால் ஜெயம் ரவிக்கு பெற்றுத் தர இயலாமல் போனது யார் போட்ட திருஷ்டி என்று தெரியவில்லை. காரணம் நல்ல கதைகளம் இருந்தும் பல பல இடங்களில் பயணிக்கும் திரைக்கதை கடைசிவரை கதையுடனும் நம்முடனும் ஒட்ட மறுக்கிறது.  

போரட்டகாரர்களுக்கு சில டிப்ஸ் 

1. ஆதிபகவன் - சில இந்து இயக்கங்கள் ஆரம்பித்து வைத்து விட்டன 
2. போலி பாஸ்போர்ட் தயாரிப்பவன் ஒரு கிறிஸ்டியன்
3. போலி சி.பி. ஆபீசர் ஒரு முஸ்லிம் 
4. பாங்காங் மக்கள் பௌத்தர்கள் 
5. பகவான் ஒரு அரவாணி 

யாராவது எதாவது செய்து படத்தை ஓட வைத்துவிடுங்கள். அல்லது உங்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து படத்தை திரையரங்கில் பாருங்கள், இல்லை இல்லை, நீங்கள் பார்த்தே ஆக வேண்டும். 


ஆதிபகவன் - கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். காரணம் யான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றே ஆக வேண்டும்.


பின்குறிப்பு : லேபிளில் சிரிப்பு என்று போட்டிருப்பதைப் பார்த்த பின்பும் நீங்கள் சிரிக்காவிட்டால் என் வலைபூ மீது கல்லெறியாதீர்கள், உடைவது உங்கள் மானிட்டராகத் தான் இருக்கும் :-)   

விளம்பரம் 

ஜோதிஜி எழுதிய டாலர் நகரம் புத்தகம் வாங்க நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும் அல்லது 9940229934 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.